அவர் எனது ஜனாதிபதி இல்லை: டிரம்ப் வெற்றியை எதிர்த்து கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

அதேசமயம், அதிருப்தியாளர்கள் தங்கள் எதிர்ப்பினை வெளிக்காட்ட தொடங்கி உள்ளனர். குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்திய சிறிது நேரத்தில், கலிபோர்னியா சான்டா பார்பரா பல்கலைக்கழகம் அருகில், எதிர்ப்பு கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘என்னுடைய ஜனாதிபதி இல்லை, என்னுடைய ஜனாதிபதி இல்லை’ என்று முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெஸ்ட்வுட் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடப்பதாகவும், எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை எனவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்லாந்தில் நடந்த போராட்டம் காரணமாக விரைவு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே திரண்டு வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் டிரம்பை வாழ்த்தி கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் முறையை கூறினார் பஸில்

இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் துரோக செயற்பாடுகளுக்கு, மக்கள் எதிராகியதன் பின்னர் அரசாங்கத்தை மாற்றுவதற்கு அவசியமான தேசிய சக்தி ஒன்றை கட்டியெழுப்புவதற்கு தாம் செயற்படுவதாக பஸில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அம்பாறையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சார கூட்டத்தின்போதே இவ்வாறு கூறினார்.

அங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் முறை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

தேசிய சக்தி ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நன்கு படித்த அறிஞர்களின் ஆதரவு தமக்கு கிடைப்பதாக கூறினார்.

நேரடியாக அரசியலுக்கு வர விரும்பாத எனினும் மாற்றத்தை ஏற்படுத்த அவசியம் உள்ள நபர்கள் எங்களிடம் உள்ளனர் எனவும் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் ட்ரம்ப்பிற்கு குவியும் வாழ்த்துக்கள்! இது தான் அமெரிக்கா…!

அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 8ஆம் திகதிக்கு முதல்நாள் வரை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் சற்று ஹிலாரி பக்கமே சாய்ந்து இருந்தது.

முதல் பெண் அதிப‌ரை வரவேற்க அமெரிக்கா தயாராகிவிட்டது என்று தான் அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால், அமெரிக்கர்கள் தங்கள் மனநிலை வேறு என்று நிரூபித்துள்ளனர்.

ஒரு வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர், மீம்ஸ் நாயகன் என்பதையெல்லாம் தாண்டி டொனால்ட் ஜான் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார்.

ஆம் இது தான் அமெரிக்காவின் மனநிலை. அவர்களுக்கு ட்ரம்ப் போன்றவர்களை தான் பிடித்திருக்கிறது.

ஆரம்பம் முதலே மூன்று விஷயங்களில் தான் ட்ரம்ப் கவனம் செலுத்தினார்.

அவை வெற்றி , ஒப்பந்தம் , சுவர் எழுப்புவது. இதைத்தான் ட்ரம்ப் முன்னிறுத்தி வந்தார்.

இதற்கிடையில் தான் ஜான் ஆலிவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ட்ரம்பின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்தது.

பெண்களைப் பற்றி இழிவாகப் பேசினார் என்ற விஷயமும், இஸ்லாமியர்களை வெளியேற்றுவேன் என்கிற சூளுரையும் ட்ரம்ப்பை கிட்டத்தட்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்க வைக்கும் என்கிற மாயையை அனைவரிடமும் உருவாக்கின.

ட்ரம்ப் தன் மீதான விமர்சனங்களைத் தனக்குச் சாதகமாக மாற்ற என்ன செய்தார் என்பது தான் க்ளைமேக்ஸ். ட்ரம்ப் தனது நிலைப்பாடுகளை எந்த விமர்சனத்துக்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை.

இது தான் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்குமே அவரை பிடிக்க முக்கியக் காரணமானது. எப்போதும் அமெரிக்கர்களின் மனநிலை கொஞ்சம் அழுத்தமானதாகவே இருக்கும்.

அதுதான் அவர்களை உலக அரங்கில் வல்லரசு என்கிற பெயரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதனால் எப்போதும் அவர்களுக்கு விடாப்பிடியாக இருப்பவர்களைப் பிடிக்கும்.

