சிறுபிள்ளை சைக்கிள் ஓட்டுவது போன்ற வரவு செலவுத்திட்டம்

அரசாங்கம் சமர்பித்துள்ள வரவு செலவுத்திட்டம் சிறுப்பிள்ளை சைக்கிள் ஓட்டுவது போன்றது என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் எந்த நோக்கமும் இலக்கும் இல்லை.

மக்கள் எதிர்பார்த்த நிவாரணங்கள் எதுவும் வரவு செலவுத்திட்டத்தில் இல்லை.

அத்துடன் இதன் ஊடாக எதிர்காலத்தில் நாட்டில் வாழ்க்கை செலவு பாரதூரமான வகையில் அதிகரிக்கும்.

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் தூர நோக்கற்ற தன்மையும் பலனவீனத்தையும் காணக்கூடியதாக இருப்பதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ரணில் மற்றும் ஹிருணிக்காவின் நகைச்சுவை புன்னகை! காரணம் என்ன?

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கவினால் வாசிக்கப்பட்டது.

வரவு செலவு திட்ட வாசிப்பை தொடர்ந்து தேனீர் விருந்து நேற்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோர் தனியாக சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

இந்த காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளினால் நேற்றைய தினம் தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆவா குழுவுடன் தொடர்புடைய இராணுவத்தினர் கைது செய்யப்பட்டார்களா? : ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பேச்சாளர் தகவல்

ஆவா குழுவில் செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் எந்த  இராணுவ அதிகாரியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவ்வாறு எமக்கு அறிவிக்கப்படவில்லை என்று  இராணுவ பேச்சாளர் பிரிகெடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்  இன்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்:-

கேள்வி:- ஆவா குழுவில் செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இராணுவத்தினர் யாராவது கைதுசெய்யப்பட்டார்களா?

பதில்:- இதுவரை அவ்வாறு எதுவும் எமக்கு அறிவிக்கப்படவில்லை.  அவ்வாறு கைது செய்யப்பட்டால் எமக்கு அறிவிக்கப்படவேண்டும்.

கேள்வி:- கடந்த மூன்று தினங்களாக ஊடகங்களில் இராணுவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றதே?

பதில்:- அது தொடர்பில் எமக்கு  அறிவிக்கப்படவில்லை

கேள்வி:-  குற்றப்புலனாய்வுப்பிரிவு இது தொடர்பில் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- எமக்கு அறிவிக்கப்படவில்லை.

கேள்வி:- அப்படியாயின் சி.ஐ.டி. பொய் கூறுகிறதா?

பதில்:- எமக்கு அறிவிக்கப்படவில்லை என்றே நான் கூறுகின்றேன்.  அவ்வாறு  கைதுசெய்யப்பட்டிருந்தால்  அது தொடர்பில் முறையாக எமக்கு அறிவிக்கப்படும்.

கேள்வி:-  இவ்வாறு கைதுகள் இடம்பெற்றபின்னர்   ஆவா குழுவின் சம்பவங்கள் குறைவடைந்துள்ளதா?

பதில்:- அதனை  நீங்கள்  சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும்  பொலிஸாரிடம் கேட்கவேண்டும்.

அலாஸ்கா நீர்பரப்பில் அன்புச்சண்டையிடும் பனிக்கரடிகள் (படங்கள் இணைப்பு)

அலாஸ்கா நீர்பரப்பில் இரண்டு பனிக்கரடிகள் அன்புச்சண்டையிடும்  புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

குறித்த இரண்டு பனிக்கரடிகளும் சகோதரர்கள்.

பனிக்கரடியானது பனிப்பிரதேசங்களில் வேட்டையாடும் விலங்குகளில் மிக சக்திவாய்ந்த வேட்டையாடும் விலங்காக கொள்ளப்படுகின்றது.

குறித்த இரண்டு சகோதர கரடிகளும் தங்களது வேட்டையாடும் திறனை வளர்த்துக்கொள்வதற்காக தங்களுக்குள் பயிற்சி செய்து வருகின்றது.

பயிற்சி முடிந்ததும் தங்களை கட்டிப்பிடித்து வாழ்த்திக் கொள்கின்றன இந்த பனிக்கரடிகள் இரண்டும்.

