ஆஸ்துமா நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

காய்ச்சல், தலைவலியில் இருந்து ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் வரை, நோயை விரட்ட உணவு ஒரு முக்கிய அம்சம். ஆஸ்துமா சிகிச்சையில் உணவு ஒரு மருந்தும்கூட! ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், சில உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் பிரச்னையைத் தீர்க்க முடியும்.

* காலையில் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பல் துலக்கியதும், முதலில் இரண்டு அல்லது மூன்று குவளை வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது. அதன் பிறகு, பால் கலக்காத தேநீர் சிறந்தது. வெளுத்த பாலைவிட கறுத்த தேநீரும் காபியும் எவ்வளவோ மேல்!

* இரவு நேரத்தில் மூச்சிரைப்பால் (Wheezing) சிரமப்படுகிறீர்களா? கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்துப் போட்டுக் கஷாயமாக வைக்கவும். இனிப்புச் சுவைக்கு தேன் சேர்த்து அருந்தவும்.  இரவில் நெஞ்சில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி, உடனடியாக சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஓரிரு மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தக் கஷாயத்தைக் காலை பானமாகக் குடித்துவந்தால், இரைப்பு கண்டிப்பாகக் கட்டுப்படும். கூடவே தும்மல் இருந்தால், முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

* இரவில் மூச்சிரைப்பால் அவதிப்படுபவருக்குக் காலை உணவு சாப்பிடப் பிடிக்காது. பசியும் இருக்காது. எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல் உப்புமா, மிளகு ரச சாதம், இட்லி இவற்றில் ஏதாவதொன்றைச் சாப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் அரை வயிற்றுக்குச் சாப்பிடுவது நல்லது. இடையிடையே பால் கலக்காத தேநீர் அருந்தலாம்.

* மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரைக்காய், புடலங்காய், சௌசௌ போன்றவற்றைத் தவிர்த்துவிடலாம். மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை, காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், ஜீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்கவைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாயுவை உண்டாக்கும், செரிக்கத் தாமதமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரைத் தவிர்க்கலாம்.

* சில வகைக் காய்கள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வேண்டும். அதே நேரம், தன் நாவுக்குப் பிடிக்காததை எல்லாம், `அய்யோ… எனக்கு பாகற்காய் அலர்ஜி! வெண்டைக்காய் சேராது’ என ஒதுக்கத் தொடங்கினால், இழப்பு கூடும்; இழுப்பும் கூடும்.

* மாலையில் தேநீரோ, சுக்கு-தனியா கஷாயமோ அருந்துவது இரவில் படும் மூச்சிரைப்பு சிரமத்தைப் பெருவாரியாகக் குறைக்கும். இரவு உணவை ஏழரை மணிக்கு முன்னதாகச் சாப்பிட்டுவிடுவது நல்லது. இரவுக்கு கோதுமை ரவை கஞ்சி, இட்லி நல்லது. பரோட்டா, பிரியாணி… கூடவே கூடாது! காலி வயிற்றோடு தூங்கச் செல்வது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

* தினமும் மாலை வேளையில் நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம் சாப்பிடலாம். மருந்து எடுக்கும் காலங்களில் ஆரஞ்சு, திராட்சைப் பழங்களைத் தவிர்க்கவும். பகல் நேரத்தில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகளில் சிறிது மிளகுத் தூள் தூவி சாப்பிடலாம்.

* இனிப்புப் பண்டங்கள் ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. குளிர்காலத்தில் இனிப்பு கூடவே கூடாது. பெரியவர்கள், மதிய உணவுக்குப் பின்னர் இரண்டு வெற்றிலைகளைச் சுவைப்பது ஆஸ்துமாவுக்கு நல்லது. ஆனால், அதில் புகையிலையை சேர்க்கக் கூடாது.

* ஆஸ்துமா உள்ளவர்களின் மெனு கார்டில் கட்டாயம் இடம்பிடிக்க வேண்டியவை… சிவப்பரிசி அவல் உப்புமா, புழுங்கல் அரிசிக் கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக்கீரைப் பொரியல், மணத்தக்காளி வற்றல், லவங்கப்பட்டைத் தேநீர்..!

கத்தரிக்காய் சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்தா?

கத்திரிக்காய் சாப்பிடுபவர்களின், உடம்பின் தன்மையை பொருத்து, சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், உடம்பில் அலர்ஜியை ஏற்படுத்தி பெரிய பாதிப்புகளாக மாற்றிவிடுகிறது.

கத்திரிக்காயில் அதிகப்படியான புரோட்டின், சோலனைன், ஹிஸ்டமின் இருப்பதே உடலில் அலர்ஜி ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.

கத்திரிக்காய் சாப்பிடுவதால் அதில் உள்ள சோலனைன் என்ற புரோட்டின் ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு எதிராக இடையூறு விளைவிக்கும்.

இதனால் அலர்ஜி, வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட காரணமாக உள்ளது.

ஹிஸ்டமின் நமது உடலிலேயே சுரக்கப்படும் ஒரு புரோட்டின். எனவே ஹிஸ்டமின் அதிகம் உள்ள உடலிற்கு ஒவ்வாத கத்திரிக்காயை நாம் சாப்பிடும் போது, நம் உடம்பில் சரும அலர்ஜி, கொப்பளம் மற்றும் அரிப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.

வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம். இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம். சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெப்பத்தை தணிக்கும் காய்கறிகள்!!! அதிலும் சிம்பிளான வழி என்னவென்று தான் பலரும் தேடுவோம். அதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது. அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்

வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பான ஆறு உணவுகள்!!! இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும். மேலும் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கொலஸ்ட்ரால் குறையும்

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.

உடல் சூடு குறையும்

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள்.

இதய நோய்

வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

நீரிழிவு

வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

மலச்சிக்கல்

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.

எடை குறையும்

வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

மார்பகத்தை பெரிதாக்க,,,

நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள் நீங்களாக இருந்தால், வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

சிறுநீரக கற்கள்

உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்து வந்தால், வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள். இதனால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்.

இரத்த ஓட்டம் மேம்படும்

வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்

வெந்தயம் பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அதிலும் ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, நீண்ட நேரம் உறவில் இன்பத்தை அனுபவிக்க உதவும்.

ஆண்களின் பிரச்சனைகளைப் போக்கும்

ஆண்கள் சிலருக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை இருக்கும். இத்தகையவர்களால் உறவில் சிறப்பாக செயல்பட முடியாது. ஆகவே ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், பிறப்புறுப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரித்து, பிரச்சனைகள் நீங்கும்.

72 மணிநேரத்தில் கல்லீரலை சுத்தம் செய்து உடல் எடையைக் குறைக்க இத ஒரு டம்ளர் குடிங்க…

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், எந்த ஒரு செயலையும் சோர்வின்றி செய்ய முடியும். அதிலும் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பு. இந்த கல்லீரலில் டாக்ஸின்கள் அதிகமாக சேர்ந்தால், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானாலும் கல்லீரலின் செயல்பாடு அவசியம். கல்லீரலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது உடல் எடை குறைவதில் தாமதமாக்கும். ஆகவே ஒவ்வொருவரும் தங்களது கல்லீரலை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இங்கு 72 மணிநேரத்தில் கல்லீரலை சுத்தம் செய்து, உடல் எடை குறைய உதவிப் புரியும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பானத்தில் உள்ள உட்பொருட்கள் கல்லீரலை சுத்தம் செய்ய உதவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தில், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் எலுமிச்சையும், செரிமானத்தை சீராக்க வைட்டமின்கள் நிறைந்த பார்ஸ்லியும், செலரி கீரையும் உள்ளது.

தேவையான பொருட்கள்:

செலரி கொத்து – 5 தண்ணீர் – 6 கப் எலுமிச்சை – 3 நறுக்கிய பார்ஸ்லி – 1 கப்

தயாரிக்கும் முறை:

முதலில் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, பார்ஸ்லி, செலரி ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கல்லீரலை சுத்தம் செய்யும் பானம் தயார்!

பருகும் முறை:

இந்த பானத்தை தினமும் மூன்று வேளை உணவு உட்கொள்ளும் முன் ஒரு சிறிய டம்ளர் பருக வேண்டும். இப்படி மூன்று நாட்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பின் வேண்டுமானால், மீண்டும் இந்த சிகிச்சையை 7-10 நாட்கள் கழித்து பின்பற்றலாம்.