அதோடு வரலாற்றை மாற்றி எழுதவும் விரும்பாத நாடாக இருந்து வந்துள்ளது அமெரிக்கா.

ஒரு பெண்ணை அதிபராக்கிப் பார்க்கக்கூடாது என்பதில் அமெரிக்கர்கள் இன்று வரை ஆணித்தரமாக இருக்கிறார்கள். அதன் விளைவே இத்தனை ஆண்டுகளில் ஒரு பெண் அமெரிக்க அதிபர் ஆகவில்லை.

இதோடு சேர்த்து ட்ரம்பை பலப்படுத்திய விஷயங்கள் வேறு. பேச்சுத்திறன் அவரது உத்திகளில் ஒன்று. பயப்படாத, தடையற்ற கம்பீரமான பேச்சு அவருக்கு.

அதிலும் அமெரிக்காவின் முன்னேற்றத்தை வலியுறுத்தும் அவரின் திடமான ஆரம்பகால பிரசார உரைகள் அமெரிக்கர்களைப் பெரிதும் கவர்ந்தது.

ட்ரம்பின் வெற்றிக்கு இன்னொரு காரணம், அவரது பிராண்ட் இமேஜ். தன்னைப் பற்றிய தாக்கத்தை மக்கள் மத்தியிலும், அவருக்கு அதிக ஆதரவுள்ள மாகாணங்களிலும் குறையாமல் பார்த்துக் கொண்டார்.

அதேபோல் அவர் வலியுறுத்திய விஷயத்தைப் பின்பற்றவும் செய்தார். சில இலக்குகளை எப்படியாவது அடைவது என்று நினைத்து விட்டால், அந்த இலக்குகளைப் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

மற்ற நாடுகளின் கலாச்சாரமும், அமெரிக்க கலாச்சாரமும் வேறு. இந்தியர்களுக்குச் சரியில்லை என்று தோன்றுவது அமெரிக்கர்களுக்குச் சரியாகத் தோன்றலாம்.

இதனையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் ட்ரம்ப். அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரசாரம் செய்த ட்ரம்ப் தனது ஆதரவை தக்க வைத்துக்கொண்டார்.

வித்தியாசமான அமெரிக்கர்களின் மனநிலை

ஒருவருக்குச் சத்தமாக இருப்பது இன்னொருவருக்கு இசையாக இருக்கும் என்பது தான் கூற்று. மற்ற நாட்டினரும் ட்ரம்ப் ஒரு வியாபாரி, உளறு வாயர் எனப் பல விமர்சனங்களை வைத்தாலும் அமெரிக்கர்களில் ஒரு பெரும் பிரிவினருக்கு ட்ரம்ப்பை மிகவும் பிடித்து இருக்கிறது.

அமெரிக்கா முதலாளித்துவ நாடு என்ற பிம்பத்திலிருந்து தன்னை விலக்கி கொள்ள விரும்பாத நாடு. ட்ரம்ப் போன்ற வியாபாரிகளை அமெரிக்கா தள்ளி வைக்காது என்பதை அமெரிக்கா நிருபித்துள்ளது.

அதோடு இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்கள் காலத்தில் மிகப்பெரிய போர்களை அமெரிக்கா நடத்தியுள்ளது. மற்ற நாடுகளிடத்தில் பெரியண்ணன் மனப்பான்மையையும் கடைபிடித்து வந்திருக்கிறது.

அதனைப் புதிதாக வருகிற ஒரு பெண்ணால் செய்ய முடியாது என்ற எண்ணமும், இறுதி நேரத்தில் ஹிலரியின் மீது வீசப்பட்டது.

அதே நேரத்தில் பதிலளிக்க முடியாத சில குற்றச்சாட்டுகளும், ஹிலரியின் உடல் நிலையும் ட்ரம்புக்குச் சாதகமாக அமைந்தது.

என்னதான் ஆரம்பத்தில் வாக்குக்காக உலக நாடுகளை விமர்சித்தாலும், இறுதியில் இந்தியா, மோடி, அமைதி, வேலைவாய்ப்பு என ட்ரம்ப் அடித்த சிக்ஸர்கள் அவருக்கு வாக்குகளானது என்றும் கூறலாம்.

