சிறுநீரக நச்சுக்களை போக்கும் பழங்கள்

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களே முக்கியம் பெறுகின்றது. இதன் மூலம் இந்த சிறுநீரகத்தை நாம் சாப்பிடும் பழங்கழை வைத்தே சுத்தம் செய்யலாம்.

சிறுநீரகம் நமது உடலில் மிக முக்கியமான பகுதியாகும். ஏனெனில் சிறுநீரகம் நம் உடலில் நச்சுக்களை சுத்தம் செய்யும் வடிகட்டியாக செயல்படுகிறது.

அப்படி கழிவு நீக்கம் செய்யும் நச்சுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.இதன் செயற்பாடு உடலில் சரிவர நடக்கவில்லை என்றால் உடல் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகும். அந்த வகையில் அது என்னென்ன பழங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பழங்கள்

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சை சிறுநீரக நச்சுத்தன்மைக்கு நீக்கி பொருளாக பயன் தரும் என கருதப்படுகின்றது.
இதில் சிறுநீரக வீக்கத்தைத் தடுக்கும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன.
சிவப்பு திராட்சையில் பல்வேறு வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
அவை சிறுநீரகங்களை உள்ளே இருந்து சுத்தப்படுத்தும்.
கூடுதலாக, சிவப்பு திராட்சையில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன.

பெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி

பெர்ரிகளில் ஸ்ட்ராபெர்ரி, குருதிநெல்லி, புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ஜாமூன் போன்றவை இருக்கின்றன.
இந்த பழங்களில் பலவிதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.
இவைகள் சிறுநீரக செல்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியின் அபாயத்தைக் குறைக்கிறது.
இதனால்தான் இந்த பழங்கள் சிறுநீரக நச்சுத்தன்மையில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

தர்பூசணி

சிறுநீரகத்தை நச்சு நீக்குவதில் தர்பூசணி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
இதில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
இதன் காரணமாக சிறுநீரக பாதிப்புகளின் அபாயத்தைக் குறைப்பதில் இந்த தர்பூசணி தண்ணீர் பயன்படுகிறது.
இதன் மூலம் தர்பூசணியில் உள்ள லைகோபீன் கலவை சிறுநீரக வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
தர்பூசணி சிறுநீரகத்தில் பாஸ்பேட், ஆக்சலேட், சிட்ரேட் மற்றும் கால்சியம் ஆகியவற்றை சமன் செய்கிறது.

மாதுளை

சிறுநீரகத்தை நச்சு நீக்குவதில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த பழம் சிறுநீரக பாதிப்பு அபாயத்தைக் குறைப்பதில் சிறப்பானது என மருத்துவர் பரிந்துரைக்கிறது.
மாதுளை சிறுநீரகத்தில் பாஸ்பேட், ஆக்சலேட், சிட்ரேட் மற்றும் கால்சியம் ஆகியவற்றை சமநிலைப்படுத்த உதவுகிறது.

இந்த பழங்களை தினமும் நம்மால் முடிந்தளவு சாப்பிடும் போது உடலில் மிகவும் முக்கியமான சிறுநீரகப்பகுதியை இது பாதுகாப்பாகவும் உறுதியாகவும் நச்சுத்தன்மைகளை சுத்திகரித்து வைக்கிறது.

ரூபா நட்டஈடு கோரி கடிதம் அனுப்பிய மனுஷ நாணயக்கார

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக , முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

முற்றிலும் பொய்யானது
இஸ்ரயேல் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்காக கையொப்பமிடுவதற்கு மனுஷ நாணயக்கார பணம் பெற்றுக்கொள்வதாக வசந்த சமரசிங்க முன்வைத்த கருத்துக்கள், முற்றிலும் பொய்யானது என இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்கார பொறுப்பில் இருந்த போது அதிகளவானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்பட்டதாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

மேலும் 14 நாட்களுக்குள் நட்டஈடு தொகையை வழங்காவிடின் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விசா கட்டுபாடுகளை நீக்கிய நாடு!

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது.

தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார்.

தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பின்னர் இலங்கை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி ரிலீஸ் தேதி லாக் பண்ணியாச்சு..

விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார்.

