ஓவர்டோஸ் செக்ஸ் மாத்திரை சாப்பிட்ட 70 வயது கிழவருக்கு என்ன ஆச்சு தெரியுமா?

செக்ஸ் உணர்வுகளை தூண்டும் வயாகரா உள்ளிட்ட மாத்திரைகளை பலர் உபயோகித்து வருகின்றனர். இதனால் இதய நோய் உள்ளிட்ட பல பக்கவிளைவுகள் வரும் என எச்சரித்த போதிலும் எச்சரிக்கையை மீறி உச்சகட்ட இன்பம் பெற பலர் இன்னும் வயாகராவை விடுவதில்லை.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள 70 வயது கிழவர் ஒருவர் செக்ஸ் ஆசையுடன் விலைமாது வீட்டிற்கு சென்றுள்ளார். உறவுக்கு முன்னர் அவர் ஓவர்டோஸ் மாத்திரகளை சாப்பிட்டாராம். சிறிது நேரத்தில் அந்த விலைமாது பெண் பதறியபடி வெளியே வந்து வயதான கிழவர் உறவின்போது திடீரென மயக்கமாகிவிட்டதாக தெரிவித்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அந்த நபரை கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜட்டியுடன் விமான நிலையத்துக்கு வந்த போதை மனிதன். அலறிய பெண்கள்

மனிதனுக்கு போதை ஏறிவிட்டால் என்ன நடக்கின்றது என்பது தெரியாமலே பலர் நடமாடுவார்கள். இந்நிலையில் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி என்ற நாட்டில் விமான நிலையத்திற்கு ஜட்டியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் மலாவி விமான நிலையம் பரபரப்புடன் இயங்கி வந்த நிலையில் ஒரு பயணி கையில் லக்கேஜ் உடன் வந்தார். அவரை பார்த்ததும் பெண் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். வெறும் ஜட்டியுடன் அவர் வந்ததே இதற்கு காரணம்.

பின்னர் அவரை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது கஞ்சா என்ற போதைப்பொருளை அவர் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த நபரை ஜட்டியுடன் புகைப்படம் எடுத்து நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.

டொனால்டு டிரம்பை அடித்து நொறுக்கிய பிரபல WWE வீரர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை பிரபல WWE வீரர் அடித்து நொறுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றதை அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2007ம் ஆண்டு பிரபல WWE வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினே டிரம்பை அடித்து நொறுக்கிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

குறித்த வீடியோவில், கடந்த 2007ம் ஆண்டு WWE Wrestlemania போட்டியில் டிரம்ப் ஆதரவு பெற்ற வீரர், WWE உரிமையாளர் வின்ஸ் மக்மஹோன் ஆதரவு பெற்ற வீரரை வீழ்த்தி வெற்றிப்பெற்றார்.

இருவருக்கும் இடையேயான போட்டிக்கு பிரபல WWE வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் நடுவராக திகழ்ந்தார்.

டிரம்ப் ஆதரவாளர் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து சவாலில் தோல்வியடைந்த WWE உரிமையாளர் வின்ஸ் மக்மஹோனுக்கு மொட்டையடிக்க டிரம்ப் மேடையில் நின்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஸ்டோன் கோல்ட், 80,000 பேர் டிரம்பிற்கு ஸ்டன்னர் போடுகிறார்.

இதில் நிலைகுலைந்த டிரம்ப் மேடையில் விழுந்து கிடக்கிறார். குறித்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

சிகரெட் பிரியர்களுக்கு பாடம் கற்பித்த ஹோட்டல் அதிபர்!… இப்படி இருந்தா புகைப்பிடிக்கும் பழக்கமே இருக்காது.