ஒபாமா காலத்தில் அமெரிக்கா பெரிதாக வளரவில்லை. மீண்டும் ஜனநாயக கட்சிக்கு ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கர்கள் நினைத்திருக்கலாம்.

அதனால் தான் அமெரிக்கர்கள் ”மேக் அமெரிக்கா க்ரேட் எகெய்ன் ” என்பதை நம்பி இருப்பார்கள். ஆனால், உங்கள் மேடை பேச்சு அல்ல அமெரிக்க அதிபர் பதவி.

வியாபாரத்தில் நஷ்டம் வந்தால் சரி செய்துவிடலாம். உங்களை வியாபாரியாக இல்லாமல் அதிபராகவே பார்க்கதான் உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறந்த அமெரிக்காவை உருவாக்க வாழ்த்துக்கள் மிஸ்டர் ட்ரம்ப்…

கிண்ணியாவில் அமரும் புத்த பெருமான்- அச்சத்தில் முஸ்லிம்கள்

கிண்ணியா – துறையடியில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் முஸ்லிம்கள் பெரிதும் அச்ச நிலைக்குள்ளாகியிருக்கின்றர்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களை மையமாக கொண்டு நகர்த்தப்படும் புதத்ர் சிலை விபகாரம் தற்பொழுது முஸ்லிம்களின் எல்லைப் பகுதிகளையும் நகர்கின்றமையானது, நாட்டில் பௌத்த மத்தை பரப்பி நாட்டிலுள்ள மக்களின் இன மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கமாக அமையலாம் என பலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் பல சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஒரு சில பௌத்த குடும்பங்கள் கிண்ணியா துறையடியில் வசிக்கும் நிலையில், இங்கு புத்த சிலை வைப்பதனூடாக முஸ்லிம்களின் பூர்வீகத்தை அவர்கள் முற்றாக சுரண்டுவதோடு நில உரிமையும் முழுமையாக பறிபோகின்றது எனவும் அப்பகுதி முஸ்லிம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

யார் இந்த டொனால்ட் ட்ரம்ப்? அறிந்துகொள்வோம் வாங்க….

அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த 1946ஆம் ஆண்டு ஜுன் 14ம் திகதி நியூயார்க் நகரத்தில் ஒரு பெரிய வர்த்தகப் புள்ளிக்கு மகனாக பிறந்தவர்.

டொனால்ட் ட்ரம்ப்

அரசியல் வாசனை இன்றி வளர்க்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க் சிட்டியில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான இளங்கலை பட்டப்படிப்பை 1968ஆம் ஆண்டு படித்து முடித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலை டொனால்ட் ட்ரம்ப் கவனிக்கத் தொடங்கினார்.

அந்தத் தொழிலில் ட்ரம்ப் பெரிய அளவில் வளர்ந்ததோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.

70 வயதான ட்ரம்ப் 1987ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

என்றாலும் 1999ஆம் ஆண்டு அதில் இருந்து வெளியேறினார். பின்னர், 2009ஆம் ஆண்டில் மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்து 2011ஆம் ஆண்டு வரை அதில் நீடித்தார்.

கடந்த 1987ஆம் ஆண்டிற்கு முன்னர் ஜனநாயகக் கட்சியிலும் டொனால்ட் ட்ரம்ப் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இதனிடையே 1999 முதல் 2001 வரை சீர்திருத்தக் கட்சியிலும் இணைந்து ட்ரம்ப் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில்தான், 2012ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியில் மீண்டும் சேர்ந்த ட்ரம்பிற்கு 2015ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஜனநாயகக்கட்சியின் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்து இன்று 45ஆவது அதிபராக அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

யாழில் கைதாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுக்கள் மற்றும் சமூக விரோத செயல்களுடன்தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவுபொலிஸாரால் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

நேற்றும் பலர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மற்றும் நெல்லிடிப்பகுதிகளைச் சேர்ந்த மூவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு திடீரெனச் சென்றகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்த வீட்டைச் சேர்ந்த இளைஞரைக் கைது செய்தனர்.

