இன்று 51-வது பிறந்தநாள்: ஷாருக் கானுக்கு கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன் வாழ்த்து

உலகளாவிய அளவில் அதிக சம்பளம்பெறும் கதாநாயகர்களில் ஒருவராக கருதப்படும் நடிகர் ஷாருக் கான் ‘பவுஜி’, ‘சர்க்கஸ்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி, பின்னர் 1992-ம் ஆண்டு வெளியான ‘தீவானா’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம்பதித்தார்.

‘பாஸிகர்’, ‘டர்’, ‘அன்ஜான்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும், மேலும் சில படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களிலும் பிரகாசித்த ஷாருக் கான், ‘தில்வாலே துல்ஹனிய லேஜாயேங்கே’ படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற இந்திப்பட கதாநாயகனாக உயர்ந்தார்.

2007-ம் ஆண்டில் ‘கவுன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு இந்தியர் வீட்டு வரவேற்பறைக்குள்ளும் நுழைந்த இவர் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியில் மோதும் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியின் உரிமையாளர்களில் இருவராகவும் உள்ளார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றதுடன் பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வாரிக்குவித்து ‘பாலிவுட்டின் பாதுஷா’ ஆக திகழும் ஷாருக் கான் இன்று தனது 51-வது வயதில் காலடி பதிக்கிறார்.

இதையொட்டி, கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு கைபேசி மற்றும் டுவிட்டர் மூலம் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.

காதலரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட 10 ரொமான்டிக்கான பரிசுகள்!!!

தவறான நபரை காதலிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

தமிழினிக்கு ஒரு பாடல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினிக்காக  பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழினி தனது உணர்வுகளை சொல்வது போன்ற வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு லைட் ஹவுஸ் கெலேயில் நேற்று இடம்பெற்றுள்ளது.

காஷ்யப்ப சத்யபீரிஸ் டி சில்வாவின் பாடல் வரிகளில் உருவாகிய பாடல், இசையமைப்பாளர் மஹிந்த குமாரினால் தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உரேஷா ரவிஹாரியினால் பாடப்பட்டுள்ள இந்த பாடல் தர்ஷன ருவன் திஸாநாயக்க என்பவரினால் உருவாக்கப்பட்டுள்ளது.

காஷ்யப்ப சத்யபீரிஸ் டி சில்வாவினால் பாடல் அடங்கிய இறுவட்டு, தமிழினியின் கணவரான ஜேயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வெளியீட்டு நிகழ்வில் மூத்த ஒளிப்பதிவாளர் தர்மசிறி பண்டாநாயக்க, புகழ்பெற்ற எழுத்தாளர் சுனில் மாதவ பிரேமதிலக்க அடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் ஏற்படும் என உறுதியாக நம்பும் அனைத்து மக்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பனம் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி 2015ம் ஆண்டு ஒக்டோபர் 18ம் திகதி மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

கிளிநொச்சி மாவட்டம் பரந்தனை சொந்த இடமாகக் கொண்ட தமிழினியின் இயற்பெயர் சிவசுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு 43 வயது.

கடந்த 1991 ஆம் ஆண்டு 19 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த தமிழினி பின்னர் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக உயர்ந்தார்.

இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்த போது தமிழினி கைது செய்யப்பட்டார்.

நீண்டகாலமாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்களுக்கான பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டடிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் காவலரனுக்கு முன் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் கடற்படையினரின் காவலரனுக்கு முன் இன்று அதிகாலையில் தரையில் மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அதிகமாக மழைபெய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை 4.30 மணிக்கு பின் மழை பெய்யவில்லை என்று குறித்த பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த இடத்தில் மாலையிட்டு, ஊதுபத்தியுடன் கூடிய அஞ்சலி செலுத்தியது மழை வந்து நின்றபின் நிகழ்ந்துள்ளதற்கு ஆதரமாக அங்கிருக்கும் ஊதுபத்தி வெற்றுப்பெட்டிகள் அடையளப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த அஞ்சலி யார் எதற்காக என்ன அர்த்தத்தில் செய்துள்ளார்கள் என்பது பற்றி அங்கே ஒரு புரியாத புதிராவே காணப்படுகின்றது.

