டொனால்டு டிரம்ப்புக்கு ஓட்டு போட்ட நபரை தாக்கிய இளைஞர்கள் (வைரல் வீடியோ)

இயல்பாக மூச்சு விடுவதால் ஜெயலலிதாவுக்கு வெகு நேரம் செயற்கை சுவாசம் அகற்றம்

இயல்பாக மூச்சு விடுவதால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று வெகு நேரம் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டிருந்தது.
உடல்நிலையில் முன்னேற்றம்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்குள்ள டாக்டர்களுடன் இணைந்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியதை தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் உடற்பயிற்சி அளித்தனர். தற்போது, ஜூடி என்ற பிசியோதெரபி நிபுணர் மட்டும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி அளித்து வருகிறார். நேற்றும், அவர் சிகிச்சையை தொடர்ந்தார்.
செயற்கை சுவாசம் அகற்றம்
நேற்று 51-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது, ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை மூலம் அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் இல்லாமலேயே, தொடர்ந்து 14½ மணி நேரம் இயல்பாக சுவாசித்தார்.
நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. அதிகாலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து வெகு நேரம் அவர் இயல்பாகவே மூச்சு விட்டார். நீண்ட நேரம் நாற்காலியிலும் அமர்ந்திருந்தார். எனவே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெகு விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நேற்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சி.ராமநாதன், இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் எம்.ரசாக் உள்ளிட்டோர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர்.
நல்ல செய்தி
ஆஸ்பத்திரிக்கு வெளியே, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிக விரைவாக பூரண குணமடைந்து வருகிறார். விரைவில் வீடு திரும்பி அரசு மற்றும் நிர்வாக பணியை மிக வேகமாக தொடருவார் என்ற நல்ல செய்தியை சொன்னார்கள்.
நாட்டுமக்களுடைய வேண்டுதல், பிரார்த்தனைக்கு கிடைத்த பலனாக ஜெயலலிதா நெருக்கடியான, கடினமான நிலையில் இருந்து மீண்டு மிக வலிமையாக மக்களுடைய ஆதரவோடு முழுமையான குணமடைந்து இன்னும் பல ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக நலத்திட்டங்களை தந்து அரசு நிர்வாகத்தை நடத்துவார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் அவர் பரிபூரண குணமடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கங்கையில் மிதந்த பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள். அதிர்ச்சி தகவல்

பிரதமரின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு சாமானிய மனிதர்களுக்கு சிறுசிறு கஷ்டங்களை கொடுத்துள்ள நிலையில் கோடிக்கணக்கில் கருப்புப்பணத்தை பதுக்கியவர்களுக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை கொடுத்துள்ளது.

தங்களிடம் உள்ள கருப்புப்பணத்தை மாற்ற முடியாமல், வெளியே சொல்ல முடியாமல் உள்ள அந்த நபர்கள் செல்லாத கருப்புப்பணத்தை பல வழிகளில் வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ அருகே மிர்சாபூர் என்ற பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் மிதந்தபடி வந்ததாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறினார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள கோட்வாலி  காவல் நிலைய அதிகாரிகள் ஆற்றில் மிதந்த கரன்சியை சேகரித்தனர். எவ்வளவு மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மிதந்தன என்பது குறித்து காவல்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

சவுந்தர்யா – தனுஷ் புது முடிவு

கோச்சடையான் படத்தை இயக்கிய ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதையடுத்து மீண்டும் திரையுலகில் முழுகவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார்.

புதிய படம் இயக்க முடிவு செய்தவர் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்க முடிவு செய்தார். ஹீரோவாக மோகன்லால் மகன் ஜீத்து ஜோசப்பை நடிக்க வைக்க பேச்சு நடந்தது. அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து தந்தை ரஜினியிடம் ஆலோசித்தபோது, தனுஷை நாயகனாக வைத்து இயக்க யோசனை கூறினார்.

தனுஷுடம் பேசியபோது, ஏற்கனவே தான் நடித்து வெற்றி பெற்ற, வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாக கதை வசனத்தை தான் எழுதுவதாகவும் அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கும்படி சவுந்தர்யாவிடம் தெரிவித்தார் தனுஷ். அதை ஒப்புக்கொண்டார்.

