உங்கள் விரல் நகத்தில் பிறை போன்று உள்ளதா? அப்ப இந்த கோளாறு தான்

நம் விரல் நகத்தில் பிறை போன்று வெள்ளை நிறத்தில் இருப்பதை கவனித்துள்ளீர்களா?

அதை வைத்தும், நகங்களின் அமைப்பை வைத்தும் நம் உடல் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்! அது எப்படி என பார்ப்போம்

ஒருவருக்கு நல்ல பளிச்சென்று வெள்ளையாக பிறை போன்று பாதி நகத்தில் இருந்தால் அவர்களுக்கு செரிமானம் மற்றும் தைராய்ட் சுரப்பிகள் பிரச்சனையில்லாமல் இருக்கும்.

நகத்தில் அந்த பிறை போன்றது சிறிய அளவில் இருந்தால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது மற்றும் செரிமான கோளாறு அவர்களுக்கு இருக்கிறது என அர்த்தமாகும்.

விரல் நகத்தில் அந்த பிறை போன்றது நீல நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டத்தில் ஏதாவது சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சிலரின் நகங்கள் வளைந்து காணப்படும். அப்படி இருப்பவர்களுக்கு வைட்டமின் பி-12 மற்றும் இரும்பு சத்து குறைபாடு உள்ளதாக அர்த்தமாகும்.

நகமானது மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு பூஞ்சை தொற்று (Fungal Infection) இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

நகங்கள் நல்ல வெள்ளை நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு கல்லீரல் சம்மந்தமான மஞ்சள் காமாலை, ஈரல் போன்றவற்றில் பிரச்சனை இருக்கலாம்.

நகத்தின் நடுவே கருப்பாக கோடுகள் போல இருந்தால் தோல் புற்றுநோய் உண்டாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அர்த்தம்.

நகங்களில் நடுவே விரிசல் இருந்தால் அவர்களுக்கு தோல் சம்மந்தமான வியாதிகள் இருக்கலாம்.

இலங்கையில் குட்டி சங்ககாரா! தனி ஒருவனாக கலக்கிய சிறுவன்!

இலங்கையில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாருஜன் என்ற வீரர் தனி ஒருவனாக அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அசத்தியுள்ளார்.

கரந்தெனியாவில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான டிவிஷன் 1 கிரிக்கெட் போட்டியில் st benedict’s கல்லூரி அணியும், karandeniya central அணியும் மோதின.

இதில், st benedict’s அணி karandeniya central அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.

ஆட்டத்தில் st benedict’s அணி 85 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியபோது சாருஜன் அணியை சரிவிலிருந்து மீட்டார்.

சிறப்பாக விளையாடிய சாருஜன் 6 பவுண்டரிகளை விளாசி 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்நார்.

சாருஜனக்கு ஆதரவாக 10 நிலையில் களமிறங்கிய Niduk Fernando 21 ஓட்டங்கள் எடுத்து உதவியாக திகழ்ந்தார். இருவரும் கூட்டாக இணைந்து 50 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியுள்ளனர்.

இளம்பெண்ணை கூட்டாக பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு 7000 சவுக்கடி

சவுதி அரேபியாவில் பாலியல் கொடுமை செய்த நான்கு பேருக்கு 7000 சவுக்கடி மற்றும் 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெத்தா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நான்கு பேர், உள்ளே இருந்த பெண்ணின் கணவனை மின்சார வயரினால் கட்டிப்போட்டுள்ளனர்.

பின்னர் அந்த வெளிநாட்டு பெண்ணை தாக்கி, அவரது கணவர் மற்றும் மகளின் முன்னால் நிர்வாணமாக்கி நான்கு பேரும் கூட்டாக பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர்.

வீட்டிற்குள் நுழைந்த நால்வரும் முதலில் 10,000 ரியால் பணம் மற்றும் எட்டு மொபைல் ஃபோன்களுடன் தப்பி சென்றுள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து கத்தி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு ஜெத்தா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்த நால்வரில் ஒருவருக்கு 2500 சவுக்கடிகளும், 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூவரில் இருவருக்கு தலா 1,500 சவுக்கடிகளும், 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நான்காவது நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,5000 சவுக்கடிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக உள்ள சவுதியில் பாரபட்சமின்றி தண்டனைகள் வழங்கப்படும்.