பரந்தன் முல்லைத்தீவு பிரதானவீதி அருகே அமைந்திருக்கும் கடற்படையினரின் காவலரனுக்கு முன் அதி உயர் (1500w) மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேரங்களில் வாகனங்கள் தரித்து நின்றால் அல்லது ஆட்களின் நடமாட்டம் காணப்பட்டால் கடற்படையினரின் காவலரனில் இருந்து அதிஉயர்(றோர்ச்லைட்)ஒளியின் மூலம் குறித்த வளாகத்தை அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புஷ்ப அர்ச்சனையால் நன்மை ஏற்படுமா?

செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தன லாபம், தொழில் முன்னேற்றம் கூடும். சூரியனின் அருள் கிடைக்கும்.

* மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். சந்திரன் அருள் கிட்டும்.

* மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியா வட்டை மலர்களால் செய்யும் அர்ச்சனை மன சஞ்சலம் நீக்கும். புத்திக் கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்றவற்றைத் தரும். செவ்வாய் அருள் கிடைக்கும்.

* புதனின் அருள் பெற, மரிக்கொழுந்து, மாசி பச்சை ஆகியவற்றால் அர்ச்சனை செய்யலாம். சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும்.

* குருவின் அருள் பெற, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும்.

* சுக்கிரன் அருள் பெற செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும். •

சனி பகவான் அருள் பெற, நீலநிற சங்குப்பூ அர்ச்சனை செய்யலாம். வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும்.

• கருந்துளசி, வில்வம், மகிழம்பூ அர்ச்சனை, சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும். ராகு, கேது அருள் கிடைக்கும்.

மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியில்!

தமிழகம்- பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

மன்னார்வளைகுடா சின்னப்பாலம் கடல் பகுதியில் நேற்று திடீரென சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது.

இதனால் கரையில் நிறுத்தபட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தது.

கடந்த சில நாட்களாக மன்னார்வளைகுடா கடல்பிராந்தியத்தில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துவந்தது இதனால் ராட்சத அலைகளால் உருவாகி பாம்பன் சின்னப்பாலம் குந்துகால் தெற்குவாடி மற்றும் மண்டபம் தெற்குப் பகுதி நாட்டு படகு மீனவர்கள மீன்பிடிக்கச்செல்லாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந் நிலையில் இன்று திடீரேன சின்னப்பாலம் கடல் பகுதியில் சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது இதனால் கரையில் நிறுத்ப்பட்டிருந்த 30 க்கும் க்கும் மேற்ப்பட்ட படகுகள் சேதமடைந்தது.

மேலும் கடலுக்குச் சென்றவர்களும் பெரும் நஷ்டத்தோடு கரை தீரும்பியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வந்த நெதர்லாந்து விமானம்!

நெதர்லாந்தின் தேசிய விமான சேவையான KLM விமான சேவை 20 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

KLM விமான சேவை நிறுவனத்தின் KL873 இலக்க விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் KLM நிறுவனம் தனது சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.

Boening 787 -9 Dreamliner ரக நவீன விமானத்தை இந்த நிறுவனம் தனது விமான சேவைக்கு பயன்படுத்தியுள்ளது.

பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களே எச்சரிக்கை !

விரதத்தை முடிக்கும் போது பழரசம் குடிப்பது ஏன்?

விரதத்தை முடித்த பின்னர் பெரும்பாலும் பழரசம் குடிப்பது தான் வழக்கம், அது ஏன் தெரியுமா?

பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது.

நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது.

பழங்களில் விட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட.

விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.

மேலும் தடபுடலாக விருந்தும் சாப்பிடுவது நல்லதல்ல, அளவோடு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தைக்கு பெற்றோரால் நேர்ந்த கதி! பின்னணி காரணம்?

