தங்கம் வாங்க இருப்போருக்கு அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (24) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 801,464 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 226,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,930 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 207,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மோகன் ஜி கைது

மோகன் ஜி
தமிழ் சினிமாவில் திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியவர் மோகன் ஜி.

இவர் கடைசியாக இயக்கிய பகாசூரன் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை.

கைது

இந்நிலையில் மோகன் எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை பேசி வருபவர். அந்த வகையில் சமீபத்தில் பழனியில் கொடுக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக பேசியிருந்தார்.

இதற்காக இவர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசிக்கார்கள் இவர்கள் தானம்

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணவியல்புகளில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பபடுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பெற்றோருக்காக தங்களின் உயிரையும் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பாரை்களாம்.

இவர்கள் பெற்றோர் மீது அளவுகடந்த எல்லையற்ற பாசத்தை கொண்டவர்களாக இருப்பார்களாம்.இப்படிப்பட்ட உன்னதமான குணத்தை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதில் இருந்தே பொற்றோருடன் சிறந்த பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு இயல்பாகவே பெற்றோர் மீது அதிக பாசம் கொண்வர்களாக இருப்பார்கள். அதனால் பெரியவர்கள் ஆகும் போது தங்கள் பெற்றோரைப் பெருமைப்படுத்த வேண்டும் என நினைப்பார்கள்.

இவர்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துக்கொள்ள நினைப்பதுடன் அவர்களின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பெற்றோர் மீது அளவற்ற அன்பு மற்றும் மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள்.

தாங்கள் சிறுவயதில் பெற்ற அன்பையும், அரவணைப்பையும் இவர்கள் பெரியர்களனதும் பல மடங்காக திருப்பி கொடுக்க வேண்டும் என்ற உன்னத குணம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

இவர்கள் பெற்றோரின் மகிழ்ச்சியை தங்களின் உயிரை விட மேன்மையான விடயமாக நினைப்பார்கள்.

சிம்மம்
சிட்ட ராசியில் பிறந்தவர்கள் பிறந்த நொடி முதலே, தங்களின் பெற்றோரின் பாசத்தால் ஈர்க்கப்படுகிள்றார்கள்.

இவர்கள் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் தங்களின் பெற்றோரின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள்.

இவர்களை பொருத்தவரையில் பெற்றோர் தான் அவர்களின் வலிமை தூண்கள் எனலாம். இவர்கள் தங்களின் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

இன்றைய ராசிபலன்கள் 24.09.2024

மேஷ ராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் ஆதாயம் உண்டாகும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தைப் பொறுத்தவரை சுமுகமான சூழ்நிலையே காணப்படுகிறது. விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள் மூலம் காரியம் அனுகூலமாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். ஆனால், தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிட முடியும். வியாபாரத்தில் பணியா ளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்ச லுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர் கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே!

எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடை பெறும். இன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சில ருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீட்டில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைகக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். முருகப்பெருமான் வழிபாடு நன்று.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற் கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரிய வர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கடுமை காட்டினாலும் பொறுமை அவசியம். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனம் சஞ்சலப்படும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகர ராசி அன்பர்களே!

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்ப டும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பராசி அன்பர்களே!

பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சகோத ரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார் கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியானா லும் முடிந்துவிடும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும். சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..மற்றவர்களுடன் பேசும்போது மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவைப்படுகிறது. அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

புதிய ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து செய்தி!

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க அவர்களுக்கு பலம் வழங்கப்படும் எனவும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

சூர்யா 45 படம் உறுதியானது

நடிகர் சூர்யா ஏற்கனவே கங்குவாவை முடித்துவிட்டு தனது அடுத்த படமான சூர்யா 44ல் நடித்து வருகிறார். அந்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார்.

கங்குவா ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கும் நிலையில், தனது 44வது படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய சூர்யா திட்டமிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

சூர்யா 45

இந்நிலையில் தற்போது சூர்யா 45ம் படம் பற்றிய புது தகவல் வெளியாகி இருக்கிறது. RJ பாலாஜி உடன் தான் சூர்யா கூட்டணி சேர்ந்து இருக்கிறாராம்.

எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற ஹிட் படங்களை இயக்கிய RJ பாலாஜி, சூர்யாவை எப்படி திரையில் காட்ட போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது.

KPY நிகழ்ச்சி புகழ் பாலாவுக்கு அடித்த ஜாக்பாட்

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வந்தவர் பாலா.

கலக்கப்போது யாரு நிகழ்ச்சி அவருக்கு நல்ல புகழ் கொடுக்க Kpy பாலா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அந்நிகழ்ச்சியில் இருந்து குக் வித் கோமாளி பக்கம் வந்தவர் செம ரைமிங் காமெடி செய்து பெரிய அளவில் புகழ் பெற்றார்.

அந்நிகழ்ச்சியில் இருந்து அப்படியே நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தவர் தன்னை மக்களுக்கு சேவை செய்யும் நபராக மாற்றிக்கொண்டார்.

சமீபத்தில் கூட காது கேட்காத குழந்தைகள் பலருக்கு மிஷின் வாங்கி கொடுத்துள்ளார்.

தான் செய்யும் உதவிகளை இன்ஸ்டாவில் பதிவிட்டதால் அதைப்பார்த்த பலரும் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் என ஒரு மேடையில் பாலா கூறியிருந்தார்.

சின்னத்திரையிலேயே பெரிய அளவில் வளர்ந்து வந்த பாலாவுக்கு இப்போது வெள்ளித்திரையில் ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது அவர் ரணம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் பாலா நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தங்கத்தின் இன்றைய நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (23) 24 கரட் ஒரு கிராம் தங்கம் 26,375 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 211,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 24,400 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 195,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

யாழில் சடத்துடன் கரையொதுங்கிய சடலம்!

கடற்றொழிலுக்கு நேற்றியதினம் (22) மாலை 5.30 மணியளவில் சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றியதினம் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.இவ்வாறு சென்றவர் இன்று (23) காலைவரை திரும்பி வரவில்லை. இந்நிலையில் தேடுதலில் ஈடுபட்ட ஊரவர்கள், அவரது சடலமானது பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்தனர்.சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்படுகிறதாக தெரிவிக்கபப்டும் நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவே என் கடைசி தேர்தல் என டொனால்ட் டிரம்ப்மின் அதிரடி அறிவிப்பு!

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றுவிட்டால் இதுவே என் கடைசி தேர்தல் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

நாடு தழுவிய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெறத் தொடங்கியிருந்தாலும், டிரம்ப் ஆளும் ஜனநாயக கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிரம்ப், 2024இல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என கூறியுள்ளார்.

லங்கா சதொச தலைவர் பதவி இராஜினாமா

லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று (23) அனுப்பி வைத்துள்ளார்.

லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவரை நியமிக்க புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுர குமாரவுக்கு அனுமதியளித்து அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய வேலுசாமி இராதாகிருஸ்ணன்

நாட்டு மக்களின் வாக்குகளால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) மலையக மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் ( Velusamy radhakrishnan) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தேர்தல் நிறைவடைந்து மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மக்களையும் ஒன்றினைத்து இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் இந்த நாட்டு மக்களின் பாரிய எதிர்பார்ப்பையும் அவர்களுடைய எதிர்காலத்தை சுபீட்சமாக அமைப்பதற்கும் தாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

தேர்தலின் பின்பு அனைத்து நாட்டு மக்களையும் கடந்த கால ஜனாதிபதிகளைப்போல இன மத மொழி ரீதியாக பாகுபடுத்தாமல் அனைவரையும் ஒரு தாயின் பிள்ளைகளாக நினைத்து செயற்படுகின்ற திறமை உங்களிடம் இருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

உங்களுடைய தலைமைத்துவத்தை உண்ணிப்பாக கவனித்தமை காரணமாகவும் தாங்கள் அனைவரையும் அரவனைக்கின்ற அந்த உயரிய நிலைமை மிகவும் எளிமையாக நடந்து கொள்கின்ற தன்மை பொன்றவை காரணமாக நாம் 2017 ஆண்டு மலையக மக்கள் முன்னணி நடாத்திய இளைஞர் மாநாட்டிற்கு உங்களை சிறப்ப விருந்தினராக அழைத்திருந்தோம்.