கடந்த மாதம் ஆட்சியில் உள்ள அல்-சாத் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் தவறு செய்ததற்காக சவுக்கடியும், பின்னர் மற்றொரு இளவரசருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசி பலன் 09-11-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத  சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புதிய இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய  ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். சாதிக்கும்  நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று  முடியும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.  நிம்மதியான நாள்.

  • கடகம்

    கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்து போகும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது  சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் வந்து நீங்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய  நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை  வெற்றியடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை  துளிர்விடும் நாள்.

  • கன்னி

    கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.  உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திடீர்  யோகம் கிட்டும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட  நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.  கனவு நனவாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்:  பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு அலைச்சல், வேலைச்சுமை வந்து நீங்கும். பழைய பிரச்னையில் ஒன்று தீரும்.  வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • தனுசு

    தனுசு:  துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.  வாகன வசதிப் பெருகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு  ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

  • மகரம்

    மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு  வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்:  ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும்.  வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வந்து போகும். நாவடக்கம் தேவைப்படும்  நாள்.

  • மீனம்

    மீனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வெளிவட்டாரத்தில்  விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்தபொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில்  சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

 

முதல் முத்தம்.. எப்படித் தரணும் தெரியுமா…?

உங்களுக்கு இது முதல் முத்தமா? அப்படியானால் ஒவ்வொரு விதத்திலும் அது உங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைய வேண்டுமல்லவா? முதல் முத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு காரணம் அது அந்த ஆண் அல்லது பெண்ணின் மீது கடைசி வரை அழியாத ஒரு முத்திரையை பதிக்கும்.

முதல் முத்தம் என்பது எப்போதும் மென்மையாக, மறக்க முடியாத, எல்லாவற்றையும் விட உணர்ச்சி ரசம் பொங்க இருக்க வேண்டும்.

அமைதியாக, ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை உங்கள் காதலன் அல்லது காதலி லேசாக யூக்கிக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள். முதல் முத்தம் கொடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்….

நாக்கு:

முதல் முத்தத்திலேயே ஆண்கள் தங்களின் நாக்கை பெண்களின் வாய்க்குள் ஒட்டிக் கொண்டால் அவர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் முதல் முத்தம் கொடுக்கும் போது உங்கள் நாவின் சுவையை அவர்கள் அறிய வேண்டாமே!

எச்சில்:

இது சற்று எரிச்சலை கூட ஏற்படுத்தும். முதல் முறை முத்தமிடும் போது உங்கள் காதலன் அல்லது காதலியின் வாயில் அதிகளவிலான எச்சிலை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுவாசம்:

உங்கள் சுவாசத்தில் ஏதேனும் மாறுதல் இருந்தால், யாருக்கு தான் உங்களுக்கு முத்தம் கொடுக்க பிடிக்கும். அதனால் முத்தமிடும் போது, உங்கள் சுவாசம் நன்றாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நீண்ட நேரம்:

உங்கள் முத்தத்தை நீண்ட நேரத்திற்கு வளர்க்காதீர்கள். முதல் முத்தம் எப்போதும் சிறிய மற்றும் இனிய முத்தமாக இருக்க வேண்டும். ரொமான்ஸ் விஷயத்தில் உங்களை நன்கு அறிய அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு அளியுங்களேன்.

கழுத்து:

முதல் முத்தம் கொடுக்கும் போது, கைகளை அங்கே இங்கே என அலைய விடாதீர்கள். முதல் முத்தம் கொடுக்கும் போது பலரும் செய்யும் தவறு இது. உங்கள் கைகளை அவர் கழுத்தில் அல்லது முகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நெருக்கமாக:

இரண்டு பேருக்கும் சற்று இடைவெளி இருப்பதில் தவறில்லை. முதல் முத்தத்தின் போது, இருவரும் உடல் ரீதியாக மிகவும் நெருக்கத்துடன் இருக்க வேண்டாம். அது எதிர்மறையான பல எண்ணங்களை உண்டாக்கி விடும்.

கண்கள்:

கண்களை மூடிக்கொண்டால் அந்த தருணத்தின் உணர்ச்சியையும் வெப்பத்தையும் அனுபவிக்க முடியும். அதனால் கண்களை மூடிக்கொண்டு ஆழமாக மூச்சு விடுவது முதல் முத்தத்தில் முக்கியமானது.