குறிப்பு

இந்த சிகிச்சையைப் பின்பற்றும் போது, வயிறு நிறைய உணவு உடகொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இது சுத்தம் செய்யும் சிகிச்சை என்பதால், குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலரி கிளின்டன், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்தலில் ட்ரம்ப்  முண்ணியிலும், ஹிலாரி பின் தங்கியும் வருவதால், நாடெங்கிலும் உள்ள ஹிலாரியின் ஆதரவாளர்கள் சோகத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் தேர்ந்தலில் அமெரிக்க வாழ் இந்தியர் இலினாய்ஸ் மாகாணப் பிரதிநிதியாக ராஜாகிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் வாக்குகளில் ஹிலரி கிளின்டன் பின் தங்கி வரும் நிலையில் அமெரிக்க பங்குசந்தை  500 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஜெயலலிதா கேட்ட கேள்வி: வியந்து போன மருத்துவர்கள்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா கண்விழித்ததும் கேட்ட முதல் கேள்வி, தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது தான் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கூறியுள்ளார்.

நடைபெறவிருக்கும், இடைத்தேர்தலை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்திற்கு வந்த அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் கூறியதாவது,

ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பில்தான் இத்தேர்தல் நடக்கிறது. அவரது அனுமதியுடனும்,ஒப்புதலு டனும்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள னர்.முதல்வர் ஜெயலலிதா கண் விழித்ததும் கேட்டது தமிழக மக்களை பற்றியும், கட்சியின ரையும் பற்றிதான்.

இப்படி தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிற அவரை பார்த்து மருத்துவர்களே வியந்து போனார்கள்.

மேலும், அவரது நேரடி பார்வையில் தான் அறிக்கைகள், அரசு பணிகள், மக்கள் பணி, கட்சி பணிகள் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.

அந்த இடத்தில் கை வைத்து அழுத்துங்க! அப்பறம் என்ன நடக்குமென்றால்….

நமது உடலில் ஏற்படும் வலிகளை குணப்படுத்துவற்கு தற்போது பல்வேறு மசாஜ் வழிமுறைகள் உள்ளன.

இதில் ஏராளமான மசாஜ் வழிமுறைகள் நல்ல பலனை கொடுக்கும். அதே நேரத்தில் உற்சாகமான உணர்வை ஏற்படுத்தும்.

அதில் ஒரு சூப்பரான மசாஜ்தான் இது!

என்ன செய்ய வேண்டும்?
  • உங்கள் இருபுருவங்களுக்கும் இடையே, அதாவது நெற்றிப்பொட்டில் விரலை வைத்துக்கொள்ளுங்கள்.
  • பின்னர், நன்றாக அந்த இடத்தை அழுத்திக்கொண்டு, சுமார் 3 செமீ அளவில் மேல்நோக்கி மசாஜ் செய்யுங்கள்.
  • சுமார் 45 முதல் 60 நொடிகள் இவ்வாறு செய்யவேண்டும்.
என்ன பலன்?
  • தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்படுபவர்கள் இவ்வாறு செய்தால் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • ஏதேனும் ஒரு வியடத்தை செய்வதற்கு முன்னர் இவ்வாறு செய்தால் Concentration அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும்.
  • குறிப்பாக, முகம், வாய் மற்றும் கண்கள் ஆகியவற்றிக்கு தொடர்புடைய செய்லபாடுகள் சிறப்பாக இருக்கும்.

மாதவிடாய் நாட்களில் சோர்வை போக்கும் உளுந்தங்கஞ்சி! – செய்முறை

ஒரே ஒரு அறிவிப்பால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மோடி

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக பதவியேற்க போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் சில மணிநேரங்களில் விடை கிடைத்து விடும்.

நேற்று பரபரப்பாக அமெரிக்காவில் தேர்தல் நடந்து கொண்டிருந்த வேளையில், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் பிரதமர் மோடி.

ஹிலாரி- டிரம்ப் என பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், பணத்தை எங்கே மாற்றுவது என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் இருந்தனர்.

மோடியின் இந்த திடீர் அறிவிப்பு ஏன் என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருந்தது.

தேர்தல் பிரசாரத்தின் போதே, டிரம்ப் அமெரிக்காவின் சிறந்த நண்பன் இந்தியா என்றும், மோடியுடன் சேர்ந்து செயல்பட தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மிக முக்கியமாக இந்தியாவின் மிகச்சிறந்த ரசிகன் நான் எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஒருவேளை இன்று முடிவுகள் வெளியாகும் போது அமெரிக்கா டொலரின் மதிப்பு வீழ்ச்சி அடையும் பட்சத்தில், டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.

எதுவாக இருப்பினும் கருப்பு பணம் ஒழிந்தால் இந்திய மக்களுக்கு நன்மை தானே!!!

மோடியை பாராட்டிய ரஜினி!

500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வாபஸ் வாங்கப்படுகிறது. நேற்று இரவு இந்திய பிரதமர் மோடி இந்திய அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இன்று முதல் இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாது. அதற்கு பதிலாக புதிய வடிவிலான 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தங்கள் கையில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

கருப்பு பணத்தை மீட்கவும், கள்ள பணத்தை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. பொதுவாக சாதாரண அடித்தட்டு குடிமக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மோடியை பாராட்டியுள்ளார். புதிய இந்தியா பிறந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தர் சிலைகளை காப்பாற்ற அமைச்சுப் பதவியையும் இழக்கத் தயாராகும் அமைச்சர்!

அம்பாறை, இறக்காமம் தமிழர் பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையைப் பாதுகாப்பதற்காக அமைச்சுப் பதவியை இழக்கவும் தயாராக இருப்பதாக அமைச்சர் தயா கமகே சூளுரைத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசத்தில் உள்ள மாணிக்க மடுவின் மாயக்கல்லி மலையில் அண்மையில் புத்தர் சிலையொன்று பலவந்தமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

குறித்த சிலை வைப்பு விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்குரல் கொடுத்து வரும் நிலையில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சிலை வைப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்மாந்துறை மன்சூர் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

எனினும் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தொடர்பில் அமைச்சர் தயா கமகே கடுமையான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

”இது சிங்கள பௌத்த நாடு. எங்கு வேண்டுமானாலும் நாங்கள் புத்தர் சிலை வைப்போம். அதனை யாரும் தடுக்க முடியாது.

பௌத்த மதம் அரசாங்க மதம். அதனை அனைவரும் ஏற்று நடக்க வேண்டும். இறக்காமத்தில் வைக்கப்பட்ட சிலையை அகற்ற முயற்சித்தால் அமைச்சுப் பதவியை துறந்து புத்தர் சிலையை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுப்பேன்” என்றும் அமைச்சர் தயா கமகே இனவாதம் கக்கியுள்ளார்.

இவ்வளவுக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் கணிசமான தமிழ், முஸ்லிம் வாக்குகள் தயா கமகேவுக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே குறித்த சிலை வைப்பு விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடியபோது, ஒரு வார காலத்தினுள் இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக பிரதமர் உறுதியளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?

இந்து மக்கள் தங்கள் கடவுளை சுப்புரபாதம் பாடி எழுப்புவார்கள். திருப்பதி ஏழுமலையில் வெங்கடாசலபதியை எழுப்ப சுப்ரபாதம் அதிகாலையிலேயே பாட ஆரம்பித்து விடுவார்கள்.

இனிமையும், புத்துணர்ச்சியையும் தரும் சுப்ரபாதத்தின் பொருள் என்ன என்று தெரியுமா? அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

சுப்ரபாதம் என்பது ஒரு வடமொழிப் பெயர். வடமொழியில் சு எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்படுவதால் உயர்ந்த பொருள்களை நல்கும். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்பது இதன் அர்த்தம். கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்புரபாதமாகும்.

 இதில் பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப்பொழுது. சுப்ரபாதம் எனில் இனிய காலைப் பொழுது என்று அர்த்தம். பாக்ஷிதம்-வார்த்தைகள், சுபாக்ஷிதம்-நல்வார்த்தைகள். இனிய காலை பொழுதில், கடவுளை சுப்ரபாதத்தின் மூலம் வழிப்படுவது மிகவும் நன்மையாகும். இவை கடவுளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் எழுப்பும் விதமாகவும் இதனால் நாமும் புத்துணர்ச்சி பெறுவதும் அனுபவ உண்மை.