இப்படத்தின் இசை அமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், கதாநாயகி தேர்வு நடக்கிறது. ஏற்கனவே இயக்குவதாக இருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை சவுந்தர்யா நிறுத்தி வைத்திருக்கிறார்.

 

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! வியப்பில் உலக நாடுகள்

அடுத்து வரும் காலங்களில் எரிபொருளுக்கு ஏற்படப் போகும் பற்றாக்குறை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.

அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றீடாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு வலுச்சேர்கும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளாலும் புதிய எரிபொருள் ஒன்று தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் தூள் மற்றும் எல்கி பயன்படுத்தி ருஹுனு பல்கலைகழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தினால் புதிய எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டீசலுக்கு இணையான திறன் புதிய எரிபொருளில் உள்ளதாக விஞ்ஞான பீடத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சிரேஷ்ட விரிவுரையாளர் சின்னா ரூபசிங்கவின் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பு முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

உலகம் முகம் கொடுக்கும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்த புதிய எரிபொருள் காணப்படும் என இலங்கை விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

68 வருடங்களின் பின் பெரிய சந்திரன்

பூரண சந்திர தினமான எதிர்வரும் திங்கட்கிழமை (14) மிகப் பெரிய சந்திரனை (Super Moon) அவதானிக்கலாம் என இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.

68 வருடங்களின் பின், பூமியில் இருந்தவாறு அவதானிக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய சந்திரனை வெற்றுக் கண்களால் அவதானிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சாதாரணமான சந்திரனின் தோற்றத்திலும் பார்க்க 14% பெரிய சந்திரனை அவதானிக்கலாம் எனவும், அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30% அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நிகழ்வு 68 வருடங்களுக்கு முன்னர் 1948ல் நிகழ்ந்துள்ளதாக இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த நிகழ்வு இன்னும் 18 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 2034ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி மீண்டும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக டிரம்ப்: இத்தாலியில் குடிபெயரவிருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவானதை அடுத்து பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் ராபர்ட் டி நீரோ இத்தாலியில் குடிபெயர்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ருள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர் தெரிவித்த பல்வேறு கருத்துகளுக்கு அமெரிக்க நடிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது அது டிரம்பிற்கு எதிரான எதிர்ப்பை காட்டும் கலவரமாக பல பகுதிகளிலும் மாறியுள்ளது.

கடந்த புதன் அன்று தனியார் ஊடகம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நீரோ, தாம் இத்தாலியில் குடிபெயர்வது குறித்து யோசித்து வருவதாக வேடிக்கையாக பேசினார்.

தற்போது நீரோவின் இந்த கருத்தை அறிந்த இத்தாலியின் Ferrazzano மேயர், நடிகர் நீரோவை வரவேற்க காத்திருப்பதாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றும், இது நடந்தால் அது பெரும் மகிழ்ச்சியே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார காலகட்டத்தில் டிரம்பை கடுமையாக சாடியவர் நீரோ. அதிகம் வாய் பேசும் டிரம்பின் முகத்தில் குத்துவேன் என்றும் நீரோ பேசியிருந்தார்.

நடிகர் நீரோவின் மூதாதையர்கள் அனைவரும் இத்தாலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு ஒன்று நடத்தப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கருத்தரங்கை நடத்த உள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

அம்பாந்தோட்டை ஷங்ரீலா ஹோட்டலில் எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் இந்த கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.

பிரதமர் ரணில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் துறைசார் நிபுணர்கள் கருத்தரங்கில் பங்கேற்று வரவு செலவுத் திட்டம் குறித்து தெளிவுபடுத்தவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகமும் நிதி அமைச்சும் கூட்டாக இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசி பலன் 12-11-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சகோதர வகையில் செலவுகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். இரவு 8.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சிறப்பான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: இரவு 8.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

  • கன்னி

    கன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமை
    யும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். இரவு 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்

  • துலாம்

    துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றி
    யிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

  • தனுசு

    தனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • மகரம்

    மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: இரவு 8.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

 

வயிறு குலுங்க குலுங்க சிரிக்கனுமா? அப்போ இந்த வீடியோ பாருங்க!

எங்க இருந்து டா நீங்கெல்லாம் வாரீங்க??

வடிவேலின் நடிப்பையே இவங்க மிஞ்சிடுவாங்க போல இந்த பொண்ணுங்க!

T.R.ராஜேந்திரனுக்கு ஜோடியான கல்பனா அக்கா!