இடம் முக்கியம்:

முதல் முத்தம் என வரும் போது, அதற்கான இடம் மிகவும் முக்கியம். உங்கள் இருவருக்கும் அந்த அதிசய தருணத்தை அனுபவிக்க அது ஒரு விசேஷ இடமாக அமைய வேண்டும்.

அனுமதி:

முதல் முறை உங்கள் காதலன் அல்லது காதலிக்கு முத்தம் கொடுக்க வேண்டுமென்றால் அவர்களிடம் அனுமதி கேட்காதீர்கள். அது அபத்தமாக தோன்றும். மேலும் உங்களை நெளிய வைக்கும் நிலைக்கு தள்ளி விடும்.

மென்மையாக:

முதல் முத்தத்தை திறந்த வாயுடன் நேரடியாக ஆரம்பித்து விடாதீர்கள். இரண்டு உதடுகளையும் இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். பின் உணர்ச்சியுடன் வெப்பத்துடன் மென்மையாக முத்தம் கொடுங்கள்.

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி யார்? இன்னும் சில மணித்துளிகளில் வெளியாகும் முடிவு

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவுகள் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அடுத்த சில மணித்துளிகளில் வாக்கு எண்ணிக்கை துவங்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த தேர்த்லில் முக்கிய வேட்பாளர்களாக களம் கண்டுள்ள ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் பொதுமக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

ஆனால் பெரும்பாலானவர்களின் கருத்துக்கள்படி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனிடையே குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தமது மனைவியுடன் வாக்களித்த பின்னர் தெரிவித்துள்ள கருத்துகள் இதையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.

”தேர்தலின் முடிவை ஏற்றுக் கொள்வேன். எனக்கு எத்தகைய சூழ்நிலை அமையும் என்பதை எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். அதிகாரம் தொடர்பான மாற்றங்கள் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். வரலாற்றில் நான் இடம்பிடித்ததிற்கு மகிழ்ச்சியடைகிறேன்.” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போது பெரும்பாலான மாகாணங்களில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் துவங்கியுள்ளன.

பிரபாகரனின் படத்துடன் வெளிவந்த பிரபல வங்கியின் டெபிட் கார்ட்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை பிரபல வங்கியான பார்க்ளேஸ் என்னும் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெபிட் கார்டில் அச்சடித்து தர முன்வந்துள்ளது. இதனால் பெரும் பரபர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டினை தலைநகராக கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கி ஒரே நாளில் ஒட்டுமொத்த தமிழர்களின் வரவேற்பை பெற்றுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நீண்ட நாட்கள் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் பிரபாகரனின் புகைப்படத்தை அச்சிட்டு தருவதாகவும், தங்கள் கார்டுகளில் பிரபாகரனின் புகைப்படத்தை அச்சிட பலர் முன்வந்துள்ளதாகவும் வங்கி அறிவித்துள்ளது.

போராட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கமா?

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் துறையைச் சேர்ந்த படையினர் ஒய்வூதியம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து கடந்த 31ம் திகதி (ஒக்டோபர் மாதம்) கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தமது கோரிக்கை நிறைவேறும் வரையும் இப்போராட்டத்தைத் தொடரப் போவதாகக் கூறி மறியல் போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் கடமையின் போது அங்வீனமடைந்தவர்கள். ஆனால் பாதுகாப்பு சேவையில் 12 வருடங்களைப் பூர்த்தி செய்யாதவர்கள். இடைநடுவில் சேவையிலிருந்து விலகியவர்கள்.

இவர்கள் இப்போது இம்மறியல் போராட்டத்தை முன்னெடுத்த போதிலும், இவர்களது பிரச்சினை 2008ம் ஆண்டு முதல் நீடித்து வருகின்றது.

அக்காலப் பகுதியில் இவர்களது இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அன்றைய அரசு நடவடிக்கை முன்னெடுக்கவில்லை. ஆனால் இவ்வாறான போராட்ட நடவடிக்கைகளில் இவர்கள் அப்போது ஈடுபடவில்லை. இது மறைக்க முடியாத உண்மை.

இருந்த போதிலும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அங்கவீனமடைந்த இப்படையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அவர்களை வரவழைத்து கலந்துரையாடி கேட்டறிந்தது.