சுப்ரபாதம் கேட்பதன் மூலம் கடவுளின் அருளும், மகான்களின் அருளும் நமக்கு கிடைக்கும். இவற்றை காலையில் கேட்பதே உயர்ந்தது. எனினும், கடவுளின் நாமாவளிகளின் தொகுப்புகளை மற்ற காலங்களில் கேட்கலாம் தவறொன்றுமில்லை. எனினும், விடியற்காலையில் கேட்பதே பொருத்தமானது.

 “கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவத்தது…” என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவக்கப்பட்டது. அதாவது…. விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார். “கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா…. அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்கள் வீழ்த்து…” என ராமனை அழைக்கிறார்.இதுவே இப்பாடலின் பொருள் ஆகும்.

“கெளஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே உத்திஷ்ட்ட நர ஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமாநிகம்”
“ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்”

படையினர் மீது தாக்குதல் நடத்த அனுமதித்திருக்க மாட்டேன்!- ஜனாதிபதி

தாம் நாட்டில் இருந்திருந்தால் ஊனமுற்ற படையினர் மீது தாக்குதல் நடத்த அனுமதிருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மறைந்த சோபித தேரரின் ஆண்டு நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

ஒழுக்கத்துடன் போர்க் களத்தில் போரிட்ட படையினர் இன்று அரசியல் கைப்பாவைகளாக மாற்றமடைந்துள்ளமை வருத்தமளிக்கின்றது.

அப்பாவி படைவீரர்கள் அரசியல் பகடை காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்அப்பாவி படைவீரர்களுக்கு தெரியாது அவர்களை யார் வழிநடத்துகின்றார்கள் என்பது பற்றி.இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் அரசாங்கத்தை தாக்கி செய்தி வெளியிடுகின்றன.

எம்மை ஆட்சி பீடத்தில் ஏற்றிய தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு ஊடக அறிக்கை வெளியிடுகின்றனர்.எனக்குத் தெரிந்த வகையில் பொலிஸார் கை கால்களினால் தாக்குதல் நடத்தவில்லை.

தப்பிக்க முடியாத நிலையில் படையினர் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.நான் இந்தியாவில் சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்றிருந்தேன்.

நான் கொழும்பில் இருந்திருந்தால் படைவீரர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் நடத்த இடமளித்திருக்க மாட்டேன்.ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் ஏனைய குழப்பம் விளைவித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதித்திருப்பேன்.

கட்டடங்களை தாக்கி மதில்களை உடைத்திருந்தால் அதற்கு இடமளித்திருப்பேன்.நாட்டில் குழப்பங்களை விளைவிக்க சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து அப்பாவி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதே இவர்களின் முயற்சியாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்..

எம்மை ஆட்சிப் பீடத்தில் ஏற்றியர்கள் தொடர்ந்தும் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊக்கமது கைவிடேல்…

இலங்கையை ஆளுகின்ற இன்றைய கூட்டரசாங்கத்தின் பிரசவிப்பிற்குத் தான் ஆற்றிய பங்களிப்பினை வெறுமனே ஒரு மருத்துவிச்சியின் சேவை என்ற அளவோடு சுருக்கிவிட நிகழும் எத்தனிப்புகளைத் தமிழ் தேசம் அனுமதிக்க முடியாது.

மருத்துவிச்சி என்றால், அவரின் தொழிலே, யாரோ பெறுகின்ற குழந்தையின் பிரசவத்திற்குப் பணியாற்றுவதுதான். ஒரு குழந்தையின் பிறப்பிற்குப் பணியாற்றிய பின்பு, அடுத்த குழந்தையின் பிரசவத்திற்குப் பணியாற்ற அவர் போய்விடுவார் – போய்விட வேண்டும். அது மட்டுமே அவரது கடமை. ஒரு “மருத்துவிச்சி” என்ற பரிமாணத்தில் வேறு அர்த்தங்கள் அவருக்குக் கிடையாது. குழந்தைப் பிரசவத்திற்குப் பணியாற்ற ஒரு மருத்துவிச்சி மறுத்துவிட்டால், வேறு மருத்துவிச்சியை நாடி பிரசவத்திற்கான பணிவிடைகளைப் பெற்றுவிடலாம்.

இலங்கைத் தமிழர்களையும், இதுபோல – ஒரு மருத்துவிச்சி என்ற அளவோடு பாவித்து – இன்றைய கூட்டரசாங்கத்தைப் பிரசவித்துவிட்டுக் கழற்றிவிடுவதற்குத் தான் அமெரிக்காவும், இந்தியாவும், கொழும்பும் விரும்பின. இப்போதும் அந்த விருப்பத்துடனேயே செயற்படுகின்றன. ஆனால், தமிழர்களின் அர்த்தம், அவர்கள் ஒரு ‘தேசம்’ என்ற பரிமாணத்தில், வெறுமனே இந்தக் கூட்டரசாங்கத்தை உருவாக்குவதோடு மட்டும் முடிந்துவிடவில்லை.

ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நடந்தது ஒரு காதல் திருமணம் அல்ல; அது ஓர் ஏற்பாட்டுத் திருமணம். அது ஓர் ஒரே-பாற் திருமணம் கூட. அமெரிக்காவும் இந்தியாவும் மற்றும் வேறு நலன்நாடிகளும் செய்த ஏற்பாடு அது. இரண்டு கட்சிகளுமே மணம் முடித்துக்கொள்ள இணங்கிய போதிலும், தாமாகவே ஓர் அரசாங்கத்தைப் பிரசவிக்கும் அக வல்லமை அற்றவையாகவே இருந்தன. எனவே – இவ்விரண்டு கட்சிகளையும் இணைத்துத் தாம் பிறப்பிக்கத் தீர்மானித்த கூட்டரசாங்கத்தைச் சுமந்து பிரசவிக்க – இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சேர்ந்தியங்கிய ஆட்களுக்கும் ஒரு வாடகைத்தாய் தேவைப்பட்டாள். அந்தப் பணியைச் செய்வதற்கு இணங்கக்கூடிய நிலையில் – இணங்க வைக்கப்படக் கூடிய நிலையில் – இருந்தது ஒரே ஒரு வாடகைத்தாய் மட்டும் தான். அது தான் தமிழ் தேசம். தமிழ் தேசத்தின் சார்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்தப் பணியைச் செய்துமுடிக்கும் பொறுப்பை ஏற்றது.

தனது இறைமை மறுக்கப்பட்டு, தனது தனித்துவ தேச அங்கீகாரம் பறிக்கப்பட்டு – சில நூறு ஆண்டுகளாகவே அரசியல் நிர்க்கதி நிலையிலிருக்கும் தமிழ் தாய் – மறுக்கப்பட்டுப் பறிக்கப்பட்ட தனது பிறப்புரிமைகள் மீள உறுதிப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியினதும், நம்பிக்கையினதும் அடிப்படையில் — நடக்கவிருந்த ஏற்பாட்டுத் திருமணத்தின் கூட்டரசாங்கக் குழந்தையைத் தன் வயிற்றிலே சுமந்து ஈன்றெடுக்கும் வாடகைத் தாய் என்ற தற்காலிகப் பாத்திரத்தை ஏற்க நிபந்தனையற்றுச் சம்மதித்தாள்.

இலங்கைத் தமிழ் தேசத்தைப் பொறுத்தவரையில் — இந்த கூட்டரசாங்கத்தைப் பிரசவித்த தாயே அவர்கள் தான். தமிழர்களின் வயிற்றிலிருந்து – தமிழர்களின் வலிகளிலிருந்து – தமிழர்களின் தீர்மானத்திலிருந்துதான் இந்த கூட்டரசாங்கம் பிறந்தது.

இந்தக் கூட்டரசாங்கக் குழந்தையைத் தன் வயிற்றிலே சுமந்து பெற்றெடுக்கத் தமிழ்த் தாய் மறுத்திருந்தால், இந்தக் குழந்தையின் கருவையே உருவாக்கியிருக்க முடியாது — மஹிந்த ராஜபக்‌ஷ விட்டிருக்கமாட்டார். இந்தக் கூட்டரசாங்கமே பிரசவிக்கப்பட்டிருக்காது என்பதற்கும் மேலாக, இந்தத் திருமணத்தையே ஏற்பாடு செய்திருக்க முடியாது — மஹிந்த ராஜபக்‌ஷவே தொடர்ந்தும் இந்தத் தீவை ஆண்டிருப்பார். ஆட்சியிலிருந்து அவரை அகற்றுவதற்குத் துணை செய்ய, தமிழ் தேசத்தின் சார்பில் இரா. சம்பந்தன் வழங்கிய ஒப்புதலே – அதன்பின்பு நடந்த எல்லாவற்றுக்கும் ஆணி வேர்.