வீட்டில் மேல் தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் ஒன்றையும் அவர்கள் மீட்டுஎடுத்துச் சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, குழு மோதல் மற்றும் சமூக விரோத குற்றச் செயல்கள்அதிகரித்துள்ளன.

சுன்னாகம் பகுதியில் பொலிஸார் இருவர் அண்மையில் வாள்வெட்டுத்தாக்குதலுக்கு இலக்காயினர்.

இந்நிலையில் இவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை தேடிக் கைது செய்யும்நோக்குடன் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் வந்துள்ளது.

இந்தக் குழுவினரால் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ஏழு பேர்கைது செய்யப்பட்டதாக யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று செவ்வாய் இரு நாட்களிலும் நால்வர்கைதாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றுவரை வெளியான உறுதியான தகவல்களின் படி இதுவரை 11 பேர் பயங்கரவாத குற்றத் தடுப்புபிரிவு விசேட குழுவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவ தரப்பைசேர்ந்த ஒருவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒருவரும் கைதானவர்களில்அடங்குகின்றனர்.

மறக்க முடியல…! வாழவும் பிடிக்கல..! நயன்..நயன்..நயன்…! தவிக்கும் ஹீரோ..?

சிம்பு இப்போது  மிகவும் மாறி விட்டார்…! படபிடிப்புகளுக்கு அரைமணி நேரம் முன்பே சென்று விடுகிறார்.

கேரவனில் போய் உட்காருவது  இல்லை. உதவி இயக்குனர் போல இயக்குனர்களுக்கு உதவி செய்கிறார்.உணவு வீட்டில் இருந்து அம்மா கொடுத்து விடுகிறார்.

அப்பா அவ்வப்போது பேசிக்கொண்டே இருக்கிறார். திருமணம் பற்றி பேசும் போது மட்டும் அப்செட் ஆகி விடுகிறார் அந்த தமிழ் நடிகன்…!

நண்பர்களிடம் முதல் காதல் பற்றி பேசி கண் கலங்குகிறார் என்கிறார்கள். நயனை மறக்கவே முடியல..!

எப்போதும் அவர் நினைவுகள் வாட்டுகிறது என்று கூறி வருத்தப் படுகிறார் சிம்பு..! பாவம் தானே..!

வட மாகாண சபையில் ஒதுக்கீட்டு நிதியில் 50 வீதம் செலவிடப்பட்டுள்ளது! முதல்வர்

வட மாகாண சபைக்கு 2016ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 50 வீதம்செலவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிகாரிகளால் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல் சரியானது தானா? எனஎதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

வட மாகாண சபையின் 65வது அமர்வு நேற்று நடைபெற்றது.

இதன்போது 2016ம் ஆண்டுக்கானமூலதன நிதியில் கடந்த 31.08.2016 வரை சுமார் 38 வீதமான நிதியேசெலவிடப்பட்டுள்ளதாக நிதிக்கூற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே அதற்கான பௌதீக முன்னேற்ற அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர்சி.தவராசா முதலமைச்சரிடம் கோரினார்.

இதன்போதே 50 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.பௌதீகமுன்னேற்றம் 70 வீதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் தவராசா, உங்களுக்கு அதிகாரிகள்வழங்கிய தகவல் சரியானதா? எனக் கேட்டார். தனக்கு அந்தத் தகவல்களில் சந்தேகம்இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, செப்டெம்பர் 30ம் திகதி வரையான நிதிக்கூற்றறிக்கையின் பிரகாரம் 43வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக மாகாண சபை இணையத் தள நிதி முன்னேற்ற அறிக்கையில்அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்திரன் மற்றும், கயல் ஆனந்தி இணையும் “ரூபாய்” – ட்ரெய்லர்

சென்னை பாண்டி பஜாரில் போலீஸ் நிலையம் முன்பு திருநங்கை தீக்குளித்து பலி

பாண்டிபஜார் திருமலைப் பிள்ளை தெருவில் இன்று அதிகாலை 4 திருநங்கைகள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாண்டி பஜார் சப்-இன்ஸ்பெக்டர் டில்லி, போலீஸ்காரர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து வாகனத்தில் வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் திருநங்கைகளிடம் போலீசார் விசாரித்தனர். அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தள்ளு முள்ளும் ஏற்பட்டது.உடனே 3 திருநங்கைகள் தப்பி ஓடி விட்டனர்.