இவர் மட்டுமின்றி அர்ஜுன், ஆராவ், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் இன்னும் எடுக்கவேண்டியது உள்ளதாம். இதற்கான ஸ்பெயின் நாட்டிற்கு படக்குழு செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி தீபாவளிக்கு வெளிவருவது குறித்து உறுதியாக தகவல் வெளிவரவில்லை. ஆனால், தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விடாமுயற்சி படத்தை கண்டிப்பாக வருகிற தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வரவிருக்கும் காரணத்தினால் கண்டிப்பாக, அதே தேதியில் வெளிவரவிருந்த சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் Bloody beggar ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் லைகா நிறுவனத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகப்போகிறது என்று.

இலங்கையில் பட்டையை கிளப்பும் GOAT வசூல்

பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் GOAT. தளபதி விஜய், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என பலரும் இப்படத்தில் நடிக்க வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

இலங்கை வசூல்

உலகளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி நல்ல வரவேற்பை பெற்றுள்ள GOAT திரைப்படம் இலங்கையில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம். அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் இலங்கையில் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

முதல் நாள் ரூ. 1.5 கோடி வரை இலங்கை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்திருந்த GOAT திரைப்படம், இரண்டாவது நாளில் ரூ. 2 கோடி வரை வசூல் செய்து, மொத்தமாக ரூ. 3.5 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியுள்ளது.

வேட்டையன் ரிலீசுக்கு சிக்கலா?

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதே தேதியில் வருவதாக முதலில் அறிவிக்கப்பட்ட சூர்யாவின் கங்குவா படம் தற்போது வேட்டையன் உடன் போட்டியிட விரும்பாமல் தயாரிப்பாளரால் வேறு தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் வேட்டையன் படமே சொன்ன தேதிக்கு வருமா என்பது சிக்கலாகி இருப்பதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.

சிக்கல்
வேட்டையன் படத்தில் பல என்கவுண்டர் காட்சிகள் வருவதாகவும், அவற்றில் பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த உண்மை சம்பவங்கள் பற்றிய காட்சிகளுக்காக NOC வாங்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், அதற்கு தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அதனால் சொன்ன தேதியில் வேட்டையன் படம் வருமா என கேள்வி எழுந்து இருக்கிறது. இருப்பினும் படக்குழு அதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருவதாகவும் நிச்சயம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறி இருக்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகும் புதிய நிகழ்ச்சி..

விஜய் டிவி
சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது விஜய் டிவி. ஸ்டார்ட் ம்யூசிக், பிக் பாஸ், அது இது எது, நீயா நானா என பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை விஜய் டிவி வழங்கியுள்ளது.

இதில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா நானா என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நிகழ்ச்சி
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளனர். ஆம், விஜய் தொலைக்காட்சியில் புதிதாக கம்பெனி எனும் புதிய நிகழ்ச்சி வரவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவரான மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி எப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணவன் தயாரிப்பில் நடிக்கும் சிம்ரன்

90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளிவந்த மகான், கேப்டன், ராக்கெட்ரி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்

நடிகை சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவரின் தயாரிப்பில் நடிக்கும் சிம்ரன்
இந்த நிலையில் நடிகை சிம்ரன் தனது கணவரின் தயாரிப்பில் புதிதாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லோகேஷ் குமார் என்பவர் இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

திகில் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை சிம்ரன் கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. தி லாஸ்ட் ஒன் என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்திற்கான First லுக் போஸ்டரை சிம்ரன் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த போஸ்டர்..

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (35 தொடக்கம் 45) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கனடாவில் வாடகை மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

கனடா (Canada) முழுவதிலும் இணைய வழியிலான வாடகை மோசடிகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மோசடி தவிர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் இவ்வாறான 51 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, வாடகைக்கு விடுவதாக போலியாக சிலர் விளம்பரம் செய்து மோசடியான முறையில் பணம் பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை மோசடிகள்
இவ்வாறு மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கு வாய்மொழி மூலம் இனக்கப்பாடுகளுக்கு இணங்க கூடாது எனவும் ஆவண ரீதியான இணக்கப்பாடுகள் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விளம்பரம் செய்யப்படும் வீடு காலியானதா அது வாடகைக்கு விடப்படுகின்றதா என்பதை அறிந்து கொண்டதன் பின்னர் ஒப்பந்தங்களில் கையொப்பமிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிகுறி உடைய பெண்கள் மோசமானவர்களாம்

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.

இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.

இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.

சாணக்கிய நீதிபடி, தவறான மனநிலை மற்றும் மோசமான குணம் கொண்ட பெண்களை சில அறிகுறிகள் வைத்து கண்டுக் கொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது.

அந்த வகையில் சமூகத்தில் வாழும் மோசமான பெண்களை என்னென்ன அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

சாணக்கியரின் தத்துவங்கள்

1. மோசமான பெண்களிடம் லட்சுமியிடம் லட்சுமியின் அருள் இருக்காது. மாறாக அவர்களை பார்க்கும் போது ஒரு பொலிவு இல்லாமல் இருப்பார்கள். அத்துடன் சமூகத்தில் நடக்கும் மோசமான வேலைகளில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.

2. மோசமான குணமுள்ள பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் பழகுவார்கள். அத்தகைய பெண்களுக்கு பல ஆண் நண்பர்கள் இருப்பார்கள். துணை தவிர மற்ற ஆண்கள் விரிக்கும் காதல் வலையில் விழுந்து விடுவார்கள். இதயத்தில் ஒருவரை வைத்துக்கொண்டு மற்றொருவருடன் உறவு வைத்து கொள்வார்கள்.

3. சமூகத்தில் தவறான பழக்கங்களை தொடர்ந்து செய்யும் பெண்களின் கால்கள் பின்புறம் தடிமனாக இருக்கும். அத்தகைய பெண்களை முன்னோர்கள் வீட்டிற்கு அசுபம் என்பார்கள். மறுபுறம், காலின் பின்புறம் மிகவும் மெல்லியதாகவோ அல்லது வறண்டதாகவோ இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும்.

4. சுண்டு விரலும் மோதிர விரலும் தரையில் படாதவாறு இருக்கும் மோதிர விரல் கட்டை விரலை விட நீளமாக இருக்கும். இப்படியான பெண்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த பெண்கள் அவர்கள் இருக்கும் சூழ்நிலைக்கேற்ப நடத்தைகளை மாற்றிக் கொள்வார்கள். குறுகிய மனப்பான்மை இந்த பெண்களை கட்டுப்பாட்டில் வைப்பது கடினம்.
5. மோசமான பெண்களின் நெற்றி நீளமாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. நீண்ட வயிறு கொண்டவர்களாவும் இருப்பார்கள். கனமான இடுப்பு உள்ளவர்கள் தங்கள் கணவருக்கு அசுபமாக கருதப்படுகிறார்கள்.

6. ஒரு பெண்ணின் வயிறு ஒரு கடிகாரம் போன்ற அமைப்பில் இருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிப்பார்கள். பெண்களின் வயிறு தொடர்ந்து வளர்வது துரதிர்ஷ்டத்தின் அடையாளம் என சாணக்கியர் கூறுகிறார்.

50 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பேரதிஷ்டம் பெறப்போகும் இராசிக்காரர்கள்

திரிகிரஹி யோகம்: வேத ஜோதிடத்தின்படி ஒரு கிரகம் குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. மற்ற கிரகங்களுடன் கூட்டணி அமைக்கிறது.

அதன் தாக்கம் மனித வாழ்விலும் பூமியிலும் தெரியும். அதே சமயம் இந்த கலவை சிலருக்கு நல்லது. சிலருக்கு துரதிர்ஷ்டம். இப்போது கன்னி ராசியில் திரிகிரஹி யோகம் அமையப் போகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த யோகம் சந்திரன், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் கலவையாகும். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். ஆனால் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தின் தாக்கத்தால் பொருளாதார பலன்களையும் செழிப்பையும் பெறலாம். இந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம்.