இப்போது – இந்தக் கூட்டரசாங்கக் குழந்தை பிரசவிக்கப்பட்டு, அதற்கு இரண்டு வயதும் ஆகப்போகின்றது. ஆனால், ஒரு சராசரி நிலை ஆரோக்கியத்தோடு கூடப் பிறந்திருக்காத இந்த குழந்தை, இருக்கின்ற ஆரோக்கியத்தையும் இழந்தபடியே இருக்கின்றது.

வேலை முடிந்ததும் ஒரு மருத்துவிச்சியைக் கழற்றிவிடுவது போலத் தமிழ் தாயைத் தவிர்த்துவிட்டுப் பச்சைக் குழந்தையான இந்த கூட்டரசாங்கத்தை வளர்க்க அதன் தந்தையர்களால் முடியாதுள்ளது. தாயை கைவிட்டுவிட்டு – தாய்ப் பாலின் இன்றியமையாத ஊட்டச் சத்தைப் புறக்கணித்துவிட்டு – தாய் அணைப்பின் அடிப்படையை உதாசீனப்படுத்திவிட்டு – மேற்குலகிலும் இந்தியாவிலும் தயாரிப்பான இறக்குமதி செய்யப்பட்ட செயற்கைப் பால்மாவை உள்நாட்டின் மாசடைந்த தண்ணீரில் கரைத்து ஊட்டி – அரைகுறை ஆரோக்கியத்தோடு பிரசவிக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டரசாங்கக் குழந்தையைப் பாதுகாக்கவோ வளர்த்தெடுக்கவோ அவர்களால் முடியாதுள்ளது.

இந்தக் கூட்டரசாங்கக் குழந்தையைத் தொடர்ந்து பாதுகாத்து – அது திடகாத்திரமாக எழுந்து நிற்பதற்குத் தாயும், தாய்ப் பாலும், தாயின் ஆதரவும் அரவணைப்பும் – இன்றியமையாத கட்டாயத் தேவைகளாய் இருக்கின்றன. “பெற்றெடுத்துத் தந்துவிட்டு, தருவதைப் பெற்றுக்கொண்டு ஒதுங்கி இரு” என்று வாடகைத்தாயை வெட்டி அனுப்பிவிடவே குழந்தையின் தந்தையர்கள் விரும்புகின்ற போதிலும், அவ்வாறு செய்துவிடமுடியாத அளவுக்கு அவர்களுக்கு அவள் தொடர்ந்தும் தேவைப்படுகின்றாள்.

எனவே, இந்த வாடகைத் தாய் குழம்பி விட்டால், குழந்தைப் பராமரிப்பு சிக்கலாகிவிடும். குழந்தையின் ஆரோக்கியம் மேலும் மோசமடைந்தால், ஏற்பாட்டுத் திருமணக் குடும்பம் பெரும் பிரளயமாகிவிடும். குடும்பத்தில் கலகம் ஏற்பட்டால், வீட்டுக்கும் அயலுக்கும் ஊருக்கும் அது நல்லதல்ல. எனவேதான், தாயின் தேவை தொடர்ந்தும் இன்றியமையாதது ஆகின்றது. அதனால் தான் – நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்கும்படியாகவும், குழந்தைக்காகத் தொடர்ந்தும் தனது சுகங்களை அர்ப்பணம் செய்யும்படியாகவும், தொடர்ந்தும் துயரங்களைத் தாங்கும்படியாகவும் தாய் அறிவுறுத்தப்படுகின்றாள். தனது நலன்களை எல்லாம் தியாகம் செய்துவிட்டு – தான் பெற்ற குழந்தையத் தானே பாதுகாப்பதே ஒரு தாயின் தலையாய கடமை என அவள் அறிவுறுத்தப்படுகின்றாள்.

“இது உன்னுடைய குழந்தை. வேண்டி விரும்பி நீ பெற்றெடுத்த செல்லம். அது நோயுற்று நலிவுற்று இறந்து போவதற்கு நீயே விடலாமா…? நீ பெற்றெடுத்த குழந்தையைப் பாதுகாப்பது உனது கடமை அல்லவா…? எவ்வளவு வலிகளுக்குப் பிறகு நீ பிரசவித்த குழந்தை இது. நீயே இதனைப் பாதுகாக்க மறுத்தால், நீ பட்ட வேதனைகள் எல்லாம் பெறுமதி அற்றவை ஆகிவிடும் அல்லவா…?” என்று தமிழ் தாய் மந்திரிக்கப்படுகின்றாள். 60 ஆண்டுகாலமாக அவள் பட்ட கொடுமைகள் எல்லாமே – இந்தக் கூட்டரசாங்க குழந்தையைப் பிரசவித்துப் பாதுகாக்க மட்டுமே என்றவாறாக அவள் நம்பவைக்கப்படுகின்றாள். ஒரு தாயாகப் பெருமைப்படுத்தப்படுவது போலப் பூசித்துப் பாவிக்கப்பட்டு, உண்மையில் ஒரு பொருட்டற்ற பொருள் போல அவள் சிறுமைப்படுத்தப்படுகிறாள்.

ஒரு மானிடப் பிறவியாக – ஒரு பெண்ணாக – தனித்து – சார்ந்திராது – தன்னாதிக்கத்துடனும் இறைமையுடனும் – தனது பூர்வீக நிலத்தில் வாழுவதற்கு அவளுக்கே உரித்தாக உள்ள உரிமைகள் மீள அங்கீகரிக்கப்படும் என்று வழங்கப்பட்ட நம்பிக்கைகள் கைவிடப்பட்டு — குழந்தைக்குப் பாலும், அரவணைப்பும், பாதுகாப்பும் கொடுப்பதற்குத் தேவையான அளவுக்கு மட்டும் ஆரோக்கியத்துடன் வாழுவதற்குப் போதுமான சலுகைகளும் வசதிகளும் மட்டுமே அவள் வழங்கப்படுகின்றாள்.

இவ்வாறாகத் தாம் அவளைத் தொடர்ந்து ஏமாற்றிப் பயன்பெற முனைவதால் – தான் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை இந்தத் தமிழ் தாய் எந்த எல்லை வரை பொறுப்பாள் என்ற பதற்றமே, அவளை ஒரு தாயாக வாடகைக்கு அமர்த்தியவர்களிடம் இருக்கின்றது. அதனால் – தொடர்ந்தும் அவளைப் பொறுமையின் எல்லைக்குள்ளேயே வைத்திருப்பதற்கு எவ்வகையான சலுகைகளை இன்னும் அள்ளி வழங்கலாம் என்றே அவர்கள் சதா சிந்தித்தபடி இருக்கின்றார்கள். ஆனாலும் – அவள் குழம்பிவிடாமல் இருப்பதற்கான அதியுச்ச உத்தரவாதமாக – அவளுக்குத் தாம் முன்னர் அளித்த நம்பிக்கைகளின் அடிப்படையில் – அவளின் பிறப்புரிமைகளை அங்கீகரித்து, அவளுக்கு மதிப்பளிப்பதற்கான மார்க்கங்களை அவர்கள் மனவிருப்போடு தேடுகிறார்கள் இல்லை.

###

இந்த “நல்லாட்சி” அரசாங்கத்தை ஒரு முக்கூட்டு இணக்கமாக  வெளித்தரப்புக்கள் ஏற்படுத்தி வைத்துள்ளன. ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிரிசேன, இரா. சம்பந்தன் ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்ட கட்சிகளுக்கு இடையிலே இந்த முக்கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு கட்சிகளும் – தமக்கிடையே ஆன புற முரண்பாடுகளாலேயோ அல்லது தம்முள்ளேயே ஆன அக முரண்பாடுகளாலேயோ குழம்பிவிடாதபடி – விட்டுப் பிரிந்துவிடாதபடி – இந்த முக்கூட்டைப் பேணுவதே இந்த வெளித்தரப்புக்களின் தலையாய கரிசனையாக இருந்து வருகின்றது. ஏனெனில் – இந்த முக்கூட்டு அரசாங்கத்தின் இருப்பே – இத்தகைய அக மற்றும் புற முரண்பாடுகளைத் தவிர்ப்பதிலேயே தங்கியிருக்கின்றது. இன்னொரு வகையில் எடுத்துக் காட்டுவதானால் — இரா. சம்பந்தனின் கட்சி ரணிலோடும் மைத்திரிபாலவோடும் முரண்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய அதே சம நேரத்தில், அந்தக் கட்சி, தனக்குள்ளேயான அக முரண்பாடுகளால் பலவீனப்பட்டுவிடாமலும் அவர்கள் கவனிக்க வேண்டும்.