உடல் எடை குறைய கிரீன் டீயை எப்படி குடிக்க வேண்டும்

கிரீன் டீயை குடிப்பது இப்போது ஃபேஷனாகிவிட்டது. உடலுக்கு நல்லது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. உடல் எடை குறைக்கும். இளமையை நீட்டிக்கும் உடலுக்கு நல்லது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட், ஃப்ளேவினாய்டு இருக்கிறது. கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான் சற்றும் மாற்றுக் கருத்தில்லை.

drink green tea reduce weight

ஆனால் அதனை குடித்த பின்னும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று கவலைப்படுவதுண்டு. எப்படி குடிக்க வேண்டும் என்ற ட்ரிக்கை தெரிந்து கொண்டால் உடல் எடையை குறைக்கலாம். அதன் வெப்ப நிலை, வாசனைப் பொருட்கள் என பலவிஷயங்கள் அதன் சத்துக்களை பாதிக்கின்றது என தெரியுமா? அதனை எப்படி தெரிந்து கொள்ளலாமென படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது சாமந்தி, பெர்ரி டீ என பல வகை வாசனை பொருட்களை சேர்த்து கிரீன் டீ கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால் அந்த பொருட்கள் கிரீன் டீயிலுள்ள சத்துக்களை பாதிக்கும். சுத்தமான வேறு வாசனைகள் கலக்காத கிரீன் டீயே உடலுக்கு முழு சத்தையும் தரும்.

சிலருக்கு சூடாக குடிப்பதை விட கிரீன் டீயை தயார் செய்து சில்லென்று ஐஸ் கட்டி போட்டு குடிப்பார்கள். ஐஸ் கட்டி தேயிலையின் சத்துக்களை நீர்த்துப் போகச் செய்யும். வெதுவெதுப்பான நிலையில் கிரீட் டீயை குடிப்பதே உடலுக்கு நல்லதை தரும்.

தேயிலை தூள் எப்போது பாக்கெட் செய்யப்படுகிறது என்பது மிக முக்கியம். ஏனென்றால் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் 6 மாதத்திற்கு பின் அதன் சக்தியை இழந்துவிடும். ஆகவே பாக்கெட் தயாரிக்கப்பட்ட சில மாதங்களில் உபயோகித்துவிடுங்கள். அதன் பின் உபயோகித்தாலும் பயன் இருக்காது.

நிச்சயமாக .. 1 மி.லி கிரீன் டீ தூளில் 8-10 கப் அளவு தேநீர் தயார் செய்து குடிக்கலாம். டீ பேக்கை விட நேரடியாக தேயிலை தூளை நீரில் கொதிக்க விடுவதால் அதன் பலன் நிறைய கிடைக்கும்.

அதிலுள்ள கேடசின் என்ற பாலிஃபீனால் உடல் எடையை குறைக்கும். குடல்களில் படியும் கொழுப்பை கரைக்கும். புற்று நோயை தடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

அதோடு அதில் விட்டமின் பி, சி, காஃபைன், ஃபோலிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது. இவை ஆரோக்கியமான இளமையான சருமத்தை தருகிறது. மாலைக் கண் நோயை தடுக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. காஃபைன் சக்தியையும் புத்துணர்வையும் தருகிறது.

சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம்

விஜய் டிவி புகழ் சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில்  மீட்கப்பட்டுள்ளது. மதுரவாயலிலுள்ள அவரது வீட்டின் கதவு 3 நாட்களாக திறக்கப்படவில்லை என்றும்  துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விரைந்து சென்று சபர்ணாவின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.15053186_558406124357759_105994709_o_18461

ஏன் Zika Virus உலகில் உயிர்கொல்லியாக அஞ்சப்படுகிறது? ஒரு முக்கிய காணொளி ​

போபி சிம்ஹா , கீர்த்தி சுரேஸ் இணையும் பாம்புச் சட்டை – டீசர்

அக்காவிடம் சில்மிஷம் செய்த தம்பி, கடைசியில் முடிவை பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

தொடங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டிருந்தது. இப்படத்தை தொடர்ந்து 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்தடுத்து தயாரிக்கும் இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில், மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பூஜை ஏற்கெனவே நடந்திருந்தது. இந்நிலையில், இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். தொடங்கிய முதல் நாளே இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இப்படம் அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 25-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், பஹத் பாசில், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சினேகா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்!!!