ஐதராபாத்தில் பெற்றோரே பிறந்த நான்கு நாட்களான பெண் குழந்தையை 20,000 ரூபாய்க்கு விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கரேணி பகுதியை சேர்ந்த கிருஷ்ணா, சுஜாதா தம்பதியே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணா, சிங்கரேணி தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சுஜாதாவிற்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, குழந்தையை விற்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

தேவர்கொண்டா பகுதியில் குழந்தையை 20,000 விற்க முற்பட்டபோது தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் குழந்தையை வாங்க வந்த மர்ம நபர்கள் சம்பயிடத்திலிருந்து தப்பித்துள்ளனர். தகவல் அறிந்த பொலிசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.

அழகி கிளியோபட்ராவின் ரகசியம்

எகிப்து பேரரசியான கிளியோபட்ரா வரலாற்று அழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்.

கிளியோபட்ரா என்ற பெயரை கேட்டாலே அவருடைய அழகே பிரதானமாக முன்னிறுத்தப்படுகிறது.

அவள் அழகு இல்லாதவள் என்றும், அமைதியான ஒரு கவர்ச்சிப் பதுமை கிளியோபட்டரா எனவும் இருவேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அழகுக்கு அடுத்தபடியாக, ஆண்களை காதல் வலையில் வீழ்த்துவதில் கைதேர்ந்த மாயக்காரி ஆவார்.

14 வயதில் எகிப்திய பேரரசியாக அரியணை ஏறிய இவள், அந்நாட்டை மிகச்சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தாள்.

வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்ததை சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபட்ராவின் வெற்றி ரகசியம். 11 மொழிகள் சரளமாக பேசுவாள், பேச்சாற்றலும் நிறைந்தவள்.

தனது 21 வயதில் ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி என்னும் இரு பெரும் ரோம ஆளுமைகளை காதல் வலை வீசி தன்வயப்படுத்தினாள்.

புத்திசாலித்தனமாக ஆட்சி புரிந்துவந்தாலும், கிளியோபட்ரா தனது மேனியழகை பேணிக்காப்பதில் தனிக்கவனம் செலுத்தி வந்தார்.

தன் அழகிய தோற்றம் மீது அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகின் ரகசியம்

தனது உடல் பளபளப்பாக இருப்பதற்காக கிளியோபட்ரா பால் மற்றும் தேனில் தான் குளிப்பாராம்.

தனது முகத்திற்கு தேன் வைத்து மசாஜ் செய்துகொள்வார்.

தனது கூரிய கண்களால் அனைவரையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக, பல வண்ணங்கள் கொண்ட மைகளால் கண்களுக்கு அலங்காரம் செய்துகொள்வார்.

முத்துக்களை வினிகரில் கரைத்து குடித்துவந்தால், முத்து எப்படி மினுமினுப்பாக இருக்கிறதோ அதேபோன்று உடலும் மினுமினுப்பாக இருக்கும் என்பதற்காக இந்த முறையை பின்பற்றி வந்துள்ளார்.

லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்க வளையல் அணிந்து குங்குமம் வையுங்கள்

குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லட்சுமிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வளையல்கள் அணிந்த வலக்கையில் வாங்கி அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் கையில் எப்போதும் ஜொலிக்கும் வளையல்கள் அணிந்திருப்பது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும்.

முருகப்பெருமான் பற்றிய அரிய தகவல்கள்

வேடர் வடிவில் முருகன் :

நெய்வேலி வேலுடையான்பட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், வேடர் வடிவில் காட்சியளிக்கிறார். கையில் வில்லும், அம்பும் ஏந்தியபடியும், தலையில் இறகுகளை சூடியபடியும், நடந்து செல்லும் பாவனையில் இந்த உருவம் அமைக்கப்பட்டுள்ளது.

நாகாபரண முருகர் :

சேலம் மாவட்டம் கபிர்மலையில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த ஆலயக் கருவறை குடவரையாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகப்பெருமான் பாலமுருகனாக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். மூலவருக்கு வலதுபுறம் சுயம்பு உருவம் இருப்பதையும் காணலாம். உற்சவர் நாகாபரணத் துடன் காட்சிதருகிறார்.