இன்றைய தருணத்தில் – அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், வேறேதும் விடயங்களில் புடுங்குப்பாடுகள் இருப்பினும், இலங்கை தொடர்பில் எத்தகைய கொள்கை வேறுபாடும் கிடையாது. இந்த இரண்டு நாடுகளினதும் நோக்கமும், அந்த நோக்கத்தை அடைவதற்கான ஊக்கமும், அந்த ஊக்கத்தின் அடிப்படையிலான ஆக்கமும் ஒன்றே தான். இந்த இரண்டு நாடுகளுக்கும், இலங்கைத் தீவில் இன்றைய தேவை, தாம் ஏற்படுத்தியிருக்கும் இந்த முக்கூட்டு அரசாங்கத்தைப் பாதுகாத்து, அதில் குலைவுகள் ஏற்படாது பேணி, தாம் வகுத்திருக்கும் பாதையிலிருந்து விலகிவிடாமல் அதனைப் பயணிக்க வைப்பது. அதற்காக – தமக்குப் பாதகம் இல்லாத எதைச் செய்யவேண்டும் எனினும் செய்வது. இன்னொரு வகையில் எடுத்துக்காட்டுவதானால் – இரா. சம்பந்தனின் கட்சிக்கு உள்ளேயே எழக்கூடிய முரண்பாடுகளால் தமது நோக்கத்திட்டங்கள் பாதிக்கப்படும் எனின், அவ்வாறான முரண்பாடுகளைக் களைவதற்காகத் தமது நலனிற்குக் கேடில்லாத எதனையும் செய்வது. தத்தமது நலன்களில் அவர்கள் அக்கறையாக உள்ளார்கள் – அதில் ஏதும் பிரச்சனைகள் இல்லை.

ஆனால், இங்கே பிரச்சனை என்னவென்றால் — தாம் உருவாக்கிய கூட்டரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக எதையும் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்களிடம், தமிழ் தேசத்தின் இறைமைக்கான அங்கீகாரத்தை வலியுறுத்திப் பெறுவதற்குப் பொருத்தமான தந்திரோபாயம் எதனையும் – அதே கூட்டரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் இரா. சம்பந்தனின் கட்சி கொண்டிருக்காததுதான். இன்னொரு வகையில் சொல்லுவதானால் — வெறும் சலுகைகளுக்கும் வசதிகளுக்கும் கைமாறாக, எந்த எல்லை வரையும் இறங்கிப் பணிவிடைகள் செய்து, இந்த கூட்டரசாங்கத்தைப் பாதுகாக்கத் தாம் தயாராய் இருப்பதான நம்பிக்கையை இந்த கூட்டரசாங்கத்தின் தந்தையர்களிடத்தில் இரா. சம்பந்தனின் கட்சி ஏற்பத்தியிருப்பது தான். இன்னொரு வகையில் சொல்லுவதானால் – தமிழ் தேசத்தின் இறைமையும் தன்னாதிக்க உரிமையும் அங்கீகரிக்கப்படாதவிடத்து – தமது கட்சிக்குள்ளும் தமிழ் தேசத்திலும் குழப்பங்கள் நிகழும் என்ற அச்சத்தையும், அவ்வாறான குழப்பங்களின் நிமித்தமாக, இந்த கூட்டரசாங்கத்தைப் பராமரிப்பதிலிருந்து தாம் விலக நேரும் என்ற பயத்தையும் அந்தக் கூட்டரசாங்கத்தின் தந்தையர்களிடத்தில் இரா. சம்பந்தனின் கட்சி ஏற்படுத்தாதது இருப்பதுதான்.

தமிழ் தேசத்தின் இறையாண்மைப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றெடுக்கும் முயற்சியில் திடகாத்திரமான ஒரு கட்டத்தை நாம் இப்போது அண்மித்திருக்கின்றோம் என்று சொல்லப்படுகின்ற வேளையில் — அனேகர் எழுப்புகின்ற கேள்வி – “எந்த பலத்தின் அடிப்படையில் எமது  உரிமைகளை வலியுறுத்தும் அதிகார அழுத்தத்தை நாம் பிரயோகிக்க முடியும்?” என்பதும், “எம்மிடம் அவ்வாறான பலம் எதுவும் உள்ளதா?” என்பதுமாகும்.

ஆசியாவின் தென் மையத்தில் – இந்து சமுத்திரத்தின் நடுவில் – முதன்மையான கடற் பாதையின் அருகில் அமைந்திருக்கும் ஒரு தனியான நிலப் பகுதி என்ற வகையிலும், அது ஒரு தனியான நாடாக இருப்பதன் காரணமாகவும் – இலங்கை எப்போதுமே உலக வல்லரசுகளால் கையாளப்படும் ஒரு தீவாகவே இருந்து வந்தது; இப்போதும் இருக்கின்றது; இனியும் இருக்கப் போகின்றது என்ற உண்மையை ஓர் உப்புச்சப்பில்லாத விடயமாக எவருமே உதாசீனப்படுத்திவிடக்கூடாது.

ஏனெனில் – நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் – நாம் ஏற்றாலும் ஏற்காதுவிட்டாலும் – இதை எழுதுகிற எனது விதியையும், இதை வாசிக்கின்ற உங்கள் ஒவ்வொருவரது விதியையும் அந்த உண்மைதான் தீர்மானித்துச் செல்கின்றது. ஆகக் கடைசியாக — எம் ஒவ்வொருவரது பாவனையிலும் இருக்கும் தொலைபேசியின் கட்டணங்கள் 49.6 வீதத்தால் அதிகமாகியிருப்பது வரை – எமது விதியை அந்த உண்மையே தீர்மானித்திருக்கின்றது.

இலங்கைத் தீவைக் கையாள முனைகின்ற உலகத் தரப்புக்களுக்கு – இலங்கைத் தமிழ்த் தேசம் எப்போதுமே தேவையாக உள்ள ஓர் இன்றியமையாத தந்திரக் கருவி. இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் – குறிப்பாக, வாக்குரிமை பெற்ற தமிழர்கள் ஒவ்வொருவரும் – தம் ஒவ்வொருவரது தனிப்பட்ட மூலோபாய முக்கியத்துவத்தைப் புரிந்திருக்க வேண்டும். 2015ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு வெளித்தரப்புக்கள் நகர்வுகளைச் செய்தபோது, ஒவ்வொரு தனித்த தமிழ் மகனினதும் மகளினதும் வாக்குரிமையை மட்டும் நம்பியே அவர்கள் அந்த நகர்வினைச்  செய்தார்கள்.

பூலோகப் பெரும் சக்திகள் தமது நலன்களுக்காகப் பயன்படுத்தும் ஒரு தந்திரோபாயக் கருவியாகத் திகழ்கின்ற தமிழ் தேசம், தனது நலனுக்காகப் பயன்படுத்தவல்ல சுய வலுவாகவும் – அதே தந்திரோபாயக் கருவி என்ற பாத்திரமே திகழ்கின்றது என்பதுவே நாம் அறிந்துணர வேண்டிய நுட்பமான உண்மையாகும்.

இன்றைய பொழுதில் எம்மிடமிருக்கும் “வலு” எதுவெனில் – தனக்கே உரிய அரசியற் பிறப்புரிமை அங்கீகரிக்கப்படாதவிடத்து – இந்த கூட்டரசாங்கக் குழந்தையின் பராமரிப்பிலிருந்த தான் விலகிவிடுவேன் என்ற அச்சத்தை, இந்த குழந்தையின் தந்தையர்களிடத்தில் தமிழ் தாய் ஏற்படுத்துவதுதான். அந்த வகையில் – என்னைப் பொறுத்தவரையில் – தமது 30 வருட ஆயுதப் போராட்டத்தின் எந்த ஒரு தருணத்திலும் விடுதலைப் புலிகளால் கூட ஏற்படுத்த முடியாதிருந்த அளவுக்கான பீதியை, சம்மந்தப்பட்ட தரப்புக்கள் எல்லோரிடத்திலும் இப்போது ஏற்படுத்தவல்ல தகுதியோடு இரா. சம்பந்தனின் கட்சி இருக்கின்றது – பல காரணங்களின் நிமித்தம்.