விஜய் பற்றி யாருக்கும் தெரியாதா உண்மைகள்! சுவாரஸ்ய வீடியோ

உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்க எளிய வீட்டுக் குறிப்புகள்!

உதடு சிவந்திருந்தாலும் உதட்டை சுற்றிலும் சிலருக்கு கோடு போட்டது போல் கருப்பாக இருக்கும். அது உதட்டில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது கருத்துவிடும். பித்த உடம்பாக இருந்தாலும் உதடு கருக்கும். அல்லது அடிக்கடி நாவினால் உதட்டை ஈரப்படுத்தும்போதும் உதடு கருப்பாகும்.

மிகச் சிறந்த வழி அடிக்கடி நீங்கள் நீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் உதடு கருக்காமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் உதடு கருப்பாகிவிட்டால் என்ன செய்யலாம். கருத்த உதட்டை மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டு வர என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து உதட்டில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவவும். தினமும் இப்படி செய்து வாருங்கள். கருமை மறைந்து உதடு பளிச்சிடும்.

யோகார்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி கொண்டது. தினமும் யோகர்ட்டை உதட்டில் தடவி வாருங்கள். யோகார்ட் இல்லையென்றால் தயிர் தடவலாம். வேகமாக கருமையை மறையச் செய்யும்.

ஈரப்பதம் குறையும் போதும் உதட்டைச் சுற்றிலும் கருமை ஏற்படும். இதனை தவிர்க்க தினமும் வெண்ணெயை உதட்டில் தடவுங்கள். அது போல், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெயும் ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும். இதனால் கருமை நாளடைவில் மறையும்.

ரோஸ் வாட்டர் உதட்டில் ஏற்படும் கருமையை போக்க சிறந்தது. ரோஸ் வாட்டரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி இரவில் படுக்கச் செல்லுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருமை மறைந்து சிவப்பாகும்.

நிலம் விற்று கிடைத்த ரூ.55 லட்சமும் செல்லாத பணமா? அதிர்ச்சியில் பெண் தற்கொலை!

ரூ.500 மற்றும் 1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கேட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதிர்ச்சியில் தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள சனிகாபூரை சேர்ந்தவர் வினோதா(55). இவர் தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று 55 லட்சம் ரூபாயை ரொக்கமாக வைத்திருந்தார். பணம் அனைத்தும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் பண்டல்களாக இருந்தது. வினோதாவும் இவருடைய கணவரும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் பிரதமர் மோடி திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கவே வினோதா அதிர்ச்சிடையந்தார். பணம் முழுவதும் செல்லாமல் போய்விட்டதே என்று அலறினார். இதே கவலையில், பணத்தை மாற்றுவது எப்படி என்று யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால், இதில் பலனில்லை என்பதை அறிந்த வினோத அதிர்ச்சியில் இருந்து மீளாமலே தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசியபோது, இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் செலுத்தாமல் வீட்டில் வைத்திருந்தது தவறாக போய்விட்டது. இதனால் எனது மனைவியை இழந்து விட்டேன்.

மேலும், பணம் செல்லாமல் போய்விட்டதாக தொலைக்காட்சியில் பார்த்து மகன் கூறியதால் அதிர்ச்சியில் தனது மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் தெரிவித்தார். எனினும், வினோத வைத்திருந்த மொத்தப் பணத்தையும் அவரது 3 பிள்ளைகள் பங்கு கேட்டதால் வினோதா தற்கொலை செய்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞனின் மர்ம மரணம்! வீரவன்ச குடும்பத்தின் திக் திக் நிமிடங்கள்!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஹோகந்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் கடந்த 26ம் திகதியன்று இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் தேடிப்பார்த்தபோது, உயிரிழந்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகனான விபுதி விஷ்வஜித் வீரவன்சவுடன் நெருங்கிய தொடர்புடைய நண்பர் என்பது தெரியவந்தது.