அச்சமயம் இவர்கள் 28 கோரிக்கைகளைப் பாதுகாப்பு அமைச்சிற்கு முன்வைத்தனர். அவற்றில் 25 கோரிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

எஞ்சிய மூன்று கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி, அமைச்சரவை அங்கீகாரத்துடன் தீர்வினைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன் விளைவாக அங்கவீனமடைந்த படையினர் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்று எஞ்சி இரு-ந்தது. அக்கோரிக்கை 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தீர்த்து வைக்கப்படும் என்று ஜனாதிபதியினாலும் அரசாங்கத்தினாலும் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அங்கவீனமடைந்த இப்படையினருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான சட்டத்திலுள்ள ஓரிரு ஷரத்துக்களில் திருத்தங்களை செய்ய வேண்டும்.

அதேநேரம் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பணமும் மிக அவசியமானது. அப்பணத்தை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவே பெற்றுக் கொள்ள முடியும்.

இக்காரணங்களின் அடிப்படையில் தான் இக்கோரிக்கை 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது ‘ என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று முன்தினம் தெரிவித்திருக்கின்றார்.’

அங்கவீனமடைந்த படையினரின் இக்கோரிக்கைைய நிறைவேற்றுவது தொடர்பில் வாக்குறுதி அளித்ததோடு நின்று விடாமல் அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது’ என்றும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

இருந்தும் இவற்றைப் பொருட்படுத்தாமல் தான் இவர்கள் கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தி-ல் ஈடுபட்டதோடு உண்ணாவிரதத்தையும் ஆரம்பித்தனர்.

இவ்வாறான சூழலில் பொலிஸார், இப்படையினர் புறக்கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியொன்றை நடாத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அவ்வாறு பேரணி நடாத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் கோரினர்.

பொலிஸாரின் இக்கோரிக்கையைப் பரிசீலனை செய்த நீதவான், அங்கவீனமடைந்த படையினர் முன்னெடுத்து வரும் போராட்டம் இதுவரையும் பொதுமக்களுக்கு இடையூறாக அமையவில்லை.

அதனால் தடையுத்தரவு வழங்க முடியாது’ எனக் குறிப்பிட்டார்.இதேநேரம்,இப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி-ய ஐந்து பேர் தமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சுமுகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

என்றாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இவர்களது போராட்டத்திலும் அற்ப அரசியல் இலாபம் பெற்றிடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவ்வாறான சூழலில் நல்லாட்சி மீது பொறாமை கொண்ட சிலரும், சிங்கள ராவய மற்றும் ராவணா பலய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் காலிமுகத் திடலில் கூடி தடைகளையும் மீறி ஜனாதிபதி செயலகத்தினுள் அத்துமீறி பிரவேசிக்க முயற்சி செய்தனர்.

இதன் போது பொலிஸாருடனும், ஜனாதிபதி செயலகப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடனும் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதன் விளவாக பதற்ற நிலைமை ஏற்பட்டது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவென கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும், தண்ணீரைப் பீச்சி அடிக்கவும் வேண்டிய நிலைக்கு பொலிஸார் உள்ளாகினர்.

ஆனால் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளையும் பொருட்படுத்தாது இப்போராட்டத்தை முன்னெடுத்த அங்கவீனமடைந்த படையினரின் இப்போராட்டத்தை வன்முறை நிலைமைக்கு மாற்றியதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதேநேரம் இப்படையினர் மறியல் போராட்டத்தை முன்னெடுத்தமைக்கு அரசியல் பின்நோக்கமே காரணம் என்று மக்கள் கருதுகின்றனர். அவ்வாறான நோக்கத்தில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் அது இப்படையினரின் அர்ப்பணி-ப்புக்களைப் பெறுமதியற்றதாக்கி விடும் என்பதே பரவலான அபிப்பிராயம்.

அதன் காரணத்தினால் அங்கவீனமடைந்த படையினர் தமது போராட்டத்தில் எவரும் அற்ப அரசியல் இலாபம் தேடிட இடமளித்திடக் கூடாது. அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஞாபகசக்தியினை வளர்ப்பது எப்படி!

மூளை எல்லோருக்கும் உள்ளது. அதுதான் உடலின் தலைமை நிலையம். மூளையின் கூர்மையும், நலமும், வளமும் அதன் செயல் திறனும் நன்றாக அமைய கீழ்கண்டவற்றை ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டும்.

1.தினமும் ஒருவாழைப்பழம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். காரணம், இதிலுள்ள “ட்ரிப்டோபன்’’, “டைரோசின்’’ என்ற அமினோ அமிலங்கள் மற்றும் “செரோடோனின்’’, “டோபமைன்’’ போன்ற இரசாயன சத்துக்கள்தான்.

