திண்டுக்கல் லியோனி கார் விபத்து

பட்டிமன்ற நடுவரும் திமுக திண்டுக்கல் தலைமை பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரபல பட்டிமன்ற நடுவரான திண்டுக்கல் லியோனி திண்டுக்கல்லில் உள்ள நாகல் நகருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

அப்போது முன்னாள் சென்ற லொறி மோதி லியோனின் கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லியோனிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிகிறது.

450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட அமெரிக்க முடிவு – அதிர்ச்சியில் உலக மக்கள் – நீரில் மூழ்குமா உலகம்?

அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அதிர்ச்சி விடயம் ஒன்றும் தற்போது பயங்கரமாக பரவத் தொடங்கியுள்ளது.

அதாவது உலகம் அதி பயங்கரமான அழிவைச் சந்தித்திடுமா என்ற கேள்வியே அது. இதற்கு முக்கிய காரணம் உண்டு 2016 நடக்கப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சுமார் 450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டு கூறியமையால் தான்.

உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கின்றது.

நாஸ்டிராடமஸின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.

அதே போன்று மோடி இந்தியாவின் பிரதமராவார் என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு வகையாக கருத்துகள் ஊடகங்கள் மூலம் வெளிவந்தன. இது ஆச்சரியமான உண்மை.

தற்போது ஒபாமாவே கடைசி எனவும் நாஸ்டிராடமஸின் கணித்து கூறியுள்ளார். இவரின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளதாகும்.

 

அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார். 2013ல் ஒபாமா மீண்டும் வெல்வார் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அது அப்படியே நடந்து விட்டது.

அதன் பின்னர் அமரிக்காவின் கடைசி அதிபர் தொடர்பில் ஒபாமா எனவும் கூறியுள்ளார். அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா? அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் அவரின் கணிப்பு கூறவில்லை.

ஆனாலும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என 450 வருடங்களுக்கு முன்னர் கணித்து கூறப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வகையில் 2016 பற்றி அவர் கணித்துள்ள பயங்கரமான விடயங்கள்,

2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும். இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்கும். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும்.

ஏற்கனவே பல நாடுகளில் பெருவெள்ளம் அலைக்கழித்ததைப் பார்க்கும்போதும், எல் நினோ எபக்ட் என்று கூறப்படுவதைப் பார்க்கும்போதும் இந்தக் கணிப்பு பலிக்கலாமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

மேலும் 2016 இன் பின்னர் கோள்கள் வழக்கத்திற்கு விரோதமான முறையில் இடம் மாறுமாம். இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாமாம். ஆனால் அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டிரடாமஸ் சொல்லவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையும். வல்லரசு நாடுகளின் தலைமை மாறுபடும் அவை உலகை அழிக்க திட்டமிடும். ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் கூறியுள்ளார். ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி எனவும் 450 வருடங்களின் முன்பே நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.

அவர் கூறியதைப்போன்றே தற்போது அடுத்த உலக யுத்தம் பற்றியும் பேசப்பட்டு கொண்டு வருவதோடு பயங்கரவாதமும் உலகில் தலை தூக்கியுள்ளமை அவதானிக்க கூடிய ஒன்றே.

தற்போது அமெரிக்கா தேர்தலும் அவர் ஏற்கனவே கூறிய பல்வேறு விடயங்களும் பலித்துள்ளமையால் தற்போது உலக அழிவு கொள்கையும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பரவலாக வெளிவருகின்றது. தொடர்ச்சியாக அவர் கூறியவை நடந்து வருகின்ற காரணத்தினால் உலகம் பயங்கர அழிவை சந்தித்திடும் என்று மக்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த அச்ச நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2. தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.

மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்! ஆண்டுக்கு ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுகிறார்

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் களத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இவர் நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தவர்; அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்தவர் இன்று அமெரிக்காவின் அதிபராகி வெள்ளை மாளிகைக்கு குடியேற உள்ளார்.

ரியல் எஸ்டேட் டு அரசியல்!

டொனால்ட் ஜான் டிரம்ப்… இதுதான் ட்ரம்ப்-ன் முழுப் பெயர். 1946-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்த டிரம்ப்-க்கு இப்போது 69 வயது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம், டிரம்ப் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி.)

டொனால்ட் டிரம்ப், தனது தந்தையின் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்தவர். தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் பதினாரடி பாய்கிற மாதிரி அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மிகப் பெரிதாக வளர்த்தெடுத்தவர். இன்று அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்து வருகிறார் ட்ரம்ப்.

ஹில்லாரி vs டிரம்ப்!

ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அந்தக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். குடியரசு கட்சியில் மெகா கோடீஸ்வர தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. மெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட மூன்று அடிப்படை தகுதிகள் அவசியம். அந்த நாட்டின் சட்டபூர்வ குடிமகனாகப் பிறந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இவை அடிப்படை விதியாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக யாரும் அதிபர் வேட்பாளராக முடியாது.

சர்ச்சை மன்னன்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே அதிபராவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள வேட்பாளராக பேசப்பட்டவர் டொனால்ட் டிரம்ப். ஆனால், இவர் அவ்வப் போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கியவர்.