முருகனுக்கு உதவியவர்கள் :

குழந்தையாக இருந்த முருகன் வலம் வந்த மயில், இந்திர மயில் ஆகும்.

முருகப்பெருமான் சிவ-பார்வதிக்கு நடுவில் இருக்கும் கோலத்திற்கு ‘சோமாஸ்கந்தர்’ என்று பெயர்.

சூரசம்ஹாரத்தில் முருகப்பெருமானுக்கு உதவியவர்கள், வீரபாகு உள்ளிட்ட ஒன்பது வீரர்கள்.

மூலவரும்.. சீபலியும்..

திருச்செந்தூர் திருத்தலத்தின் கருவறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஒரு திருமுகத்துடனும், அபயம், வரதம், தாமரை மலர், ஜெபமாலை கொண்ட நான்கு திருக்கரங்களுடனும் நின்ற திருக்கோலத்தில் செந்தில்நாதராக அருள்பாலிக்கிறார். மூலவரின் வலது பாதத்தின் அருகே வெள்ளியால் ஆன சீபலியும், இடது பாதத்தின் அருகே தங்கத்தால் ஆன சீபலியும் உள்ளது. இதனை கேரள மன்னர் மார்த்தாண்டவர்மன் வழங்கியுள்ளார். ‘சீபலி’ என்பதற்கு ‘மூலவரைப் போலவே உள்ள சிறிய விக்கிரகம்’ என்று பொருள்.

கங்கா பூஜை :

திருச்செந்தூர் முருகப்பெருமான் கடலை நோக்கியவாறு வீற்றிருக்கிறார். அவர் ஏன் கடலை பார்த்தபடி இருக்கிறார் தெரியுமா? கங்காதேவி தினமும் உச்சி காலத்தில், இத்தலத்தின் கடலில் வந்து முருகப்பெருமானை தரிசிப்பதாக ஐதீகம். தன்னைத் தேடி வரும் கங்காதேவியை, தினமும் முருகர் பூஜிக்கிறார். ஆகவேதான் உச்சிகால பூஜை முடிந்த பின்பு, ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்து வந்து கடற்கரையில் ‘கங்காபூஜை’ செய்யப்படுகிறது. திருச்செந்தூர் கடலில் நீராடினால், கங்கையில் நீராடிய புண்ணியம் கிட்டும்.

தமிழக மக்களுக்கு நற்செய்தி…ஜெயலலிதா இன்று இரவு மாற்றப்படுகிறார்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் எம்டிசிசியு வார்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா இன்று இரவு 2வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

2வது தளத்தில் உள்ள எம்டிசிசியு வார்டில் சிகிச்சை பெற்ற வந்த முதல்வரின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் மாதம் 22ம் திகதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா தொடர்ந்து 42வது நாளாக சிகிச்சை பெற்று வருவது நினைவுக்கூரத்தக்கது.

இந்நிலையில், அவர் எப்போது குணமடைந்து வீடு திரும்புகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஜனாதிபதி வீரப்பேச்சுகளை நிறுத்திக் கொண்டு பிரதமரை பதவி நீக்கவேண்டும் .

பிரதமர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இன்று கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்களில் கையும் களவுமாகவும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழலே ஆனால் இதற்கு பிரதானமாக இருந்து செயற்பட்டவர் பிரதமரே.

ஒருபக்கம் ஓய்வூதியம் கோரி அப்பாவி இராணுவ வீரர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் தொடர்பில் எந்த வித சலுகையும் இதுவரையில் கொடுக்கப்படவில்லை.

மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் பணம் மட்டும் இருந்திருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமல்ல மேலதிக கொடுப்பனவுகளையும் கூட வழங்கியிருக்கலாம் அந்தளவு பணம் பறிபோய்விட்டது. எனவும் விமல் குற்றம் சுமத்தினார்.

நாட்டில் குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளை மத்திய வங்கி கொள்ளையே அதனை செயற்படுத்திய பிரதமரின் மூளை பாராட்டப்படத்தக்கதே.

இந்த ஊழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு பிரதான காரணியான ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் இல்லாவிடின் மக்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம்.