விமல் வீரவன்சவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் குறித்த இளைஞர் கடந்த 25ம் திகதியும் அங்கு சென்றுள்ளதுடன், அன்றிரவு அங்கேயே தங்கியிருந்துள்ளார்.
எவ்வாறாயினும் மறுநாள் கண்விழிக்காத குறித்த இளைஞனை, வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்த போதும், ஏற்கனவே அந்த இளைஞர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஹோகந்தர தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த திசாநாயக்க முதியன்சலாகே லஹிரு ஜனித் திசாநாயக்க என்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இந்த மரணம் தொடர்பில் தனக்கும் தனது மகனுக்கும் எதிராக சில இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக அண்மையில் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

அத்துடன் மரணம் தொடர்பில் சில இணையத்தளங்கள் வெளியிடுகின்ற செய்திகளினால் தனது சிறுவர் உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி விமல் வீரவன்சவின் மகளான விமாஷா வி்ஷ்வாதரி தாயுடன் சென்று சிறுவர் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் விசாரணைகள் பெரும்பாலும் வீரவன்சவின் இன்னொரு முகத்தினை வெளி உலகத்திற்கு காட்டலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணதில் தமிழ் பெண் போலீசாரால் அதிரடி கைது !

பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் யாழ். புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

நேற்று காலை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், வவுனியாப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், அவர் நாட்டின் பல பாகங்களிலும் பலதரப்பட்ட பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை கைது செய்வதற்கு 38 பிடியாணை உத்தரவுகள் நீதிமன்றங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும். குறித்த பெண் நீண்ட நாட்களாக பொலிஸாரை ஏமாற்றி தப்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள குடும்பஸ்தர் ஒருவரிடம் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 10 இலட்சம் ரூபா பண மோசடிசெய்துள்ளதாகவும் குறித்த பெண் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பெண்ணை நேற்றைய தினம் யாழ். பிரதான புகையிரத நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்!

இன்று ஜூம்மா தொழுகையின் பின்னர் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது.

சர்வதேச அழுத்தங்களினால் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான புதிய குழு நியமிக்கப்படுவதற்கு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தை இலங்கை தவ்ஹீந் ஜமாத்தினரின் ஏற்பாடு செய்துள்ளனர். மத தலைவர்கள், அதிகளவான பெண்கள் உட்பட பொது மக்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் தலைமையில் 2009 ஆம் ஆண்டு ஒரு உப குழு நியமிக்கப்பட்டு, அதன் மூலம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவிற்கு பாதகமில்லாத வகையில் தற்கால தேவைகளுக்கு  மாற்றங்கள் செய்யவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதன் இறுதி அறிக்கை தற்போது வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் ஏற்பட்ட சோகம் – பெற்றோர்களே அவதானம்..

மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி மரணித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டி – பொல்கொல்ல நீர்தேக்கத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நீரில் மூழகிய மற்றும் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

15, 16, 17, வயதுடைய கட்டுகஸ்தோட்டை பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மூவரே அனர்த்தத்திற்கு முகம் கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரியின் செய்தி!

தமிழ் மக்கள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் குறித்து பல விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த வேளையில் தற்போது அதமிழ் மக்கள் குறித்து மைத்திரியின் சில கருத்துக்கள் தமிழ் மக்களை சந்தோஸத்தின் உச்சியில் கொண்டு சென்றுள்ளது.

குறிப்பாக  கடந்த தேர்தலின் போது தமக்கு வாக்களித்த 90வீதமான தமிழ் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அவர்களின் பிரச்சினையை தீர்ப்பது தமது பொறுப்பு மாத்திரமல்ல என தமது கடமையும் கூட என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  குறிப்பிட்டுள்ளார்.

தெ ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்…….