சூளைமேடு நமச்சிவாய புரத்தை சேர்ந்த திருநங்கை தாரா (வயது 40) தனது மொபட்டுடன் நின்று கொண்டிருந்தார். அவரை மொபட்டுடன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அதிகாலை 4.30 மணிக்கு போலீசார் தாராவை வீட்டுக்கு சென்றுவிட்டு காலையில் வந்து மொபட்டை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினர்.

அதற்கு தாரா மறுப்பு தெரிவித்து மொபட்டை உடனே தரும்படி கேட்டார். போலீசார் மறுத்து விட்ட தால் ஆவேசத்துடன் வெளியே சென்ற அவர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி வந்து போலீஸ் நிலையம் முன்பு திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

எரியும் தீயுடன் அவர் அலறி துடித்ததை பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.தீயை அணைத்து கீழ்பாக்கம்  அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி காலை 10.30 மணிக்கு தாரா இறந்தார்.

திருநங்கை தாரா தீக்குளித்ததை அறிந்த திருநங்கைகள் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்ற போது திருநங்கைகள் தாக்கவும் முயற்சித்தனர்.  இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

அப்போது தாரா பலியான தகவல் அறிந்ததும் திருநங்கைகளின் ஆவேசம் அதிகமானது. அவர்கள் போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மறியலும் செய்தனர்.
இதனால் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி முன்பு பெரும் பதட்டம் நிலவியது. போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தடுப்புகளை மீறி ஆவேசத்துடன் சென்ற அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி சென்ற அவர்கள் தங்கள் ஆடைகளை கழற்றி ஆவேசத்துடன் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். ஒரு திருநங்கை அங்கு மெட்ரோ பணி நடக்கும் இடத்திலிருந்து ஒரு பெரிய கல்லை தூக்கி கொண்டு ஓடி வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

இணை கமிஷனர்கள் அன்பு, மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சு நடத்தினர்.

பைரவாவை கலாய்க்கும் விஜயகாந் – வீடியோ

ரெயிலில் குரங்கு வித்தை காட்டிய இளைஞனுக்கு நடந்த கொடூரம்! அதிர்ச்சி வீடியோ

விஜய்யுடன் நடிக்கிறேன், ஆனால் ஒரு கண்டிஷன்.

இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டவர் நயன்தாரா.

அதை தொடர்ந்து வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார், அப்போது நயன்தாரா மார்க்கெட் வேறு, தற்போது வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

அட்லீ இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

நயன்தாரா இதை வைத்தே ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டுவிட்டாராம், அது என்னவென்றால் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தால், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என கண்டிஷன் போடுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

புதிய உச்சத்தில் ஒபாமாவின் செல்வாக்கு

அமெரிக்க அதிபராக இரண்டு முறை பதவி வகித்து வரும் பராக் ஒபாமா விரைவில் ஓய்வு பெறவுள் ளார். புதிய அதிபரை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஒபாமாவின் செல்வாக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாக சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை நடத்தப் பட்ட இந்த கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு சுமார் 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு முறை அதிபர் பதவி வகித்து வரும் ஒரு வருக்கு இந்த அளவுக்கு ஆதரவு கிடைத்திருப்பது மிகவும் அரிது. 2012-ல் இரண்டாவது முறையாக அவர் அதிபர் பதவியில் போட்டி யிட்ட போது கூட இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

ஒபாமாவுடன் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்து வரும் வெள்ளை மாளிகை ஊடக செய லாளர் ஜோஷ் இயர்னெஸ்ட் கூறும் போது, ‘‘உணர்ச்சிவயப்பட்டு இந்தத் தேர்தலில் எந்த முடிவுக்கும் வரக்கூடாது என மக்களிடம் வலியுறுத்தியதால் தான் அவருக்கு ஆதரவு அதிகரித்தது’’ என்றார்.