கடினமான மூளை உழைப்பில் ஈடுபட்டாலும் சோர்வு ஏற்படாமல் தவிர்க்கவும், தொடர்ந்து சுறுசுறுப்புடன் வேலையில் ஈடுபடவும் இவை உதவுகின்றன.

வாழைப்பழத்தில் நிறைய உள்ள ‘சி’ வைட்டமின் மூளைக்குத் தேவையான “நார் எபினெரின்’’ உருவாக்க உதவுகிறது. மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமலும் இது காக்கிறது.

2. பப்பாளி:

மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமல் இருக்க இதிலுள்ள ‘சி’ வைட்டமின் உதவுகிறது, மூளைக்குத் தேவையான செரட்டோன் கிடைக்க உதவும் ஃபோலிக் அமிலம் இதில் தேவையான அளவு உள்ளது. பப்பாளி கண் நலத்துக்கும், மலச்சிக்கல் வராமல் இருக்கவும் உதவும்.

3. கருப்பட்டி வெல்லம்:

பனஞ்சாற்றி-லிருந்து காய்ச்சி எடுக்கப்படும் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் மூளைச் சோர்வை நீக்க உதவுகிறது. இதிலுள்ள பி6, பி12 வைட்டமின்கள் அதற்கு உதவுகின்றன. வெதுவெதுப்பான சூட்டிலுள்ள பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் குடித்தால் உடன் உற்சாகம் கிடைக்கும்.

4. சிவப்பரிசி:

இதிலுள்ள “வைட்டமின் பி’’ மூளைச் செயல் திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள நயசின், தையமின், ஐனோசிடால் போன்ற ‘பி’ வைட்டமின்கள், ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம், செரட்டோனாக மாற்றப்பட உதவுகின்றன.

இது மன அமைதிக்கும், நினைவாற்றலுக்கும், மன நிறைவிற்கும் உதவுவதோடு, நல்ல உறக்கம் வரவும் உதவுகிறது. மன அழுத்தம் வராமல் தடுக்கவும் இது பயன்படுகிறது.

5. மீன்:

புரதச் சத்து அதிகம் உள்ள மீனில் ‘டைரோசின்’ என்ற அமினோ அமிலம் அதிகம் உள்ளது. இதன் உதவியால் மூளைச் செல்கள் டோபமைன் என்னும், நியூரோடிரான் ஸ்மிட்டரை உருவாக்கு-கின்றன. இது சுறுசுறுப்பு, வேலைத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கிறது. நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட இவை உதவுகின்றன.

6. முட்டை:

மஞ்சள் கருவில் உள்ள கோலின், நியூரோடிரான்ஸ்மிட்டரைத் தயாரிக்க உதவுவதால் நினைவாற்றல் நன்றாக இருக்கும். கவனமாகவும், ஊன்றி உள்வாங்கவும் உதவுவதோடு, கவனச் சிதறலையும் தடுக்கிறது.

மூளை நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள செல்களுக்குத் தேவையான கொலஸ்ட்ரால் மஞ்சள் கருவில் உள்ளது. முட்டையில் உள்ள  ஞிபிகி என்னும் ‘ஒமேகா- 3’ என்னும் கொழுப்பு அமிலம் நரம்புச் செல்களின் இணைப்பிற்கு உதவுகிறது.

7. கீரைகள்: கீரைகளில் ஞிபிகி அமிலம் உள்ளது. வல்லாரைக்-கீரை நினைவாற்றலை தர அதிலுள்ள `ப்ரம்மிக் அமிலம்’ உதவுகிறது. இது குழந்தைகளின் மூளைக்கு டானிக் போன்றது. கீரைகள் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நல்லது. பசலைக்கீரை மூளைக்கு பெரிதும் நலம் சேர்க்கும். மலிவானவை என்பதால் கீரைகள் ஏழைகள் கூட அதிகம் உண்ண ஏற்றவை.