தமிழ் தேசத்தின் “பலம்” அல்லது “வலு” அல்லது “சக்தி” என்ன என்ற கேள்விக்கு விடை தேடும் எத்தனங்களில் ஜோசெப் நை (Joseph Nye) என்ற அமெரிக்க அறிஞர் இப்போது பேசப்படுகின்றார். “வலு” தொடர்பான அவரது கோட்பாடுகளின் ஊடாக தமிழர்களின் “வலு” என்ன என்பது தேடப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு – போர் முடிவடைந்த பின்பு – பிரபாகரன் அவர்களின் இறப்பு தொடர்பாக ‘புதினம்’ இணைய தளத்தில், நான் எழுதி சர்ச்சையாகிப் போன ஒரு கட்டுரைத் தொடரில், ஜோசெப் நை அவர்களின் கோட்பாடுகள் பற்றி குறிப்பிட்டு, தமிழ் தேசத்தின் அரசியலில் இனி “சாதுர்ய வலு” என்பதன் தேவைப்பாடு குறித்து எழுதியிருந்தேன்.

வரலாறு எம்மை நிறுத்தியுள்ள இன்றைய இடத்திலிருந்து – அரசறிவியலாளர் ஜோசெப் நை சொல்லுகின்ற “சாதுர்ய வலு” பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மிகச் சுருக்கமாக, “மென் வலு” (Soft Power) என்றால் – பறப் பாசத்தைக் காட்டியோ அல்லது அகக் கவர்ச்சியைக் காட்டியோ எமது காரியங்களை அடுத்தவர்களைக் கொண்டு சாதித்துக் கொள்வது.

மிகச் சுருக்கமாக, “வன் வலு” (Hard Power) என்றால் – பயமுறுத்திப் பணியவைத்தோ அல்லது பணம் பொருளைக் கொடுத்து மயக்கியோ எமது தேவைகளை அடுத்தவர்களிடத்தில் ஈடேற்றிக் கொள்வது.

மிகச் சுருக்கமாக, “சாதுர்ய வலு” (Smart Power) என்றால் – பாசம் போலப் பாசாங்கு செய்தும், பயமுறுத்தலைப் பாசாங்கு இல்லாமல் செய்தும் – “மென் வலு” மற்றும் “வன் வலு” என்பவற்றைத் தேவையான விகிதாசாரத்தில் கலந்து பிரயோகித்து – எமது காரியங்களை அடுத்தவர்களிடத்தில் பூர்த்திசெய்துகொள்வது.

“சாதுர்ய வலு” தொடர்பில் பேசுகின்ற ஜோசெப் நை, 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் “வன் வலு” மற்றும் “மென் வலு” கோட்பாடுகளைத் தான் அறிமுகம் செய்ததாகவும், ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னதான பூலோக ஓட்டத்தில் — அவையிரண்டும் ஒன்றை மற்றது பிரதியீடு செய்யமுடியாது என்று கண்டறிந்த பின்பு — இந்த “சாதுர்ய வலு” என்ற கோட்பாட்டைத் தான் உருவாக்கியதாகவும் குறிப்பிடுகின்றார். “சர்வதேச உறவுகளில் வலு என்பது எது?” என்பது தொடர்பில் அவர் நிகழ்த்திய சில விரிவுரைகளிலும் நான் அமர்ந்திருந்திருக்கிறேன்.

###

சிறீலங்காவை இன்று ஆளும் கூட்டரசாங்க குழந்தையின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் தமிழ் தேசத் தாயின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாக இருக்கும் போது, அந்த குழந்தையின் ஆரோக்கியமும் முன்னேற்றமும் யாருகெல்லாம் அவசியமாய் உள்ளதோ, அவர்கள் இந்த தமிழ் தேசத் தாய் குழம்பிவிடாமல் இருப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். செய்யத் தான் வேண்டும். ஆனால், அது, அவ்வாறு அவள் குழம்பிவிடுவாள் என்றோ, அல்லது ஏற்கெனவே குழம்பத் தொடங்கிவிட்டாள் என்றோ ஒரு பீதி ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.

அத்தகைய பீதியை ஏற்படுத்தவல்லதுதான் தமிழ் தேசத்தின் “சாதுர்ய வலு”. ஆனால், சிக்கல் எங்கு வந்தது எனில் – தமிழ் தேசத்தின் இந்த இன்றியமையாத் தன்மை கொண்ட அரசியல் மகத்துவத்தைச் சரிவரப் பயன்படுத்தி – “சாதுர்ய வலு”வைப் பிரயோகித்து – எமக்கே உரித்தான அடிப்படை உரிமைகளை வலியுறுத்திப் பெற்றுக்கொள்ளத் தவறுகின்றது இரா. சம்பந்தனின் கட்சி. “தரக்கூடியதைத் தாருங்கள்; ஒரு வீதம் தந்தாலும் பரவாயில்லை; நாம் உங்கள் கூட்டரசாங்கத்தைப் பாதுகாத்துத் தருகின்றோம்” என்று கீழிறங்கி – தரம் தாழ்ந்து – போய்க்கொண்டேயிருக்கிறார்கள் தமிழ் தலைவர்கள். அதே வேளையில் – மறு புறத்தில் – சிங்களத் தலைவர்களோ – தமது “மென் வலு”வைப் பாவித்துத் தமிழர் தலைவர்களுக்குப் பதவிகளையும் படாடோபங்களையும் வழங்கியும், தமது “வன் வலு”வைப் பாவித்து அவர்களுக்கு இன்னபிற சலுகைகளை வழங்கியும் – தமிழர்களை இப்போது தமது “சாதுர்ய வலு”வால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். குறிப்பாகச் சொன்னால் – சொல்லுவதற்கெல்லாம் தலையாட்ட வைத்துவிட்டார்கள். தமிழ் தலைவர்களை வைத்தே, தமிழ் தேசத்தவர்களைச் “சிறீ லங்கர்களாக” சிந்திக்க வைக்கும் மாற்றத்தைச் சிறுகச் சிறுக ஏற்படுத்திவருகின்றார்கள். இப்படியே போய்க்கொண்டிருக்குமானால் – ஆகக் கடைசி ஆராய்வில் வரப் போகும் முடிவு என்னவெனில் — ஒருபுறத்தில் இந்த “மென் வலு”, “வன் வலு”, “சாதுர்ய வலு” பற்றியெல்லாம் நாம் வெறுமனே வியாக்கியானங்கள் கொடுத்துக்கொண்டிருக்கையில் — உண்மையில் இவை எல்லாவற்றையும் ஒரேயடியாகப் பிரயோகித்து, மீண்டுமொருமுறை தமிழினத்தை ஏமாற்றித் தமது காரியங்களைச் சாதித்து முடித்த வல்லவர்கள் சிங்களத் தலைவர்களே என்பதாகும்.

அத்தகைய முடிவினை மாற்றுவதற்கான வழி தமிழ் தேசம் சாதுர்யமாகச் சிந்தித்துச் செயலாற்றுவதுதான்.

தமிழர்களிடத்தில் இன்னமும் ‘வன்சக்தி’ உண்டு. எவற்றையெல்லாம் வைத்துப் பேரங்கள் பேச முடியுமோ, அவை எல்லாமேதான் “வன் சக்தி”. எம்மிடம் உள்ள அந்த “வன்சக்தி”யின் காரணமாகத் தான், இன்றைய கூட்டரசாங்கத்தின் பிறப்பில் நாம் தாயாகப் பங்களிக்க வேண்டி வந்தது. ஆனால், பேரங்கள் பேசாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் எமது பங்களிப்பை அப்போது வழங்கியிருந்தோம் என்பது வேறு கதை. எமது அந்த “வன்சக்தி” – ஒவ்வொரு தமிழ் மகனிடமும் மகளிடமும் இருக்கும் வாக்குரிமையும், அந்த வாக்குகள் மூலமாக நாம் பெற்றுள்ள தமிழ் நாடாளுமன்ற ஆசனங்களும் ஆகும்.

அதே போன்று, தமிழ் தேசத்திடம் இருக்கும் பிறிதொரு வன்சக்தி — மக்கள் இயக்கங்களும், அவற்றின் தலைமைகளும், அவற்றின் செயற்பாடுகளும் ஆகும். தமிழர்களை ஏமாற்ற எண்ணுபவர்கள் எவற்றையெல்லாம் கண்டு பயப்படுகின்றார்களோ, எவற்றின் தாக்கங்களால் தமது நோக்கத் திட்டங்களை மாற்றியமைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாகளோ — அவை எல்லாமே “வன் சக்தி”. தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்கள், அவறுக்குத் தலைமையேற்க முன்வந்த விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்ற மனிதர்கள், தமிழ் தேசத்தின் இறைமையை வலியுறுத்தி அவை முன்வைக்கும் தீர்வுத் திட்டங்கள், அந்தத் தீர்வு திட்டங்களின் அடிப்படையில் அவை முன்னெடுக்கும் ‘எழுக தமிழ்!’ போன்ற மக்கள் பேரணிகள்… என எல்லாமே – தமிழர்களை எமாற்ற எண்ணுபவர்களைப் பதற வைக்கும் தமிழ் தேசத்தின் “வன் சக்தி.”