கன்னி
இந்த ராசிக்கு திரிகிரஹி யோகம் பலன் தரும். ஏனெனில் இந்த யோகம் உங்கள் லக்ன வீட்டில் நடக்கப் போகிறது.
எனவே இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் காண்பீர்கள்.
உங்கள் செயல்திறனும் மேம்படும். குடும்பச் சூழலைப் பார்த்தால், உங்கள் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி இரண்டையும் காண்பீர்கள்.
உங்கள் பங்குதாரர் முன்னேற்றம் அடையலாம். தனியாக இருப்பவர்கள் திருமண செய்யும் வாய்ப்பை பெறலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் சாதகமாகும்.
ஏனெனில் இந்த யோகம் கோச்சார் குண்டலியின் ஒன்பதாம் வீட்டில் நடக்கப் போகிறது.
எனவே இந்த முறை நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம்.
உங்கள் நம்பிக்கையின் வலிமையால் நீங்கள் நிறைய சாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
உங்களின் கடின உழைப்புக்கு பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.
நீங்கள் குறுகிய அல்லது நீண்ட பயணம் செய்யலாம். சமய சுப காரியங்களிலும் கலந்து கொள்ளலாம்.
போட்டி மாணவர்கள் எந்த தேர்விலும் வெற்றி பெறலாம்.

மிதுனம்
திரிகிரஹி யோகம் உங்கள் பிள்ளைகளுக்கு நன்மையை கொடுக்கும்.
நீங்கள் சொத்து, வீடு அல்லது வாகனம் கூட வாங்கலாம்.
உங்கள் பணித் துறையில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள்.
உங்கள் மனம் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.
ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்புக்கு நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
நிதிக் கண்ணோட்டத்தில் நீங்கள் இந்த காலகட்டத்தில் நல்ல செல்வத்தைப் பெறுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிடரின் கணிப்பின்படி கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.
நியூஸ்18 தமிழ்நாடு இது தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை.
எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே.
எந்தவொரு தகவலையும் செயல்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கொல்கத்தாவில் மருத்துவமனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில், சஞ்சய் ராய் என்பவர் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும் என, விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, கொல்லப்பட்ட பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, சஞ்சய் ராய்க்கு எதிராக குற்றப்பத்திரிகையை மிகத் துல்லியமாகத் தயாரித்து வருவதாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

மரபணு மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம், கூட்டுப் பாலியல் வன்கொடுமை இடம்பெறவில்லை என்பதை மத்திய புலனாய்வு அதிகாரிகள் உறுதி செய்திருப்பதாகவும், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில், இதுவரை வேறு யாருக்கும் தொடர்பிருப்பதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 09-08-2024ஆம் திகதி மருத்துவமனையில் பெண் மருத்துவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதற்கு மறுநாள், தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவிற்குள் அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்று பிரபலமும் ஆனார். இதனால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்ற இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். பின், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது, அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அதிதி ஷங்கரின் கவனம் தற்போது தெலுங்கு சினிமா பக்கம் திரும்பி உள்ளது. அதன்படி அவர் விஜய் கனகமெடலா இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அதிதிக்கு தெலுங்கு மொழி சரளமாக பேசத் தெரியும் என்பதால் இவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

பாக்கியலட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்.

தற்போது கதையில் ராமமூர்த்தி அவர்களின் இறப்பு சம்பவ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாக்கியா தான் தனது கணவருக்கான இறுதிசடங்கை செய்ய வேண்டும் என கூற அவரும் செய்ய தொடங்குகிறார்.

இந்த வாரம் முழுவதுமே சோகத்தின் உச்சமாக தொடர் உள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து கோபி பாக்கியா மீது மேலும் அதிக வெறுப்பை காட்ட தொடங்கிவிடுவார் என தெரிகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் லிஸ்ட் என நிறைய செய்திகள் வலம் வருகிறது.

அப்படி தற்போது என்ன தகவல் என்றால் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் அக்ஷிதா பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகராகவும் இருப்பவர் மம்மூட்டி. 72 வயதிலும் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த Kannur Squad, காதல் தி கோர், பிரமயுகம், டர்போ போன்ற பல தரமான திரைப்படங்களை சமீபத்தில் கொடுத்தார். இவர் சினிமாவிற்கு வந்து கிட்டதட்ட 50 வருடங்களுக்கும் மேல் ஆகியுள்ளது.