இந்த அழாகன புகைப்படங்கள் இணையத்தளங்களில் அதிகமாக பேசப்படுகின்றன.POLAR BEAR CUB RIVALRY POLAR BEAR CUB RIVALRY POLAR BEAR CUB RIVALRY

ஜனாதிபதி இணையத்தளத்தை ஊடுருவிய பாடசாலை மாணவனின் நன்னடத்தை காலம் நீடிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனின் நன்னடத்தை காலத்தை மூன்று வருடங்களுக்கு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

வேர்குரு மறைய எளிமையான வீட்டு வைத்திய குறிப்புகள்!

சந்தனத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து உடலில் தடவி வந்தால்  வேர்குரு குறையும்.

வெங்காயத்தை சாறு எடுத்து வியர்குருவின் மீது தடவி வந்தால் வேர்குரு குறையும்.

மூல்தானி மெட்டி கூட வேர்க்குருவிற்கு சிறந்த வீட்டு மருத்துவமாகத் திகழ்கிறது. 4 டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, 2 டேபிள் ஸ்பூன் பன்னீர், ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். பின் வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில், இந்தக் குழம்பைப் பூசி 30 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.

சந்தனப் பவுடர் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் 2-3 டேபிள் ஸ்பூன் பன்னீர் விட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். பின் அதனை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி உலர விட்டு, குளிர்ந்த நீரால் நன்கு அலசி விடவும்.

பஞ்சு அல்லது பருத்தித் துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, அதனை வேர்க்குரு உள்ள இடங்களின் மீது போர்த்துமாறு மூடிவிடவும். பஞ்சு அல்லது துணியிலுள்ள ஈரம் முழுவதும் உறிஞ்சும் வரை காத்திருக்கவும். இம்முறையை ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முறை செய்யவும். இல்லையெனில் வேர்க்குரு உள்ள இடத்தின் மீது குளிர்ந்த நீரை கொண்டு கழுவலாம். வேர்க்குருவின் அரிப்பிற்கும், எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும் முறை இதுவே.

ஆலமரப்பட்டை வேர்க்குருவை போக்க சிறந்த பொருளாக பயன்படுகிறது. காய்ந்த ஆலமரப் பட்டைகளை எடுத்துக் நன்கு பொடியாக அரைக்கவும். இப்பொடியை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவவும். இது வேர்க்குருவின் அரிப்பிற்கும் எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும்.

முகத்தில் உள்ள அழுக்கை ஒரே நாளில் அகற்ற வேண்டுமா?

ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்­ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை ஏற்படுகிறது. ஏனென்றால், அவர்களின் தோலின் துளைகளில் அதிகளவு ‘செபம்’ நிறைந்து காணப்படுகிறது.

* முகத்தில் தோன்றும் பருக்களை கிள்ளுதல்.

* முறையாக சுத்தம் செய்யாதது.

* தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றாலும் இப்பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ…

வீட்டில் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகள்:

* காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய ‘பேஸ் பேக்’குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது. நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும்.

முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.

* ஓட்மீலுடன் வெள்ளரிச்சாறை கலந்து முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.

* ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (கண்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தவிர்க்க வேண்டும்).

தோல் சிகிச்சை நிபுணரிடம் மேற்கொள்ளும் சிகிச்சை:

மீசோதெரபி மற்றும் மீசோபோடக்ஸ்:

இந்த சிகிச்சை முறையில், மிகச் சிறிய அளவு வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் போடக்ஸ் ஆகியவை நேரடியாக முகத்தில் காணப்படும் தோலில், மிக நுண்ணூசி மூலம் செலுத்தப்படும்.

ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் அனைவருக்கும் பொருந்தாது. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற, இது போதும் என்ற திருப்தியான மனதுடன் இருப்பவர்களுக்கு, வீட்டில் தயாரிக்கப்படும் கடலை மாவு, மஞ்சள் பொடியே போதும்.

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட ஆவா குழு சந்தேகநபர்!

ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் 4 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸார் இதனை தெரிவித்தனர்.

யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் கபில்தாஸ் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தின் 4 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் கொக்குவில் பகுதியில் வைத்து நேற்று இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட நபரை அழைத்துச் சென்ற போது, தப்பிக்க முயற்சித்து பொலிஸ் கான்ஸ்டபிளை இளைஞர் கடித்துள்ளார்.  இதன் போதுகாயப்பட்ட கான்ஸ்டபிள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன், இளைஞரை இன்று வெள்ளிக்கிழமை (11) யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கைகளை மிருதுவாக்கும் அரோமா ஆயில் மெனிக்யூர்