இந்தத் தேர்தலுக்காக 10 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 17 பிரச்சாரக் கூட்டங்களில் ஒபாமா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் கலங்கிய ஹிலாரி.!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஹிலாரி கிளிண்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் “இந்த குழுவை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். இன்று இரவு எது நடந்தாலும் எனக்காக செயற்பட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்” என கலக்கமான நிலையில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

ரஷ்ய பிரஜை ஒருவர் இலங்கையில் பலி!

கொஸ்கொட – ஹபகல கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜையொருவர் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயரிழந்தவர் 28 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ரஷ்ய பிரஜையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முருகதாஸை கலாய்த்து எடுத்த விஜய்!

இளைய தளபதி விஜய் என்றாலே ஒரு அமைதியான முகம் தான் நியாபகம் வரும். ஆனால், அவருடன் பணியாற்றியவர்கள் அனைவரும் சொல்வார்கள் அவர் எத்தனை ஜாலியான மனிதர் என்று.

இந்நிலையில் விஜய்-முருகதாஸ் கூட்டணியில் செம்ம ஹிட் அடித்த படம் துப்பாக்கி, கத்தி. இதில் கத்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக முருகதாஸ் ஒரு வானொலி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அப்போது விஜய் போன் செய்து தன் பெயரை சொல்லாமலேயே ‘அண்ணா விஜய் சார் பற்றி சொல்லுங்க, எப்படி இவ்ளோ நல்ல படம் எடுக்குறீங்க’ என பேசினார்.

முருகதாஸும் சில நேரம் யார் என்று தெரியாமல் பேசி பிறகு ‘சார் நீங்க தானா’ என சத்தமாக சிரித்து செம்ம கலாட்டாவாக முடிந்தது அந்த நிகழ்ச்சி.

குறைவற்ற செல்வம் வந்தடைய எளிய குபேர பூஜை

ஒரு தூய்மையான மரப்பலகையில் அரிசி மாவினால் ஒன்பது கட்டங்கள் போட்டுக்கொள்ளவும். அதற்குள் அரிசி மாவினாலேயே (இங்கு காட்டியுள்ளபடி) எண்களை எழுதவேண்டும். ஒவ்வொரு எண்ணின்மீதும் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் எண் 1 என்பது மேலே இருக்கவேண்டும். நாணயத்தின்மீது மஞ்சள் குங்குமம் வைக்கவும். பலகைக்கு முன் லட்சுமி குபேரர் படம் வைக்கவும். பின்னர் கீழுள்ள சுலோகத்தை 11 முறை கூறவும்.

“ஓம் யக்ஷாய குபேராய
வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே
தனதான்ய ஸ்ம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா.’

ஒவ்வொரு முறை கூறும்போதும் ஒரு செந்நிற மலரை ஒவ்வொரு கட்டமாக வைத்துக்கொண்டு வரவும். மீதி இரண்டு மலர்களை லட்சுமி குபேரன் படத்திற்கு சமர்ப்பிக்கவும். இந்த பூஜையை தினமும் செய்யலாம்.

அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.

ஆனால் தடைப்படக்கூடாது. அப்படி நேர்ந்தால் மனதினாலாவது வழிபடவேண்டும். பூஜையில் வைக்கும் நாணயத்தை பலகையைக் கழுவும்போது மட்டும் எடுக்கவும். நம்பிக்கையுடன் இந்த பூஜையைச் செய்தால் குறைவற்ற செல்வம் வந்தடையும்.

அதிர்ச்சியில் சிம்பு ரசிகர்கள்- ஏன் இப்படி?

சிம்பு அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளிவந்து தன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் இந்த வாரம் அச்சம் என்பது மடமையடா படம் திரைக்கு வரவிருந்தது.

முன்பதிவு எல்லாம் தொடங்கி பல இடங்களில் ஹவுஸ்புல் கூட ஆகிவிட்டது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பேனர்கள், போஸ்டர்கள் என கலக்கி வருகின்றனர்.

இந்த நேரத்தில் நேற்று மேடி எடுத்த அதிரடி முடிவால், ரூ 500, 1000 பணத்தை கண்டாலே அனைவரும் பயந்து ஒதுங்கி வருகின்றனர்.