மம்மூட்டி நடிப்பில் அடுத்ததாக Bazooka, Kadugannawa Oru Yatra ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி கவுதம் மேனன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் மம்மூட்டி சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி வெவ்வேறு முதலீடுகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 50 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறாராம். இவருக்கு கொச்சியில் சொந்தமாக ரூ. 5 கோடி மதிப்பில் பிரமாண்டமான பங்களா ஒன்று இருக்கிறதாம். மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 370 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இன்றைய ராசிபலன்கள் 07.09.2024

மேஷ ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாயாரின் தேவைகளை மகிழ்ச்சி யுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களு டன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளையிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை கேட்பதை வாங்கித் தந்து மகிழ்விப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று விநாயகரை வழிபடுவது நற்பலன்களை அதிகரிக்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்குமேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியா பாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படக்கூடும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கன்னி ராசி அன்பர்களே!

சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

துலா ராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். நரசிம்மர் வழிபாடு சிறப்பு.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். திடீர் செலவு களும் ஏற்படும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணி களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப்பது உற்சாகம் தரும். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் புதிய முயற்சி சாதகமாக முடியும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மகர ராசி அன்பர்களே!

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். எதிரி கள் வகையில் எச்சரிக்கை தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பதுடன் செலவுகளும் அதிகரிக்கும். பைரவர் வழிபாடு நன்று.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

கும்பராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். தந்தை யுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். இன்று நீங்கள் அம்பிகையை வழிபடுவது நன்று.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் காரியம் அனுகூலமாகும்.

மீனராசி அன்பர்களே!

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் பணியாளர் களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

யாழ் பலாலி விமான நிலையத்தில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் (jaffna) – பலாலி விமான நிலையத்தில் வலம்புரி சங்கை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்றும் (6.9.2024) மதியம் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட நடவடிக்கை
சென்னையில் (chennai) இருந்து பலாலி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் (இந்தியன் ஏர்லைன்ஸ்) விமானத்தில் குறித்த நபர் யாழ் விமான நிலையம் வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10,000 ரூபா பணத்திற்காக மூதாட்டி கொலை!

10,000 ரூபா பணம் தர மறுத்த 80 வயது மூதாட்டியின் கழுத்தை மிதித்து மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மூதாட்டியை கொலை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

பெண்ணின் கழுத்தை காலால் மிதித்து கொலை
சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி பெண்ணின் வீட்டிற்கு செல்வது மற்றும் குறித்த பெண்ணிடம் இருந்து கழற்றிச் சென்ற காதணிகளை செட்டித் தெருவில் உள்ள கடையொன்றுக்கு விற்பனை செய்தமை சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான கட்டிடப் பொருட்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.

இவர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விடுமுறை பெற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொட்டாவ மாலபே வீதியின் நான்கு வழிச் சந்திக்கு அருகில் உள்ள வீட்டுக்கு வந்து அங்கிருந்த பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார்.
பணத்தை தராததால் கோபமுன்ற நபர், அந்த பெண்ணின் காதணிகளை கழற்ற முயன்றுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் பெண்ணை தரையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை காலால் மிதித்து அவர் அணிந்திருந்த காதணிகளை கழற்றி செட்டித் தெருவில் உள்ள நகைக்கடையில் விற்றுவிட்டு 5 ஆயிரம் ரூபாயுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சந்தேகநபர் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரார். அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதி மன்றம் திறந்து வைப்பு!

கிளிநொச்சி (Kilinochchi) நீதிமன்ற வளாகத்தில் சிறுவர்களுக்கான நீதிமன்றம் இன்று (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமன்றமாக கிளிநொச்சியில் இந்நீதிமன்றம் அமைந்துள்ளது.

முதலாவது நீதிமன்றம் பத்தரமுல்லையிலும் இரண்டாவது நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் உள்ள நிலையில் மூன்றாவதாக கிளிநொச்சியில் இன்று (06) திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி நிகழ்வில், கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி கிறேசியன் அலெக்ஸ் ராஜா, மாவட்ட நீதிமன்ற நீதிபதி சைலன் காயத்திரி, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மத் ஜமில் மற்றும் சிறுவர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் நிஞ்சினி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.