ஹாட் ஆயில் மெனிக்யூர் பெரிய ஸ்பாக்களில் செய்யப்படும் கைக்கான ஸ்பா. இது விரல்களை ஆரோக்கியமாக வளரச் செய்யும். கரடுமுரடான கைகள் பஞ்சு போல் மாறும். கைகளில் உள்ள வறட்சியை போக்கி ஊட்டம் அளிக்கும். இந்த ஸ்பாவை வீட்டிலேயே செய்யலாம். எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் – சம அளவு
பாதாம் எண்ணெய் – 5 ஸ்பூன்
விட்டமின் ஈ மற்றும் ஆலிவ் எண்ணெய் – சம அளவு
தேயிலை மர எண்ணெய்
விட்டமின் ஈ கேப்ஸ்யூல்
ரோஜா இதழ்கள்

முதலில் எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலக்குங்கள். பிறகு விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து அதிலுக்கும் எண்ணெயை கலவை எண்ணெயில் போடவும்.

இந்த கலவையை குறைந்த தீயில் அடுப்பை வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றுங்கள் அல்லது மைக்ரோ வேவில் வைத்தால் 8 நொடிகள் சூடுபடுத்தவும்.

பிறகு இந்த எண்ணெயில் ரோஜா இதழ்களை போடவும். சில துளி லாவெண்டர் எண்ணெயை ஊற்றவும். இதில் உங்கள் கைகளை மூழ்க வையுங்கள். வெதுவெதுப்பான சூட்டில் உங்கள் கைகளுக்கு இதமாகவும் ரத்த ஓட்டம் பாயவும் உதவும்.

சூடு ஆறியது மறுபடியும் சூடு படுத்தி கைகளை விடவும். 20 நிமிடங்கள் ஆனதும் கைகளை வெளியே எடுத்து கைகளில் உள்ள எண்ணெயை கை முழுவதும் மசாஜ் செய்யுங்கள்.

10 நிமிடம் கழித்து கைகளை கடலைமாவு போட்டு கழுவலாம். உங்கள் கைகளா என ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் கைகள் மிருதுவாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

மாதம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த ஹாட் ஆயில் மெனிக்யூர் செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும். மசாஜ் செய்யும்போது அந்த அரோமா எண்ணெய் சருமத்தால் உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் சுருக்கம் வராமல் கைகளை இளமையாக ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம்.

2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்! அரசியல்வாதிகளின் வாத பிரதிவாதிகள்!

அரசாங்கத்தினால் நேற்று முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வரவு செலவுத் திட்டம் அடிப்படையற்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிக அளவான வரிவிதிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த வரவு செலவுத்திட்டம் மக்கள் சார்பானதாகவும், பொதுவாக நன்மைப் பயக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

அத்துடன் இதன் ஊடாக வடக்கு மக்களின் தேவைகளும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க உறுப்பினர்களால் இந்த வரவு செலவுத்திட்டம் வரவேற்கப்பட்டுள்ளது.

அடிப்படையற்றது என்ற கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த முன் வைத்துள்ளது சிலர் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களது யோசனைகளின் கலப்பாக இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேநேரம் வரவு செலவுத் திட்டமானது, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் இட்டுச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொது மற்றும் தனியார் துறைகளுடன் நாடு எவ்வாறு முன்னேறும் என்பதை இந்த வரவு செலவுத்திட்டம் தெளிவாக சுட்டிக்காட்டி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பொது மக்களின் வருமான மட்டம் எவ்வாறான வகைகளில் உயர்த்தப்படும் என்பதை இந்த வரவு செலவுத்திட்டம் தெளிவாக கூறவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வரவு செலவுத்திட்டத்தி கூறப்பட்டுள்ள சில வாழ்வாதர வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளும், கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்ட நாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள்.

மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

`ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்’.

பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.

கடலில் குளித்துக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டவர் பலி

மிரிஸ்ஸ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சுகயீனமடைந்த வெளிநாட்டவர் ஒருவர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 69 வயதுடைய பிரான்ஸ் நாட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு வருகை ந்துள்ளார்.

நேற்று முன் தினம் மிரிஸ்ஸ பிரதேச சுற்றுலா விடுதிக்கு அருகில் உள்ள கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் திடீரென சுகவீனமடைந்துள்ளார்.

பின்னர் அவர் கரைக்கு வந்து அமர்ந்த நிலையில் மீண்டும் எழுந்து செல்ல முடியாமல் கீழே விழுந்ததனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகம பொலிஸார் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்ள காரணம்

பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர் ஒருவர் எழுதியிருந்தார். உலகம் முழுவதும் 2.7 மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது.

என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.

ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.