8. வேர்க்கடலை:

மூளைக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது, உகந்தது. பாதாம், வால்நட் போன்ற விலை கூடுதலான பருப்பு-களைவிட இதுதான் சிறந்தது. இதில் வைட்டமின் ‘ஈ’ அதிகம். ஆக்சிஜன் எற்றத்திற்கு இது பெரிதும் பயன்படும். நரம்பு மண்டலத்தைப் பலப்-படுத்தவும். வேர்க்கடலை உதவுகிறது. இதிலுள்ள ‘தைமின்’ என்னும் அமினோ அமிலம் மூளை நரம்பு மண்டலத்திற்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதில் புரதம் நிறைய உள்ளது.

9. எள்:

இதிலுள்ள `செலினியம்’ என்னும் தாது உப்பு மூளை நரம்புகளை வலுவடையச் செய்கிறது. எள்ளில் உள்ள `ஜிங்க்’ என்னும் தாதுப்பொருள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மூளை நலன் பாதுகாக்கப்படுவதற்கு எள் இன்றியமையாதது.

10. உறக்கம்:

ஒரு நாளைக்கு ஏழு மணி நேர உறக்கம் கட்டாயம் தேவையாகும். இது மூளையின் நலத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் பெரிதும் பயன்படும். ஒரே வேலையைத் தொடர்ந்து செய்யாமல் வேலைகளை மாற்றி மாற்றி செய்தால் மூளை சோர்வடையாமல், சுறுசுறுப்படையும்.

பெண்களின் எலும்பு பலவீன நோயை தடுக்க வழிகள்!

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கின்றது.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.

எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை.

எலும்புகள் எலும்பரிப்பால் பலகீன மடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகின்றது.

பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகின்றது.

இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள்.

ஆண்களைவிட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண் களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு.

மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந் திருப்பதும் முக்கிய காரணம்.

35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகின்றது.

அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகின்றது.

மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கின்றது.

இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள்.

இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகின்றது.எலும்புகள் கல் போன்று உறுதி கொண் டவை என நாம் நினைக்கிறோம்.

இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகின்றது.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும்ப ரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.

அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும் மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.

நோயைத் தடுக்கும் முறைகள் :

நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.

மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும். உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும்.

போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும்.

ஈஸ்ட்ரோஜன் குறையும் பண்களுக்கு எலும் பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது.

மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.

 

முகம் பளிச்சிட எளிய டிப்ஸ்!

பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள், இரவில் கசகசாவை ஊற வைத்து பகலில் அரைத்து முகத்தில் போட்டு வர பொலிவு பெறும்.

பேஸ் பேக் போடும் போது கண்ணை சுற்றியும் போடுவதை தவிர்க்கவேண்டும்.

குளிக்கும்போது இரண்டு துளி தேங்காயை எண்ணெய், தண்ணீரில் விட்டு குளித்தால் நாள் முழுவதும் ப்ரஷ்ஷாக இருக்கும்.

பொன்னாகன்னி கீரை, கறுப்பு பன்னீர், திராட்சை, பனைவெல்லம், மிளகுத்தூள் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்தால், உடல் நாளடைவில் நிறம் மாறும்.

கடலை மாவு, பச்சை பயிறு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பவுடராக்கி வைத்து கொண்டு, முகம் கழுவும் போது பயன்படுத்தினால் முகம் பளிச்சிடும்.

ரோஜா இதழ்கள், பூலாங்கிழங்கு, ஆரஞ்சு தோல் ஆகியவற்றை அரைத்து மசாஜ் செய்து வர நிறம் பளிச்சிடும்.

மன்னார் கடலோரத்தில் கரையொதுங்கிய அபூர்வ வகை உயிரினம்

மன்னார் தாவில்பாடு கடலோரப்பகுதியில் கடற்பன்றி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த பன்றியானது 5 அடி நீளமும் 450-500 கிலோகிராம் எடை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடற்கரையில் ஏதோ விசித்திரமான பொருள் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து உரிய இடத்துக்கு விரைந்த மன்னார் வனவிலங்கு உதவிப்பணிப்பாளர் அசோக ராஜபக்ஷ இவை அரிய வகையிலான கடற் பன்றி எனபதனை தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மன்னார் வனவிலங்கு உதவிப்பணிப்பாளர் அசோக ராஜபக்ஷ தெரிவிக்கையில்

இவ்வகை கடற் பன்றியானது இலங்கைக்கு மிகவும் அபூர்வமான தொன்றாகும்.

