யுத்த குற்ற விசாரணை இனி படையினருக்கும்?

p

யுத்தத்தின் போது காணாமல்போனோர்கள் தொடர்பாக 50 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தத் தகவலை ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

காணாமல்போனோர் தொடர்பில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொழும்பில் காணாமல்போன 11 பேர் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவர் இன்று மீண்டும் ஒருமுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.