மிரள வைக்கும் சாகசத்தில் அசத்தும் குட்டிச் சிறுவன்!

பிரபல டி.வி.நடிகை சபர்ணா தற்கொலை?அழுகிய நிலையில் உடல் கண்டெடுப்பு

பிரபல டி.வி.நடிகை சபர்ணா வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் சபர்ணா. பின்னர் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து சில சினிமா படங்களில் நடித்துள்ளார்.
சபர்ணா மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவில்லை. கோவையைச் சேர்ந்த சபர்ணா படிக்காதவன், காளை, பூஜை போன்ற படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்துள்ளது

பன்றிக்குட்டிக்கு பிறந்த யானைக்குட்டி… ரொம்ப ஆச்சரியமா இருக்குதா?.

டொனால்ட் ட்ரம்ப் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்!

ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றிவாக்கை சூடுவார் என அமெரிக்கா மட்டுமல்ல, உலகும் நம்பியது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் அனைவரையும் அதிர்ச்சி அடையவைக்கும் வகையில் வெற்றிவாகை சூடி அமெரிக்காவின் 45வது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ளார்.

டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர், ரியல் எஸ்டேட் செய்பவர், தொழிலதிபர் என பன்முகம் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள் சில இனி…

உண்மை #1

டொனால்ட் ட்ரம்ப்புக்கு அதிக ஒழுக்க பண்புகள் தேவை என்பதால், 13 வயதிலேயே மிலிட்டரி பள்ளியில் இவரது பெற்றோர் இவரை சேர்த்துவிட்டனர்.

உண்மை #2

“The Apprentice” என்ற நிகழ்ச்சியில் ஒரு எப்பிசொடுக்கு $3,75,000 டாலர்கள் சம்பாதித்து ஹிட் அடித்தார் டொனால்ட்.

உண்மை #3

டொனால்ட் ட்ரம்ப்-க்கு குடிப் பழக்கம் இல்லை. இவரது சகோதரர் இந்த பழக்கத்தால் கடந்த 1982-ம் ஆண்டு இறந்ததில் இருந்து இவர் குடிப்பதில்லை.

உண்மை #4

டொனால்ட் ட்ரம்ப் தனது பெயரிலேயே ஒரு போர்ட் விளையாட்டை  உருவாக்கினார். 1989-ல் நிறுத்தப்பட்ட இந்த போர்டு விளையாட்டு, “The Apprentice” புகழுக்கு பிறகு மீண்டும் துவக்கப்பட்டது.

உண்மை #5

ட்ரம்ப் டவர் எனும், டொனால்ட் ட்ரம்ப்பின் வீடு தி டார்க் நைட் ரைசஸ் என்ற படத்தில் வேனே எண்டர்பிரைசஸாக (Wayne Enterprises) பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #6

ட்ரம்ப் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிக்காமல் போயிருந்தாலும் பணக்காரராக தான் இருந்திருப்பார். காரணம், அவரது தந்தை அவருக்கு தேவையான அளவிற்கு மேல் சொத்து வைத்திருந்தார்.

அதிக கொலஸ்ட்ரால் உணவு சாப்பிட்டதும் இதெல்லாம் நீங்க பண்ணுங்க!!

எல்லா சமயங்களிலும் டயட் பற்றியே யோசிக்க முடியாது. அவ்வப்போது நமது நாக்கிற்கும் மதிப்பு அளிப்போம். என்றைக்காவது அப்படி சாப்பிடுவதல் தவறில்லை. கொழுப்புமிக்க மசாலா உணவும் சாப்பிட வேண்டும்.

அதே சமயம் உடல் எடையும் அதிகரிக்கக் கூடாது என்று நினைப்பவர்களுக்காக இந்த டிப்ஸ் . அவ்வாறு சாப்பிட்டதும் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென இந்த குறிப்புகள்.

இளஞ்சூடான நீர் :

எந்த ஒரு சமயத்தில் கொழுப்பு உணவு சாப்பிட்டதும் உடனே வெதுவெதுப்பான சூட்டில் நீரை குடித்தால் விரைவில் செரித்து அதிக கலோரியை எரிக்க உதவும்.

படுக்கைக்கு நோ :

வயிறு முட்ட சாப்பிட்டு உடனே தூங்கச் செல்வது பெருந்தவறு. அவ்வாறு செய்தால் கொழுப்பு எரிக்கப்படாமல் சேமித்தி வைக்கப்படும். இதனால் உடல் பருமனாகும்.