செக்ஸ் விஷயத்தில் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள்.

இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் நிறைய வேற்றுமை இருக்கிறது. பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் ஆண்கள் முதலில் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள்.

ஆனால் பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்படைக்க முன்வருவார்கள். இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்வதுதான் நல்லது. இதற்கான எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்ல வரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தால் யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள்.

பயத்தை விரட்ட வழிபட வேண்டிய தெய்வம் எது?

வேண்டாத சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொண்டு சிலர் இரவும் பகலும் பயத்தில் மூழ்கிக் கிடப்பர். ஆனால், பயத்திற்கு நியாயமான காரணம் ஏதும் இருக்காது. தேவையற்ற பயத்தில் இருந்து தப்பிக்க வழிபடவேண்டிய தெய்வம் காளி. காளியை வழிபட்டால் பயம் பஞ்சாய் பறந்து விடும். தேவையற்ற பயமுள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் காளிகோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

காளி கோயில் அருகில் இல்லையென்றால் துர்க்கையை வழிபடலாம். எலுமிச்சம்பழம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஓம் காளி என்ற மந்திரத்தை 108 அல்லது 1008 முறை காளி அல்லது துர்க்கை முன் அமர்ந்து ஜெபியுங்கள். அந்த பழத்தைப் பிழிந்து வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து பிரசாதமாக அருந்துங்கள். நிச்சயம் பயம் உங்களை விட்டு ஓடிவிடும்.

உடல் எடை குறைய கிரீன் டீயை எப்படி குடிக்க வேண்டும்

கிரீன் டீயை குடிப்பது இப்போது ஃபேஷனாகிவிட்டது. உடலுக்கு நல்லது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. உடல் எடை குறைக்கும். இளமையை நீட்டிக்கும் உடலுக்கு நல்லது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட், ஃப்ளேவினாய்டு இருக்கிறது. கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான் சற்றும் மாற்றுக் கருத்தில்லை.

drink green tea reduce weight

ஆனால் அதனை குடித்த பின்னும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று கவலைப்படுவதுண்டு. எப்படி குடிக்க வேண்டும் என்ற ட்ரிக்கை தெரிந்து கொண்டால் உடல் எடையை குறைக்கலாம். அதன் வெப்ப நிலை, வாசனைப் பொருட்கள் என பலவிஷயங்கள் அதன் சத்துக்களை பாதிக்கின்றது என தெரியுமா? அதனை எப்படி தெரிந்து கொள்ளலாமென படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது சாமந்தி, பெர்ரி டீ என பல வகை வாசனை பொருட்களை சேர்த்து கிரீன் டீ கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால் அந்த பொருட்கள் கிரீன் டீயிலுள்ள சத்துக்களை பாதிக்கும். சுத்தமான வேறு வாசனைகள் கலக்காத கிரீன் டீயே உடலுக்கு முழு சத்தையும் தரும்.

சிலருக்கு சூடாக குடிப்பதை விட கிரீன் டீயை தயார் செய்து சில்லென்று ஐஸ் கட்டி போட்டு குடிப்பார்கள். ஐஸ் கட்டி தேயிலையின் சத்துக்களை நீர்த்துப் போகச் செய்யும். வெதுவெதுப்பான நிலையில் கிரீட் டீயை குடிப்பதே உடலுக்கு நல்லதை தரும்.

தேயிலை தூள் எப்போது பாக்கெட் செய்யப்படுகிறது என்பது மிக முக்கியம். ஏனென்றால் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் 6 மாதத்திற்கு பின் அதன் சக்தியை இழந்துவிடும். ஆகவே பாக்கெட் தயாரிக்கப்பட்ட சில மாதங்களில் உபயோகித்துவிடுங்கள். அதன் பின் உபயோகித்தாலும் பயன் இருக்காது.

நிச்சயமாக .. 1 மி.லி கிரீன் டீ தூளில் 8-10 கப் அளவு தேநீர் தயார் செய்து குடிக்கலாம். டீ பேக்கை விட நேரடியாக தேயிலை தூளை நீரில் கொதிக்க விடுவதால் அதன் பலன் நிறைய கிடைக்கும்.

அதிலுள்ள கேடசின் என்ற பாலிஃபீனால் உடல் எடையை குறைக்கும். குடல்களில் படியும் கொழுப்பை கரைக்கும். புற்று நோயை தடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

அதோடு அதில் விட்டமின் பி, சி, காஃபைன், ஃபோலிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது. இவை ஆரோக்கியமான இளமையான சருமத்தை தருகிறது. மாலைக் கண் நோயை தடுக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. காஃபைன் சக்தியையும் புத்துணர்வையும் தருகிறது.