இந்த நாட்டு மக்களின் நிலைமையை தாங்கள் நன்கு அறிவீர்கள் ஏனெனில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று இந்த நாட்டின் உயர் பதவியை அடைந்திருக்கின்றீர்கள்.எனவே நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்படுவீர்கள்.

தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க புதிய ஜனாதிபதி முன்வரவேண்டும்!

தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய ஜனாதிபதி முன்வரவேண்டும் என தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியச்செவ்லம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை, இன்று (23) மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் மீண்டும் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தும் நிலைமையினை ஏற்படுத்தாமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனும் இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ் பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த த.வசந்தராஜா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், மா.நடராசா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து ஆகியோரும் கருத்துத் தெரிவித்ததுடன் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் ந.நகுலேஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனுரவிற்கு ஆதரவு வழங்க மறுக்கும் கட்சிகள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய மக்கள் சக்தி(SJB) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவை ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம், தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சாகர காரியவசம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா என பொது ஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம்(sagara kariyawasam) கொழும்பு ஊடகமொன்று வினவியபோது, ​​

அவர் அவ்வாறு செய்ய மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார். “அவர்களை ஆதரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கட்சியாக, நாங்கள் ஒரு தனித்துவமான கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம்.ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் எங்களுடைய கொள்கைகளிலிருந்து வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டுள்ளன. வேறு சிலரைப் போலல்லாமல், அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமே அவர்களைஆதரிக்க நாங்கள் தயாராக இல்லை என்றார்.

தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருமான மகிந்த அமரவீரவிடம்(mahinda amaraweea), தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவது பற்றி அவர்கள் பரிசீலிப்பார்களா கேட்டபோது,

நாங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று நம்பவில்லை.”என்றார்.

திஸ்ஸ அத்தநாயக்க
இதே கேள்விக்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க(tissa attanayake),

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க திட்டமிடவில்லை அல்லது தேசிய மக்கள் சக்தி எந்த நோக்கத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால், கூட்டணி அரசாங்கத்தைப் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று கூறினார்.

“ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்த ஆணைகள் வேறுபட்டவை. திஸாநாயக்கவுடன் முன்னோக்கிச் செல்ல நாங்கள் தயாரா என்று யாராவது எங்களிடம் கேட்டால், அவ்வாறான தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி அத்தகைய திட்டம் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை” என்றார்.

வைரலாகும் நடிகை கனகாவின் தற்போதைய புகைப்படம்

நடிகை கனகா ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகருடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை கனகா
தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து அசத்தினார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய நடிகை கனகா, பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள் ஆவார்.

தந்தையின் ஆதரவு இல்லாமல் தாயின் அன்பினால் வளர்க்கப்பட்ட கனகாவிற்கு கரகாட்டக்காரன் படம் தான் மிகவும் புகழை வாங்கிக் கொடுத்தது.

திடீரென இவரது தாய் உயிரிழந்த நிலையில், நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்திற்கு மூழ்கினார். தந்தையும் சொத்துப் பிரச்சினையால் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள்ளே சிறை வாழ்க்கை வாழ்ந்தார். நடிப்பிலிருந்து விலகிய இவர் உயிருடன் இருக்கின்றாரா? என்ற கேள்வி அடிக்கடி எழும்பி வந்த நிலையில், அவ்வப்போது அவரது புகைப்படம் வெளியாகி வருவது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கின்றது.

தற்போதைய புகைப்படம்
கடந்த ஆண்டில் குட்டி பத்மினி நடிகை கனகாவை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலான நிலையில், அதன் பின்பு அவர் போன் செய்தாலும் கனகா எடுக்கவில்லையாம்.

மீண்டும் வீட்டுக்குள்ளேயே தனிமையில் இருக்கிறாரே என்று ரசிகர்கள் பலரும் வருந்தி வந்த நிலையில், தற்போது அவருடைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

ஆம் ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகர் ஒருவர் கனகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு ஒருவர் காயம்!

