ஆரோக்கியம் ஏற்பட அகல் விளக்கு ஏற்றுங்கள்

ஆரோக்கியம் ஏற்பட அகல் விளக்கு ஏற்றுங்கள்

தெய்வ வழிபாட்டிற்காக திருக்கோவிலுக்குச் செல்லும் பொழுது, அங்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். அகல்விளக்கு முதல் பழ விளக்கு வரை பலவித விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வார்கள்.

அகல்விளக்கு எனப்படும் சிட்டி விளக்கில், நெய் ஊற்றித் தீபம் ஏற்றினால் ஞானம் ஏற்படும்.

நல்லெண்ணெய் தீப விளக்கு ஏற்றினால் ஆயுள் அதிகரிக்கும்.

இலுப்பெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் சீராகும்.

விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால், சக யோகங்களும் வந்து சேரும்.

இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பது விளக்கு. இருள் மயமான சூழ்நிலையை மாற்றி, ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருவது இந்த ஜோதி வழிபாடு. அதனால் தான் ஜோதி ராமலிங்க சுவாமிகள், அணையா விளக்கு என்று வடலூரில் ஏற்றி வழிபட்டார். ஆலயங்களில் எல்லாம் சிவனுக்குப் பின்னால், பிம்ப விளக்கு ஏற்றுவதை பார்த்திருப்பீர்கள்