தமிழ் தேசத்திடம், மிகப் பலமான “மென் வலு”வும் இருக்கின்றது. “மென் வலு” எனப்படுவது, தமிழ் தேசத்திற்கு மாறானவர்களையும் தமிழர் நலனில் அக்கறை கொள்ள வைக்கும் கவர்ச்சி. எம்மை வெறுக்காமல் எம்மீது அவர்களை நம்பிக்கை கொள்ளவைக்கக்கூடிய ஈர்ப்பு. எங்களுக்கு மாறான தங்களுடைய நிலைப்பாடுகளை மீறியும், நாங்கள் வேண்டுவதைச் செய்வதற்கு, ஏதோ ஒன்று அவர்களைத் தூண்ட வேண்டும். அவ்வாறு அவர்களைத் தூண்டவல்லதாக எம்மிடமிருப்பதுதான் “மென் சக்தி.” கொழும்பு ஆட்சியாளர்களின் மனதைப் புண்படுத்திவிடக்கூடாது என்ற அவதானத்துடன் – நிதானமாகவும், கொழும்புக் கூட்டரசாங்கத்தை குழப்பிவிடக்கூடாது என்ற பக்குவத்துடன் – கவனமாகவும், கொழும்பு ஆட்சியாளர்களுடைய அன்பையும் நம்பிக்கையையும் பெறுவதற்காக – பொறுமையாகவும் செயற்படுவதால், இன்றிருக்கும் எந்த ஒரு தமிழ் அரசியலாளரை விடவும், சம்பந்தன் ஐயாவும் சுமந்திரனுமே கொழும்பால் விரும்பப்படுகின்ற தலைவர்களாகத் திகழ்கின்றார்கள். அதனால், அவர்களே, இன்று தமிழ் தேசத்தின் “மென்சக்தி”.

தமிழ் தேசத்தின் இந்த “வன் வலு”வையும், “மென் வலு”வையும் பொருத்தமான விகிதாசாரத்தில் சாதுர்யமாகக் கலந்து பிரயோப்பது எவ்வாறு என்பதுவே எம் முன்னால் உள்ள கேள்வி.

###

சிறீலங்கா நாட்டுக்காக எழுதப்படுவதாகச் சொல்லப்படுகின்ற புதிய அரசமைப்பு யாப்பில் மூன்று விடயங்களில் கவனம் செலுத்தப்படுவதாகச் சொல்லப்படுகின்றது:

(1) நிறைவேற்று ஆட்சியதிபர் முறைமையை நீக்குவது;

(2) தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது;

(3) தமிழர் பிரச்சினைக்குத் தீர்வான அதிகாரப் பகிர்வினைச் செய்வது.

ஆனால், அறியக் கிடைப்பவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவெனில் — முதலிரண்டு விடயங்களிலும் தத்தமக்கிருக்கும் சாதக பாதகங்கள் தொடர்பில் மட்டுமே கவலைப்படும் ரணிலும் மைத்திரிபாலவும், மூன்றாவது விடயத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் – இந்த மூன்றாவது விடயத்தைத் தொடாமலேயே, முதலிரண்டு விடயங்களில் மட்டுமே இணக்கப்பாட்டுக்கு வந்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கிமுடித்துவிட அவர்கள் முயற்சிக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் செய்திடுவார்களெனில் — இந்த கூட்டரசாங்கக் குழந்தையைப் பெற்றெடுத்து, ஏதோ ஓர் எதிர்பார்ப்பில் இன்றுவரை அதற்கு நிபந்தனையற்ற அரவணைப்பைக் கொடுத்துவரும் தமிழ் தேசத்திற்குக் கிடைக்கப் போவது எதுவுமே இல்லையா…?

எழுதப்படுகின்ற இந்த அரசமைப்பு யாப்பினைத் தமிழ் மக்களிடம் தாம் எடுத்துவருவோம் என்கிறார் சம்பந்தன் ஐயா. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எத்தகைய தீர்வினையும் தனது கட்சி ஏற்றுக்கொள்ளாது என்கிறார் அவர். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், தமிழ் மக்களோடு சேர்ந்து, அந்தத் தீர்வு யோசனை மீது நிகழ்த்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பின்போது, அதற்கு எதராகத் தமது கட்சியும் வாக்களிக்கும் என்றும் சொல்லுகிறார் ஐயா. ஆனால், கேள்வி என்னவெனில் — தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்ட பின்பு ஐயாவின் கட்சி என்ன செய்யும் என்பதல்ல; மாறாக — தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதான ஒரு தீர்வைப் பெற்றெடுப்பதற்கு ஐயாவின் கட்சி இப்போது என்ன செய்கின்றது என்பதேயாகும். இவ்வளவு காலமும் கூட்டரசாங்கத்தோடு அரவணைத்துக் கிடந்ததன் பெறுபேறு — வெறுமனே, எதிர்க்கட்சி தலைவர், மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் என்ற பதவிகள் மட்டும் தானா…? தமிழ் தேசத்திற்கு மிஞ்சப் போவது – இன்னுமொரு தடவை தென்னிலங்கையால் ஏமாற்றப்பட்டார்கள் என்ற அவப்பெயர் மட்டும் தானா…?

இந்தக் கூட்டரசாங்கக் குழந்தையைப் பிரசவிப்பது தமிழ் தாய் ஏற்றுக் கொண்ட ஒரு தற்காலிகப் பணி. வாடகைத் தாய் பணிக்கான உடன்பாடு இதயங்களில் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. குழந்தையைப் பிரசவிப்பதற்கான பிரதியுபகாரமாகத் தமிழ் தாயின் இறைமை அங்கீகரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அது நம்பிக்கையின் அடிப்படையிலான உடன்பாடு என விபரிக்கப்பட்டது. ஆனால், இப்போது, வெறுமனே சலுகைகளுடனும் வசதிகளுடனும் மட்டுமே கழற்றிவிடப்படக்கூடிய ஏது நிலைகள் தெரிகின்றபோது — இனியாவது நாம் பேரங்கள் பேசத் தொடங்க வேண்டும். இதயங்கள் நேர்மையாகச் செயலாற்ற மறுக்கின்ற போது, மூளையைக் களத்தில் இறக்கி சாதுர்யமாகச் செயலாற்ற வேண்டும். எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வைத் தருகின்றார்கள் என்று பின்னர் புலம்புவதற்குப் பதிலாக, ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை முன்னரே உறுதிப்படுத்திப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கினால் மஹிந்த ராஜபக்‌ஷ சிங்களவர்களைக் குழம்புவார் என்று கொழும்பு சொல்லுமானால், தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படாதவிடத்து விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் தமிழர்களைக் குழப்புவார்கள் என்று திருப்பிக் கூறும் திராணி இருக்க வேண்டும். ‘எழுக தமிழ்!’ போன்ற பேரணிகளால் சிங்களவர்கள் பிரச்சினைப்படுகின்றார்கள் என்று கொழும்பு கூறுமானால், முதலில் பிரச்சினைப்பட்டுப் பேரணி போனது தமிழர்கள் அல்ல என்பதை உரைக்கும் துணிவு இருக்க வேண்டும். தமிழ் அரசியலைத் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல கொழும்புக்கும் பிற நாடுகளுக்கும் பாசாங்கு செய்யாமல், உரியதை உரிய முறையில் கொழும்பு செய்யாதவிடத்து, தமிழ் தேசத்தில் விடயங்கள் கைமீறிப் போகும் என்று பயமுறுத்தும் தினாவெட்டு இருக்க வேண்டும். இதயபூர்வ உடன்பாடுகளுக்குத் துரோகம் இழைக்கப்பட்டால், நேரக்கூடிய ஆபத்தை எடுத்துரைக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.

விக்னேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும் பகைவர்களாகப் பார்க்காமல், தமிழ் “வன் சக்தி”யின் குறியீடாக நோக்கப்படும் அவர்களின்பால் தமிழ் தேசம் ஈர்க்கப்பட்டால், தாம் அங்கம் வகிக்கும் கூட்டரசாங்கத்திற்கு வரக்கூடிய நெருக்கடியைத் தேவையான எல்லாத் தரப்புக்களுக்கும் விளக்கி — தமது “மென் வலு”வால் ஏற்படுத்தியுள்ள நல்லுறவுகளையும் பயன்படுத்தி — சம்பந்தன் ஐயாவும் சுமந்திரனும் சாதுர்யமாகக் காரியங்களைச் சாதிக்க வேண்டும்.