கொழும்பு – மாளிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபரொருவர் சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் மாளிகாவத்தை பிரதான வீதியின் அருகே நேற்றிரவு(22.09.2024) 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் என்று அறியப்படும் ஷிரான் பாஸித்தின் நண்பரான ரிபா காதர் என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தெஹிவளை கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்திருந்த ஓய்வு விடுதியான சோல் பீச் ரிசோர்ட் எனும் சுற்றுலா விடுதி, முறைகேடான வகையில் உழைத்த பணத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி பொலிஸாரினால் இடித்துத் தள்ளப்பட்டது

குறித்த விடுதியின் உரிமையாளரான ரிபா காதர் என்பவரே இன்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இலக்காகி சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பாதாள உலகக்கும்பல்களின் மோதல் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இன்றைய ராசிபலன்கள் 23.09.2024

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டி ருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர் கள். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருக்கும். இன்று சிவபெருமான் வழிபாடு நன்று.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியைத் தவிர்க்கவும்பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகி முடியும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் தந்தைவழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறி யாகி முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவு களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். அம்பிகை வழிபாடு நன்று.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்கள் போக்கிலேயே சென்று விட்டுப்பிடிப் பது நல்லது. வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்துகொள்வார். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். குரு வழிபாடு நலம் சேர்க்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாகும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். அம்பிகை வழிபாடு நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை. உங்களுடைய பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக் கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனி வான அணுகுமுறை அவசியம். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர் களாலும் நண்பர்களாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும். விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

துலா ராசி அன்பர்களே!

பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். தாய்வழியில் சில பிரச்னை கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக் கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவு கள் ஏற்படக்கூடும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளி லும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். இன்று காலபைரவரை வழிபடுவது நன்று.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணைவழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிணக் குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் முயற்சிகளுக்குத் தேவையான ஆத ரவு கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிரமமான சூழ் நிலையே காணப்படுகிறது. முருகப்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் பிள்ளைகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கும்பராசி அன்பர்களே!

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனு சரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச் னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் ஏற்படுவதற்கில்லை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமை அவசியம். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டியிருக்கும். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையால் அசதி ஏற்படும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவது தாமத மாகும்.

அதிக கோபத்தால் காதலை இழக்கும் ஆண் ராசியினர்

ஜோதிட சாஸ்த்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின்னர் துணையிடம் அதிக கோபத்தை காட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் குணம் துணைக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

இப்படி துணையின் பொறுமைக்கு சவால்விடும் அளவுக்கு அதிக கோபத்தை வெளிப்படுத்தும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்களின் மனநிலை எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. இவர்கள் இயல்பிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்படும் தன்மையில் இருப்பார்கள்.

இவர்கள் அதிகமாக தங்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பதால், துணையின் ஆசைகளை நிறைவேற்றுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இவர்களுக்கு இயல்பிலேயே காணப்படும் ஆக்குரோசமான உணர்வின் காரணமாக திருமண உறவில் அதிகளவில் மோதல்களை ஏற்படுத்தும்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் மற்றவர்களை அடக்கியாளும் தன்மையில் தான் இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் தங்களின் ஆசைகள் மற்றும் லட்சியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாக துணையின் மனதை புண்படுத்துகின்றனர்.

அவர்களின் ஆணவமும் ஈகோவும் உறவில் அடிக்கடி அதிகாரப் போட்டிகளை தோற்றுவிக்கும் தன்மையில் இருக்கும்.

இவர்கள் தங்கள் துணையிடம் அதிக கோபத்தை வெளிப்படுத்துவதால் அடிக்கடி பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்த ஆண்கள் உளக்கிளர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் விருப்பம் நிறைவேறாத பட்சத்திலும், அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் போதும் அவர்கள் துணையிடம் அதிக கோபத்தை வெளிப்படுத்தும் தன்மையில் இருப்பார்கள்.