ட்ரம்ப் வெற்றியின் பின்னணியில் இந்திய இளைஞர்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்ப் வெற்றிக்காக இந்தியர் ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளார்.

லக்னோ ஐஐஎம்-மில் எம்பிஏ படித்தவர் அவினாஷ். இவர் அரசியல் பிரபலங்களின் சமூகவலைதள செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை நிர்வகிப்பதில் திறமை பெற்றவர்.

அரசியல் மீதான ஆர்வத்தினால் முன்னணி தொழில்நுட்ப நிறுவன வேலையை உதறிய அவர், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேர்தல் பரப்புரையில் இணைந்தார்.

இவரது மனைவி அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது விடுமுறையைக் கழிக்க கடந்த 2014-ல் அவினாஷ் அமெரிக்க சென்றார்.

அப்போது அந்த மாகாணத்துக்கு தேர்தல் வர இருந்த சூழலில், தேர்தல் குறித்த ஆய்வினை அவினாஷ் மேற்கொண்டார். அவரது ஆய்வு முடிவுகளின்படியெ குடியரசுக்கட்சியின் டக் டூசி, அம்மாகாண ஆளுநர் தேர்வில் வென்றார்.

இதனால், குடியரசுக்கட்சி அரசியல் பிரபலங்களிடம் நன்மதிப்பைப் பெற்ற அவினாஷ், அரிசோனா மாகாணத்தில் ட்ரம்ப்பின் வெற்றிக்கான உத்தியை வகுக்கும் குழுவில் இடம் பெற்றார்.

அவரது பரப்புரை உத்திகளின்படி செயல்பட்ட ட்ரம்ப், அரிசோனா மாகாணத்தில் 47 தேர்வாளர் வாக்குகளை வென்றதோடு, அதிபர் தேர்தலிலும் வென்றார்.

ட்ரம்பை நேரில் சந்தித்துள்ளதாகக் கூறும் அவினாஷ், அவர் பழகுவதற்கு இனிமையான மனிதர் என்கிறார். மேலும், தான் இந்தியாவைச் சேர்ந்தவன் என்பதையும் ட்ரம்ப் அறிவார் என்றும் கூறுகிறார் அவினாஷ்.

வயிறு கோளாறுகளை போக்கும் இஞ்சி குழம்பு

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3
புளி – சிறிதளவு
பூண்டு – 20 பல்
இஞ்சி – 25 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயம் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிதளவு

செய்முறை :

* முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

* புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.

* கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும்.

* நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

* நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.

* இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.

டேட்டிங் போகக்கூடாது. மகளுக்கு ஸ்ரீதேவி போட்ட கண்டிஷன்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் யாருடனும் டேட்டிங் செல்ல கூடாது என்றும் ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி கண்டிஷன் போட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஜான்வி, பிரபல நடிகர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவை முத்தமிடுவது போன்ற புகைப்படம் வைரலாக பரவியது. ஆனால் தற்போது நடிகையாகிவிட்ட நிலையில் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு ஆளாக கூடாது என்று மகளுக்கு ஸ்ரீதேவி அறிவுரை செய்து வருகிறாராம்.

ஜான்விக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், ஆனால் முதல் படம் ரிலீஸ் ஆன பின்னரே அடுத்த படத்தில் அவர் ஒப்பந்தம் ஆவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன

தோற்றது ஹிலாரி அல்ல ஒபாமா! கறுப்பின தலைவனின் சரித்திரத்தை புதைத்த வெள்ளையர்கள்!

உண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோற்றது ஹிலாரி அல்ல, ஒபாமா என்பதே உண்மை.

குறிப்பாக முதலாளித்து நாட்டை இனி முதலாளித்துவமே ஆள வேண்டும் என அமெரிக்கா துடிப்பு மிகு வெள்ளையனின் வீழ்ந்தது ஒபாமா மட்டுமல்ல கறுப்பினத்தின் வரலாறும்தான்.

முதலாளித்துவம் ஆள வேண்டும் என்பதனை விட இனியொரு கறுப்பின தலைவன் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக அமெரிக்க வெள்ளையர்கள் இருக்கின்றார்கள், என்பதே இத்தேர்தலின் வெளிப்பாடாகும்.

ஹிலாரி வெற்றிப்பெற்றால் அவர் ஒபாமாவின் ஆதரவின் பேரிலே வெற்றிப்பெற்றார் என்றே வரலாறு சொல்லும்.