இதனால், பல இடங்களில் அச்சம் என்பது மடமையடா, கடவுள் இருக்கான் குமாரு படக்காட்சிகளின் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளின் மனச்சோர்வு கோளாறுகள்

எல்லா வயதினருக்கும் மனச்சோர்வு ஏற்படும். குழந்தை மற்றும் டீன் ஏஜ் பிரிவினருக்கு ஏற்படும் மனச்சோர்வு கோளாறு (Depressive Disorder) குறித்து இப்போது பார்க்கலாம்.

குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவருக்கு, 3 வகை மனச்சோர்வு கோளாறுகள் ஏற்படலாம்.

1. தீவிர மனச்சோர்வு கோளாறு (Major Depressive Disorder)
2. தொடர்ந்திருக்கும் மனச்சோர்வு கோளாறு (Persistent Depressive Disorder)
3. சீா்குலைக்கும் மனநிலை கோளாறு (Disruptive Mood Dysregulation Disorder)

குழந்தைகள் வளரும் பருவத்தில், குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் அவ்வப்போது சோகமாக உணர்வது இயற்கையே. பிரச்சனைகள் மற்றும் தோல்விகளை சந்திக்கும் போது கவலையாகவும் கோபமாகவும் உணா்வதும் இயல்பே. நாளாக ஆக, இவ்வித எதிர்மறை உணா்வுகள் மறைந்து போய்விடும். இது எல்லோரும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் உணா்வுகள்தான். ஆனால், சோகம்/ மனவருத்தம்/ எரிச்சல் மனநிலை பலநாட்கள்/

வாரங்கள் தொடா்ந்து நீடித்து, அன்றாட வாழ்க்கை, பள்ளி படிப்பு, நட்பு போன்றவற்றை பாதிக்கும் போது, அது மனச்சோர்வு கோளாறாக இருக்கலாம். குறிப்பாக, ஏற்கெனவே விருப்பப்பட்டு ஈடுபட்ட விஷயங்களில் பிடித்தம் இல்லாமல் போவது ஒரு முக்கிய அறிகுறி.
வேறு முக்கிய அறிகுறிகள்…

1. காரணமின்றி மிகுந்த கவலை அடைவது
2. சிறு வேலைகளை செய்வதற்குக் கூட தெம்பில்லாமல் சோர்ந்து போவது
3. முன்பு சந்தோஷம் கொடுத்த விஷயங்களை இப்போது ரசிக்க முடியாமல் போவது
4. குடும்பம் / நண்பர்களுடன் ஒட்டாமல் தனித்திருப்பது
5. ஒருவித எரிச்சல் உணா்வுடனே இருப்பது
6. யோசிக்கவோ / கவனமோ செலுத்த முடியாமை
7. குறிப்பிடத்தக்க எடை அதிகரித்தல் / குறைதல் (குழந்தைகள் எதிர்பார்த்த அளவு எடை ஏறாமல் இருப்பது). எ.டு: ஒரு மாத காலத்தில், எடையில் 5 சதவிகிதம் வரை மாறுதல் தெரிவது)
8. சாப்பிடுவதில் மிகக்குறைந்த / அதிக  ஆர்வம்
9. தூங்கும் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் (தூக்கம் வருவதிலோ / எழுந்து கொள்வதிலோ பிரச்னை)
10. குற்றவுணா்வு / தாழ்வு மனப்பான்மை (எதற்கும் தகுதியில்லாதது போன்ற உணர்வு)
11. சிகிச்சையளித்தும் பயனளிக்காத உடல்ரீதியான தொந்தரவுகள் / வலிகள்
12. சாவு / தற்கொலை எண்ணங்கள்
13. அழுவது
14. தனிமையாக உணர்வது
15. தொடர் கவலை / நம்பிக்கையற்ற நிலை
16. பள்ளி, குடும்பம், நண்பர்களுடன் எந்த செயல்பாடுகளிலும் திறன்பட செயல்படமுடியாத நிலை.

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் 5க்கு மேற்பட்ட அறிகுறிகள் 2 வாரத்துக்கு மேல் தொடர்ந்து காணப்பட்டால், அது தீவிர மனச்சோர்வு கோளாறாக இருக்க வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல… சுற்றி இருப்பவர்களுக்கும் கோளாறின் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியும்.