மாதத்திற்கு ஒரு முறை வந்து வீரமாக கதைபேசும் ஜனாதிபதி தனது வீரத்தனமான பேச்சுகளை நிறுத்திவிட்டு உடனடியாக பிரதமரை பதவில் இருந்து நீக்க வேண்டும் இல்லாவிடின் மத்திய வங்கி ஊழலை நிவர்த்தி செய்ய முடியாது.

இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கா விட்டாலும் நாம் முடிவு எடுப்போம் எனவும் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தினமும் ஊறுகாய் சாப்பிடாதீங்க

நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய்.
பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.

ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

பிரபல கோவிலில் காதல் திருமணத்திற்கு தடை! ஏன் தெரியுமா?

தெலங்கானா மாநிலத்தில் உள்ள தாபல்லா லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலில் காதல் திருமணங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் காதல் திருமணங்கள் மிகவும் பிரபலமானவை. அண்டை மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வரும் தம்பதிகள் இங்கு வந்து திருமணம் செய்து கொள்வார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் மஹன்களி அணில் என்பவரும், ஹஸ்தாபுரத்தைச் சேர்ந்த மௌனிகா(18) இளம்பெண்ணும் தங்களது பெற்றோர் விருப்பதற்கு மாறாக இந்தக் கோவிலில் காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து கோவிலுக்கு வந்த மௌனிகாவின் உறவினர்கள் அணிலின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து காதல் திருமணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தாபல்லா லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் நிர்வாக பொறுப்பாளர் வெங்கட் ரெட்டி கூறியுள்ளார்.

மாறுபட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் – ஹன்சிகா

‘எங்கேயும் காதல்’, ‘ரோமியோ ஜூலியட்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹன்சிகா-ஜெயம் ரவி இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து இருக்கிறார். அந்த அனுபவம் பற்றி கேட்டபோது “நானும் ஜெயம்ரவியும் சேர்ந்து நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ரசிகர்களுக்கும் எங்களை பிடித்திருக்கிறது. விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘போகன்’ படம் வித்தியாசமானது. அரவிந்த்சாமியுடன் முதல் முறையாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படக்குழு மிகவும் ஜாலியானது.

தமிழ் ரசிகர்கள் மிகவும் சிறந்தவர்கள். திறமையானவர்களுக்கு ஊக்கம் கொடுப்பார்கள். புதுமுகங்களை வரவேற்பார்கள். மிகவும் நல்லவர்கள். இதுபோன்ற ரசிகர்களை வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை. அவர்கள் விரும்புகிற நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

இப்போது வரும் புதுமுகங்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். புதுமுகங்கள் அதிகமாக வருவதால் கவலை இல்லை. போட்டி இருந்தால்தான் திறமையை வளர்க்க முடியும். ரசிகர்கள் பாராட்டும் வகையில் வித்தியாசமாக நடிக்க வேண்டும். ரசிகர்கள் அதைத்தான் விரும்புவார்கள். சிறிது தாமதம் ஆனாலும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: நடிகை சாய் பல்லவி

‘பிரேமம்’ மலையாளப் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இதில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சாய்பல்லவி டுவிட்டரில் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், உங்கள் திருமணம் காதல் திருமணமா? பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், “நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். ஏனென்றால் என் பெற்றோரை எப்போதும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

அவருக்கு பிடித்தவை பற்றி கேட்ட கேள்விகளுக்கு, தற்போது ‘ரெமோ நீ காதலன்…’ பாடல் பிடிக்கும். சூர்யாவின் படங்களில் பிடித்தது ‘காக்க காக்க’ என்று தெரிவித்தார்.நடிகை, டான்சர்,டாக்டர் ஆகியவற்றில் அவருக்கு பிடித்தமானது எது? என்று கேட்ட போது, “தெரியவில்லை. ஆனால் நோயாளிகள் முகத்தில் சிரிப்பு வரும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்.

உங்களுக்கு பிடித்தது சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா? என்ற ரசிகரின் கேள்விக்கு ‘நான் சைவம்’ என்று கூறி இருக்கிறார்.