சில்லென்று குடிக்க கூடாது :

கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் குளிர்ந்த ஜூஸ் அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இதனால் வயிறு, கல்லீரல், சிறு குடல் பாதிப்படையும்.

10 நிமிட நடை :

நன்றாக சாப்பிட்டதும் காலாற ஒரு 10 நிமிடம் நடப்பது நீங்கள் உங்கள் இரைப்பைக்கு நீங்கள் செய்யும் பெரிய நன்மை. ஏனெனில் செரிப்பதற்கு நடை உதவும்.

மிளகு மற்றும் தேன் :

கொழுப்பு உணவு சாப்பிட்டதும் மிளகு சாப்பிடுவது நல்லது. இது கலோரி எரிப்பதை துரிதப்படுத்தும். மிளகை தேனோடு கலந்து சாப்பிடுவது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். கொழுப்புகளை கரைப்பதற்கு இவை உதவும்.

திரிபலா :

திரிபலா ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். எண்ணெய் உணவுகள் சாப்பிட்டபின் இதனை எடுத்துக் கொண்டால் குடல்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் திரிபலா பொடியை கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

முட்டை ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் ஒரு குழந்தை மிக ஆரோக்கியமக வளர முடியும்.

ஆனால் இன்று கிடைக்கும் பிராய்லர் முட்டைகள் கெடுதலை தரும். பல பக்க விளைவுகளை தரும். ஆகவே நாட்டு கோழி முட்டையை தெர்ந்தெடுத்து வாங்குங்கள்.

எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ள முட்டை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என பார்க்கலாம்.

முட்டையிலுள்ள சத்துக்கள் :
வேக வைத்த முட்டையில் அதிக புரதம் விட்டமின் ஏ, பி, டி, ஈ, கே மற்றும் இரும்பு, செலெனியம் போன்ற மிக முக்கியமான சத்துக்கள் கொண்டுள்ளது. இவை அனைத்து சத்துக்களும் புற்று நோயை நெருங்க விடாது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான வடிவம் :
சிறு வயதிலிருந்து முட்டை சாப்பிட்டு வந்தால் முழுமையான வளர்ச்சி பெற முடியும். எலும்புகள் பலப்பெறும். இதில் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் எலும்புகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆன்டி ஆக்ஸிடென்ட் :
வயதாவதற்கும் பல வியாதிகளுக்கும் முக்கிய காரணம் செல் பாதிப்படைவதுதான். செல்களை பாதிப்படையச் செய்வது ஃப்ரீ ரேடிகல்ஸ்தான். இந்த ஃப்ரீ ரேடிகல்ஸை முற்றிலும் முட்டை அழிக்கிறது.

எலும்பு நகம் பலம் பெற :
ஆரோக்கியமான கூந்தல் மற்றும் நகங்கள் வளர முட்டை உதவி புரிகிறது. அதே போல் ஆஸ்டியோஃபோரோஸிஸ் வருவதையும் தடுக்கிறது. ஆரோக்கியமன எலும்புகளை பெற முடியும். வயதான பின் வரும் எலும்பு தேய்மானம் தடுக்கப் பரும்

மூளையை வலுப்படுத்தும் :
அறிவை தூண்டும்படியாக மூளையை பலப்படுத்தும். அதனால்தான் பள்ளிகளில் தினம் ஒரு முட்டை வழங்கப்படுகிறது. மூளை வளர்ச்சிக்கும், உடலின் மற்ற பாகங்களுக்கு தகவல் பரிமாற்றம் அளிக்க தேவையான முக்கிய காரணி கொலைன் என்ற பி காம்ப்ளக்ஸ் விட்டமின். அது அதிகம் முட்டையில் உள்ளது.

கெட்ட கொழுப்பை குறைக்கும் :
முட்டையில் அதிக கொழுப்பு உள்ளது. அதனால் சாப்பிடக் கூடாது என பலரும் சொல்லிக் கேள்விப்படுவதுண்டு. ஆனால் முட்டையில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. அவையும் நல்ல கொழுப்பே. இது கெட்ட கொழுப்பை கரைத்து உடல் பருமனை குறைக்கும்.

 

உணவகங்களில் சாப்பிடுவோர் இதையும் கொஞ்சம் பாருங்கள்..!