இலங்கையின் கடற் பரப்பில் அரிய வகையிலேயே கடற் பன்றிகளே காணப்படுகின்றன

எமது நாட்டுக்கென்றே மொத்தமாக 8 கடற்பன்றிகளே உரித்துடவையாகும். அவற்றுள் பாதி அழிவை எதிர்நோக்கியுள்ள நிலையில் தற்போது மிகுதியும் வெகுவாக அழிந்துக் கொண்டு வருகின்றது

தற்போது இவை அழிவடைவதற்கான காரணம் தெரியவில்லை . இருப்பினும் எதிர் காலத்தில் இதுப் போன்ற உயிரினங்கள் அழிவடைவதை தவிர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மூக்கில் ரத்தம் வடிவது ஏன்?

மூக்கானது இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக உள்ள ஒரு உறுப்பாகும். அத்துடன் அது முகத்திலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கிறது.

ஆதலால் மிகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கிறது. எனவே எந்த விபத்தின் போதும் முகம் அடிபடும்படி விழுந்தால் அது காயப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

அத்துடன் மூக்கின் மென்சவ்வுகளில் இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக இருப்பதால் சிறிய காயமானாலும் இரத்தப் போக்கு மிக அதிகமாகவே இருக்கும்.

மூக்கை அடிக்கடி நோண்டும் பழக்கமுள்ளவர்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். இருந்தபோதும் மூக்கால் இரத்தம் வடிவதற்கு அது முக்கிய காரணமல்ல.

பொதுவாக குளிர் காலத்தில் வைரஸ் கிருமிகள் பரவுவதால் மூக்கின் மென்சவ்வுகள் காய்ந்து வரண்டு இருக்கும். இதனால் அவை தாமாகவே வெடித்து குருதி பாய்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். இவை காரணமாக மூக்கால் இரத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்

மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. எனவே அதனை மிகவும் பாதுகாப்பாக கவணித்துக் கொள்ளவேண்டும்.

மூக்கில் இரத்தம் வடிந்தால் என்ன செய்ய வேண்டும்?
  • மூக்கில் வடியும் இரத்தம் தொண்டை பகுதிக்குள் செல்லாமல் தடுக்க, தலையை லேசாக முன்பக்கமாக சாய்த்து கொள்ளவேண்டும்.
  • பின்பு கட்டைவிரல் ஆட்காட்டி விரலால் மூக்கைமூடி கொண்டு மூக்கின் மையப்பகுதியில் எலும்பு முடியும் பகுதிக்கு சற்று கீழேவிரல்களை வைத்து அழுத்த வேண்டும். 5முதல் 10நிமிடம் இவ்வாறு செய்தால் ரத்தம் நின்று விடும்.
  • பின்பு. அமைதியாக உட்கார்ந்திருங்கள். உடனடியாகப் படுக்க வேண்டாம். குனியவும் வேண்டாம். தலையானது இருதயத்தை விட உயர்ந்திருந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவதற்கான சாத்தியம் குறைவாகும்.nose-bleading
  • ரத்தம் நிற்காவிட்டால் மூக்கின் மேல் ஒரு மெல்லிய துணியில் ஐஸ்கட்டியை வைத்தால் ரத்தம் வடிவது நின்று விடும். ரத்தம் நின்றதும் மூக்கைப்பிடித்து திருப்பவோ, சீந்தவோ கூடாது. இதுபோன்ற செய்கையினால் ரத்தம் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
  • அவ்வாறு மீண்டும் ரத்தம் வந்தால் தாமதிக்காமல் மருத்துவரை நாடுங்கள்.

அஜித் விஜய் ரசிகர்களுக்கு இறுதியில் செருப்படி கொடுத்த கோபிநாத்

Vodafone கஸ்டமர் care பெண்ணை நம்ம ஊர் பையன் என்ன பாடு படுத்திறான்! பாருங்கள்! வீடியோ

தேர்தலில் தோல்வி அடைந்தால் வருந்துவீர்களா? டொனால்ட் டிரம்ப் கூறிய அதிரடி பதில்

அமெரிக்க ஜனாபதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார்.

பாக்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் டிரம்பிடம் நிருபர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ‘இந்த தேர்தலில் எனக்கு நானே வாக்களிக்கப்போகிறேன்’ என நகைச்சுவையாக தொடங்கியுள்ளார்.

‘நாடு முழுவதும் பிரச்சாரம் சென்றபோது பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. நிச்சயமாக வாக்காளர்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘தேர்தலில் தோல்வி அடைந்தால் அதற்காக வருந்துவீர்களா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு சிறிதும் தயங்காத டிரம்ப், ‘ஒருவேளை தோல்வி அடைந்தால், எனது பொண்ணான நேரத்தை வீணாக செலவிட்டதற்காக வருந்துவேன்.