அரசியல் பின்புலம் இல்லாத ஒருவர் ஜனாதிபதியாகியிருக்கின்றார் என்றால் இதன் பின்னணியில் கறுப்பின கை ஓங்குவதனை அழிக்க வேண்டும் என திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட முடிவே இது.

டிரம்ப்-ன் இந்த வெற்றி முழுக்க முழுக்க வெள்ளை இனத்தவர்களின் ஆதரவாலும், பாரம்பரிய அமெரிக்கர்களின் ஆதரவாலும் மட்டுமே கிடைத்துள்ளது. அமெரிக்கர்கள் தங்களுக்கான அமெரிக்காவை அடைய தனக்கான அதிபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஹிலரியை விட ட்ரம்ப் 1.5 லட்சம் வாக்குகள் குறைவாகவே பெற்றிருக்கிறார். ஹிலரி 59,923,027 வாக்குகளையும், ட்ரம்ப் 59,692,974 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எலக்டோரல் காலேஜ் என்று சொல்லப்படும் மாகாண வேட்பாளர்களின் வாக்குகளில் 279 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் ட்ரம்பால் கைப்பற்றப்பட்டதால், அவரது வெற்றி உறுதியானது.

வெறுமனே சாதாரன பின்புலத்தினை கொண்டவரே ரோனால்ட் ட்ரம்ப்…..

குறிப்பாக 70 வயதான ட்ரம்ப் 1987ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றாலும் 1999ம் ஆண்டு அதில் இருந்து வெளியேறினார். பின்னர், 2009ம் ஆண்டில் மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்து 2011ம் ஆண்டு வரை அதில் நீடித்தார்.

1987ம் ஆண்டிற்கு முன்னர் ஜனநாயகக்கட்சியிலும் டொனால்ட் ட்ரம்ப் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனிடையே 1999 முதல் 2001 வரை சீர்திருத்தக் கட்சியிலும் இணைந்து ட்ரம்ப் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில்தான், 2012ம் ஆண்டு குடியரசுக் கட்சியில் மீண்டும் சேர்ந்த ட்ரம்பிற்கு 2015ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஜனநாயகக்கட்சியின் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்து இன்று 45வது அதிபராக அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

ஹிட்லரின் சாயலை மறைமுகமாக கொண்டுள்ள ரொனால்ட் ட்ரம்பின் எதிர்கால நடவடிக்கைகள் இனி எப்படி அமையப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கறுப்பினத்தவருக்கு என்ன நடக்கப்போகின்றது என்பது கறுப்பினத்தவருக்கும் ஒபாமாவிற்கும் மட்டுமே தெரியும்.

தோற்றது ஹிலாரி அல்ல… கறுப்பினம் ..வென்றது ட்ரம்ப் அல்ல வெள்ளையினம்..

புதிய 2000 ரூபாய் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

புதிதாக வெளிவந்துள்ள 2000 ரூபாய் நோட்டு பழைய ரூபாய் நோட்டுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமாக உள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்க பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து இன்று முதல் புதிய 2000 ரூபாய் நோட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய 2000 ரூபாய் நோட்டு பழைய ரூபாய் நோட்டுகளை விட வித்தியாசமாக அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. இதைபற்றி அனைவரும் தெரிந்துக்கொள்ள குறிப்பாக முக்கிய 14 விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

புதிய 2000 ரூபாய் நோட்டு 166×66 மி.மீ அளவு உள்ளது. இது பழைய 1000 ரூபாய் நோட்டை விட அளவில் சிறியது.

புதிய 2000 ரூபாய் நோட்டு கத்திரிப்பூ நிறத்தில் உள்ளது.

புதிய நோட்டில் மகாத்மா காந்தியின் உருவம் நடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கண் பார்வையற்றோர்க்கு வசதியாக நோட்டின் இடது மற்றும் வலது புறத்தில் ஏழு கோடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டில் குறுக்கே பாதுகாப்புக்காக, இழை பச்சை நிறத்தில் இருக்கும் கோடு தற்போது நீல நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.

 

ரூபாய் நோட்டின் பின்பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் குறியீடு மற்றும் பிரச்சார வாக்கியம் உள்ளது.

ரூபாய் நோட்டின் பின்பகுதியில் மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அதன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

வழக்கம் போல் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் இருக்கும் 15 வகையான இந்திய மொழி, இந்த புதிய ரூபாய் நோட்டிலும் இடம்பெற்றுள்ளது.