இவர்களுக்கு மற்றவர்களை புரிந்துக்கொள்ளும் தன்மை பெரியளவில் இருப்பதில்லை. அதனால் துணையின் மனநிலையை சரிவர புரிந்துக்கொள்ளாத காரணத்தால் திருமண உறவில் பாதிப்பை சந்திக்கக்கூடும்.

சரிகமபவில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான பெண் போட்டியாளர்

பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் SPB சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் ஐந்து பேரில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்கள் தங்ஙளின் சிறப்பான பாடல்கள் மூலம் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

சரிகமப
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகளாக இருக்கின்றனர்.

பல சுற்றுக்களை தாண்டி கடந்த வாரம் Hero Heroine சுற்றுசிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சுற்றில் போட்டியாளர் மகிழன் பரிதி முதல் Finalist ஆக தெரிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்னும் நான்குவாரங்கள் எலிமினேசன் இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் அடுத்தடுத்த Finalist ஆக தெரிவு செய்யப்பட இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பாடகர் SPB இன் பாடல்களின் சுற்று ஆரம்பமாக உள்ளது.

இந்த வாரம் ஒரு போட்டியாளர் இறிதிச்சுற்றுக்கு தெரிவாகி உள்ள நிலையில் இதுவரை வெளியாகிய அனைத்து ப்ரொமோவிலும் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி வரும் நிலையில் யார் இந்த வாரத்திற்கான இறிதிச்சுற்றுப்போட்டியாளர் என்பது எதிர்பார்ப்புடன் உள்ளது.

 

தலையில் பொடுகு தொல்லையை போக்க

தலையில் முடி அதிகம் கொட்டுவதற்கு ஓர் காரணமாக இருப்பது பொடுகு தான். தற்போது மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் தலையில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, பொடுகுகளாக மாறுகின்றன.

இப்படி பொடுகுகள் அதிகரிப்பதால், மயிர்கால்கள் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கின்றன.இதை இப்படியெ கண்டுகொள்ளாமல் விட்டால் அது பூஞ்சையாக மாறி தீங்கை விளைவிக்கும்.இதை தடுக்க பல கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்த இதை இயற்கையில் காணப்படும் வேப்பிலை இதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த வேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேப்ப இலைகள்
வேப்ப இலைகளை பெரும்பாலானோர் நச்சு நீக்கியாக பயன்படுத்துவார்கள். இதனை தலைக்கு பயன்படுத்தும் போது உங்கள் உச்சந்தலையை நன்றாக உணரவும், சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.

இவை பொடுகு மற்றும் பிற முடி பிரச்சினைகளுக்கு உதவக்கூடும். இது தவிர உங்கள் தலைமுடியை பராமரிக்க வேப்ப இலைகளை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.

இதற்கு சூடான பாத்திரத்தில் ஒன்றில் வேப்ப இலைகளை கொதிக்கவிட்டு, அது நன்றாக குளிர்ந்த பிறகு நன்கு வடிகட்டவும். இந்த வேப்பம்பூ நீரை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் வைக்கலாம். இதை சில நிமிடங்கள் ஊற வைத்து, பிறகு கழுவினால் பொடுகு நீங்கும்.

வேப்ப இலைகளை பேஸ்ட் போல செய்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இவற்றை நன்கு கலக்கி, உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதன் பின்னர் இதை ஷாம்பூ கொண்டு நன்றாக அலசிவிடலாம்.

முடி நன்கு வளர நெல்லிக்காய் பொடியை எடுத்து அதனுடன் 3 அல்லது 4 ஸ்பூன் வேப்பம்பூவை பொடியாக்கி கலக்கவும். பின்னர் சிறிது வெதுவெதுப்பான நீரை சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த கலவையை உங்கள் தலைமுடியில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்.

இதன் பிறகு, உங்கள் தலைமுடியை தண்ணீரில் கழுவவும். நீங்கள் முதல் முறையாக இதைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க உங்கள் தோலில் சிறிது முயற்சி செய்யலாம்.

இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பாவித்து பார்த்து சிறந்த பலனை தந்தால் மீண்டும் பயன்படுத்துவது நன்மை தரும்.