சொந்தமாக உழைத்து சம்பாதித்த சுமார் 66 மில்லியன் டொலரை செலவழித்தற்காக வருந்துவேன்’ என பதிலளித்துள்ளார்.

’இறுதியாக வாக்காளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிரம்ப் ‘அமெரிக்காவில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. திறமைசாலிகள் உள்ளனர். கணக்கில் அடங்காத வளங்கள் இருக்கின்றன.

இவை அனைத்தையும் சரியாக பயன்படுத்தி அமெரிக்காவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல அனைவரும் சென்று வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக டிரம்ப் பேசியுள்ளார்.

நண்பனுடன் மனைவி உடலுறவு ; கணவன் மனைவியிற்கும் நண்பனிற்கும் கொடுத்த கொடூர தண்டனை

House in Tatarstan region where the double murder took place

நெருங்கிய நண்பருடன் பாலியல் உறவு வைத்த மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவன், நண்பரின் ஆணுறுப்பையும் வெட்டி வீசிய சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் ஷாமா கிராமப் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் வசித்துவந்த விளாட்மீர் சிதோரோவ் என்பவர் தமது நெருங்கிய நண்பருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட தனது மனைவியை கத்தியால் பல முறை குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே அறையில் தப்பிக்க வழியின்றி சிக்கிக்கொண்ட தனது நெருங்கிய நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசியுள்ளார்.

இதனால் அதிக இரத்தப்போக்கு மற்றும் உடனடியாக மருத்துவ உதவியை நாட முடியாமை உள்ளிட்ட காரணங்களால் குறித்த நபரும் மரணமடிந்துள்ளார்.

குறித்த சம்பவத்தன்று குறிப்பிட்ட நபர் தமது குழந்தைகளுடன் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது அவரது மனைவி தமது தோழியை சந்திக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தோழியை சந்திக்க செல்லும் மனைவியை இவரது நண்பர் தமது வாகனத்தில் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சந்தேகத்தின் அடிப்படையில் தமது மனைவியின் தோழியின் வீட்டுக்கு சென்ற பாரத்த போதே கணவனுக்கு  மனைவி தோழி வீட்டுக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கணவன் தனது நண்பனை சந்திக்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனது நண்பனின் வீட்டினுள் சென்று பார்த்தபோது இவரது மனைவி நண்பரின் படுக்கையறையில் ஆடை கலைந்த நிலையில் படுத்திருப்பதை கண்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அவர் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு நண்பரின் ஆணுறுப்பையும் வெட்டி வீசியுள்ளார்.

தற்போது குறித்த நபரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹேரத் அபாரம் ; 272 ஓட்டங்களுக்குள் சுருண்டது சிம்பாப்வே

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே அணி 272 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

சிம்பாப்வே அணியின் சார்பில் செரி 80 ஓட்டங்களையும், எர்வின் 64 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில்  ரங்கன ஹேரத் 5 விக்கட்டுகளையும், டில்ருவான் பெரேரா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இதேவேளை இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 504 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 232 ஓட்டங்கள் முன்னிலைப்பெற்று, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.

கட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில்!

இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது.

தேசிய முகைமைத்துவ மாநாடு இன்று காலை கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுரைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

2017 -ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில்  கட்டுநாயக்க விமான நிலைய ஓடு பாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறிப்பிட்ட நேரம் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படவுள்ளது. இதன்போது மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

 

பரோன்ஸ் அனிலேவை சந்தித்தார் இரா.சம்பந்தன்

ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்றுஇன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது.

 

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இச்சந்திப்பின் போது வடக்கிலே காணப்படும் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகள் தொடர்பிலும் அமைச்சரை விளக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பொது மக்களின் காணிகள் விடுப்பில் ஏற்ப்பட்டுள்ள முன்னேற்றங்களை விபரித்ததோடு இந்த காணி விடுவிப்புகள் இன்னும் துரிதகதியில் இடம்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் பிரித்தானியாவின் பங்கும் சர்வதேசத்தின் கண்காணிப்பும் பங்கும் கடந்த காலங்களில் இருந்ததைப்போல தொடர்ச்சியாகவும் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.