‘எழுக தமிழ்!’, தமிழ் மக்கள் பேரவை, விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்ற வகையறாக்களையெல்லாம் – பிரச்சினைகளாகவும், தொல்லைகளாகவும் கருத்திலெடுத்துச் செயலிழக்கச் செய்ய முயற்சிப்பதில் தலைமைத்துவப் பண்பு எதுவுமே இல்லை. தமக்கு வாக்களித்த மக்களுக்குள்ளிருந்தே தன்னியல்பாக எழுகின்ற இந்த எழுச்சிகளையெல்லாம் நேர்மையாக ஊக்குவித்து, அந்த மக்களால் தமக்கு அளிக்கப்பட்ட ஆணைகளை நிறைவேற்றுவதற்கான பலமாகவும் ஆதரவாகவும் மாற்றியெடுப்பதில்தான் தலைமைத்துவச் சிறப்பு இருக்கின்றது.

சம்பந்தன் ஐயாவின் கட்சிக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பித் தமிழ் தேசம் வழங்கிய ஆணை — என்னவிதத்திலாவது தனது இறைமையை மீட்டெடுக்கும்படியாகவே அல்லாமல், மீண்டுமொருமுறை தாம் ஏமாற்றப்பட்டதான செய்தியைக் கொண்டுவரும்படியாக அல்ல. அவ்வாறான ஒரு செய்தியோடுதான் நாளை அவர்கள் வருவார்களெனில் – இன்று அவர்கள் மெளனமாக இருப்பதற்கான காரணம் நக்குண்டு நாவிழந்ததே என்றுதான் நாளைய வரலாறு எழுதும்.

அவ்வாறாகவேதான் வரலாறு எழுதப்பட்டுவிடுமாயின் – தமிழ் தேசத்தின் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கான பிரதான மூலோபாயத்தின் ஒரு கூறாக மட்டுமே இருக்கவேண்டிய வன் போக்கு அணுகுமுறையே, பிரதான மூலோபாயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடக்கூடிய ஏது நிலைகள் உருவாகலாம். நல்லதே நடக்கவேண்டும் என விரும்புகின்ற எவராலுமே விரும்பப்படும் ஒரு கட்டவிழ்வாக அது இருக்காது.

அமெரிக்கத் தேர்தலில் ரொனால்ட் ரம்ப் முன்னிலையில்!

அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அதன்படி தற்போது குடியரசுக்கட்சி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்பே முன்னிலை வகிக்கின்றார்.

அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. சற்று முன்னர் வெளியான முதற்கட்ட முடிவுகளின்படி, கென்டகி, இன்டியானா மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

வோமன்ட் மாநிலத்தில் கிளாரி கிளின்டன் முன்னிலை வகிக்கின்றார்.

இதுவரையில் அறிவிக்கப்பட்ட முதற்கட்ட முடிவுகளின் படி டொனால்ட் ட்ரம்ப் 19 தேர்தல் கல்லூரி வாக்குகளையும் (62 வீதம்) , ஹிலாரி கிளின்டன் 3 வாக்குகளையும் ( 32 வீதம்) பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை!

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகாது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.

இயற்கையான மருத்துவப் பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.

கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு.

இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன.

கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருட்கள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது.

சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை என வழங்கப்படுகிறது.சோற்றுக் கற்றாழை மடல்களை பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப்பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும்.

கற்றாழையை கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால் விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

இந்த அரசாங்கமும் ஏமாற்றுகிறது!

கல்விக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கும் நிதியை பாரியளவில் அரசாங்கம் குறைத்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த வரவு செலவு திட்டத்தை விட இம்முளை வரவு செலவு திட்டத்தில் 40 வீதத்திற்கும் அதிகமான நிதி அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் கல்விக்காக 6 வீதத்தை ஒதுக்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய போதும் அதனை செய்யாது ஏமாற்றும் வகையிலேயே செயற்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கம் பயங்கரமானது என சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் அந்த சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு குஷ்பு பாராட்டு

இந்தியாவில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.500 மற்ரும் ரூ.1000 நோட்டுகள் இன்று முதல் செல்லாதவையாகிவிட்டன. பழைய நோட்டுகளுக்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பும், அதே வேலையில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பல்வேறு முக்கியத் தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் வேலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மோடியின் இந்த அதிரடி முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

குஷ்பு தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோயாக இருப்பது கருப்பு பணம் என்றும், அதனை வேறோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

‘இத்திட்டத்தினை 4 மாதங்களாக மிகவும் ரகசியமாக செய்துவந்ததற்காக முதலில் பிரதமர் மோடியை பாராட்டியே ஆக வேண்டும்’,‘ இச்செய்தியை கேள்விப்பட்டவுடன் கருப்பு பணம் வைத்திருக்கும் பலரும் கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருப்பர், ஏனெனில் அப்பணம் இப்போதைக்கு வெற்றுக் காகிதம் ஆகியிருக்கும் என்றும், பலரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த அப்பணத்தை அழுதபடியே கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பர்’ என்று கூறியுள்ளார்.

ஆயினும் தினக்கூலியாக வேலை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர், அவர்கள் தங்களது அன்றாட தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்கள் விரல் நகத்தில் பிறை போன்று உள்ளதா? அப்ப இந்த கோளாறு தான்

நம் விரல் நகத்தில் பிறை போன்று வெள்ளை நிறத்தில் இருப்பதை கவனித்துள்ளீர்களா?

அதை வைத்தும், நகங்களின் அமைப்பை வைத்தும் நம் உடல் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்! அது எப்படி என பார்ப்போம்

ஒருவருக்கு நல்ல பளிச்சென்று வெள்ளையாக பிறை போன்று பாதி நகத்தில் இருந்தால் அவர்களுக்கு செரிமானம் மற்றும் தைராய்ட் சுரப்பிகள் பிரச்சனையில்லாமல் இருக்கும்.

நகத்தில் அந்த பிறை போன்றது சிறிய அளவில் இருந்தால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது மற்றும் செரிமான கோளாறு அவர்களுக்கு இருக்கிறது என அர்த்தமாகும்.

விரல் நகத்தில் அந்த பிறை போன்றது நீல நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டத்தில் ஏதாவது சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சிலரின் நகங்கள் வளைந்து காணப்படும். அப்படி இருப்பவர்களுக்கு வைட்டமின் பி-12 மற்றும் இரும்பு சத்து குறைபாடு உள்ளதாக அர்த்தமாகும்.

நகமானது மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு பூஞ்சை தொற்று (Fungal Infection) இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

நகங்கள் நல்ல வெள்ளை நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு கல்லீரல் சம்மந்தமான மஞ்சள் காமாலை, ஈரல் போன்றவற்றில் பிரச்சனை இருக்கலாம்.

நகத்தின் நடுவே கருப்பாக கோடுகள் போல இருந்தால் தோல் புற்றுநோய் உண்டாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அர்த்தம்.

நகங்களில் நடுவே விரிசல் இருந்தால் அவர்களுக்கு தோல் சம்மந்தமான வியாதிகள் இருக்கலாம்.

இலங்கையில் குட்டி சங்ககாரா! தனி ஒருவனாக கலக்கிய சிறுவன்!

இலங்கையில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாருஜன் என்ற வீரர் தனி ஒருவனாக அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அசத்தியுள்ளார்.

கரந்தெனியாவில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான டிவிஷன் 1 கிரிக்கெட் போட்டியில் st benedict’s கல்லூரி அணியும், karandeniya central அணியும் மோதின.

இதில், st benedict’s அணி karandeniya central அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.

ஆட்டத்தில் st benedict’s அணி 85 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியபோது சாருஜன் அணியை சரிவிலிருந்து மீட்டார்.

சிறப்பாக விளையாடிய சாருஜன் 6 பவுண்டரிகளை விளாசி 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்நார்.

சாருஜனக்கு ஆதரவாக 10 நிலையில் களமிறங்கிய Niduk Fernando 21 ஓட்டங்கள் எடுத்து உதவியாக திகழ்ந்தார். இருவரும் கூட்டாக இணைந்து 50 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியுள்ளனர்.