அரசாங்கத்தை பொறுத்தவரையில் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வுக்கு பெருமுயற்சியை மேற்கொள்கிறது.

சர்வதேச போர்க்குற்ற விசாரணையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றுக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, வெளிநாடுகளின் நீதித்துறை நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்..

ஐக்கிய தேசியக்கட்சியுடன் புரிந்துணர்வுடன் நடந்துக்கொள்வது தொடர்பில் தமக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் அழுத்தங்கள் இல்லை என்றும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

தாம் பதவியேற்ற பின்னர் இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகள் மற்றும் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள 9000 பில்லியன் கடன்பளு என்பனவற்றை தீர்க்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

எனினும் பதவியை இழந்தவர்கள் தமது நடவடிக்கைகளை, குழப்ப முனைவதாக குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி, 50 வருட அரசியல் அனுபவத்தை கொண்டுள்ளதன் அடிப்படையில் தாம் எந்தவொரு சலாலையும் சமாளித்து வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியான பின்னர் 11 தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு தாம் விஜயம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், முன்னர் இருந்த ஜனாதிபதிகள் எவரும் அவ்வாறு செல்லவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கை பொறுத்த வரையில் 90 வீதமான தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே அவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியது தமது கடமையாகும்.

தாம் பதவிக்கு வந்தபோது நாட்டின் சட்டம் பலவீனமாக இருந்தது. எனவேதான் பிரதம நீதியரசராக சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவரை நியமித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சிறுபான்மையினர் மத்தியில் இலங்கையின் நீதிமுறை தொடர்பாக நம்பிக்கையை கட்டியெழுப்புவது இதன் நோக்காகும்.

சமஸ்டி என்ற சொல் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பாதகமானதாக பார்க்கப்படுகிறது. வடக்கு மக்களை பொறுத்தவரை ஒற்றையாட்சி என்ற சொல் அபாயமானதாக கருதப்படுகிறது.

எனவே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது உடன்பாடு ஒன்றுக்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேவையற்ற வாதங்களை விடுத்து விரைவில் தீர்வு ஒன்றை ஏற்படுத்த முயல்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் புதிய கட்சி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், புதிய ஒரு அரசியல் சக்தி உருவாவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று மைத்திரிபால கூறியுள்ளார்.

இந்திய – இலங்கை எட்கா உடன்படிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர், எந்த நாட்டுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் அது செயற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவும் சீனாவும் இலங்கையின் நெருங்கிய நண்பர்கள் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

கேரட்டுடன் முளைத்த தங்க மோதிரம்! ஓர் அதிசய நிகழ்வு

ஜேர்மனியில் 82 வயது முதியவர் ஒருவரின் விவசாய தோட்டத்தில் கேரட்டுடன் சேர்ந்து தங்க மோதிரம் முளைத்துள்ளது.

82 வயதான இந்த முதியவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் தனது விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கையில் இவரது திருமண மோதிரம் கழன்று கீழே விழந்துள்ளது.

தொலைந்துபோன மோதிரத்தை பலமுறை தேடியும் இவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. மோதிரம் தொலைந்த 6 மாதங்களுக்கு பின்னர் இவரது மனைவி இறந்துவிட்டார்.

இந்நிலையில், தனது தோட்டத்தில் கேரட்டினை பயிரிட்டிருந்த இவர், அதனை அறுவடை செய்துகொண்டிக்கையில் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் தான் அறுவடை செய்த கேரட்டோடு சேர்த்து இந்த தங்க மோதிரமும் முளைத்திருந்தது.

மோதிரத்தை கையில் எடுத்த அவர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார். இந்த மோதிரம் திரும்ப கிடைத்தது இறந்துபோன எனது மனைவி மீண்டும் என்னுடன் இணைந்துள்ளது போன்று இருக்கிறது என கூறியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் இதுபோன்று கேரட்டுடன் முளைத்த மோதிரம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.