‘நான் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவேன். ஈரானுடன் அமெரிக்கா செய்துள்ள அணு ஒப்பந்தம் என்னும் பேரழிவை உடனடியாக ரத்து செய்வேன். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட சவுதி ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், நான் அமெரிக்க அதிபரான பிறகு சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவேன்’ என பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொஞ்சமும் தயங்காமலும் யோசிக்காமலும் தினமும் சொல்லி வந்தவர் ட்ரம்ப்.

இந்தியாவுக்கு எதிராக..!

இதுமட்டும் இல்லாமல் வேலைவாய்ப்பு பற்றிய பிரசாரம் அமெரிக்க மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை தெரிந்துகொண்ட டொனால்ட் டிரம்ப் அது பற்றியும் பேசி மாட்டிக் கொண்டார்.

“இந்தியா, சீனா, ஜப்பான், மெக்சிகோ போன்ற நாடுகள் அமெரிக்கர் களின் வேலை வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளன. இந்த வேலை வாய்ப்புகளை மீட்டு, அமெரிக்க மக்களுக்கு வழங்குவேன். மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எல்லைச் சுவர் எழுப்புவேன்’’ என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

காந்தியின் பொன்மொழி!

பல இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவந்த டிரம்ப், யாரோ கூறிய ஒரு வாசகத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் காந்தியின் பொன்மொழி என்று குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

‘முதலில் உன்னைப் புறக்கணிப்பார்கள். பிறகு உன்னைப் பார்த்து சிரிப்பார்கள். பின்னர் உன்னோடு சண்டையிடு வார்கள். கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ என்று காந்தியின் பொன்மொழி என்று தவறாக குறிப்பிட்டு பேசினார். யாரோ சொன்னதை எல்லாம் காந்தி சொன்னதாக டொனால்ட் டிரம்ப் உளறி வருகிறார் என இவரை கிண்டலடித்து, கேலி செய்து விட்டனர் நெட்டிசன்கள்.

சொந்தச் செலவில்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் தேர்தல் செலவுக்காகப் பெரும் தொகையைத் திரட்டி வந்தனர். இதில் தொழிலதிபர்கள் பலரும் பெரும் தொகையை நன்கொடையாக அளித்து வந்தனர். இந்த நிலையில், தமது சொந்தப் பணத்தையே தேர்தலில் செலவு செய்தவர்தான் டொனால்ட் டிரம்ப்.

நன்கொடை அளிப்பவர்கள், பிரதிபலனை எதிர்பார்ப்பார்கள். அதனால் சொந்த செலவிலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப். ஆண்டுக்கு ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுகிறேன். தேர்தலில் ரூ.6,500 கோடி செலவானாலும் அதற்கு தாம் தயார் என கூறியவர்தான் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க அதிபர்!

இந்த நிலையில் ஹில்லாரி கிளின்டனை விட அதிக வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார். ‘இந்தியா தட்டிப் பறித்துள்ள வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு மீண்டும் பெற்றுத் தருவேன்’ என்பது உள்பட அமெரிக்க குடிமகன்களுக்கு சாதகமான பல கருத்துக்களை தெரிவித்த டிரம்ப் ரியல் எஸ்டேட் ஜாம்பவனாக இருந்து, இப்போது அமெரிக்காவின் அதிபராகி வெள்ளை மாளிகையில் குடியேற உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓம் எனும் மந்திரத்தை சொல்வது ஏன்?

பாரத மக்களால் பக்தியுடன் உச்சரிக்கப்படும் மந்திரம் ஓம். இது, உச்சரிப்பவர்களின் மனதிற்கும், உடலுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலிலும் அமைதியை ஏற்படுத்துவதோடு, நன்மை தரும் மின்னலையும் உண்டாக்குகிறது. பெரும்பாலான மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் ஓம் என்ற ஒளியுடன் தான் தொடங்குகின்றன. மங்கள நிகழ்ச்சிகளும் ஓம் என்ற ஒலியுடனே தொடங்கப்படுகின்றன.

ஒருவரை வரவேற்கும் போது ஓம் என்றோ ஹரிஓம் என்றோ கூறி வரவேற்பது ஒரு காலத்தில் நம் நாட்டில் வழக்கிலிருந்தது. தியானம் செய்யும்பொழுது ஓம் எனும் மந்திரமே மனதுக்குள் உச்சரிக்கப்படுகிறது. ஓம் எனும் எழுத்து வடிவமும் பக்தியுடன் வணங்கப்படுகிறது. ஓம் – ஒரு மங்களச் சின்னமாகப் போற்றப்படுகிறது. ஓம் என்பது இறைவனின் பொதுப் பெயர்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் ரிக், யஜுர் மற்றும் சாம என்ற மூன்று வேதங்களையும் பூ, புவஹ, சுவஹ என்ற மூன்று உலகங்களையும் குறிக்கின்றன. இறைவன் இவை அனைத்துமாக, இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாக விளங்குகிறான். இறைவன் உருவமற்றவன்; குணங்களற்றவன். ஓம் எனும் மந்திரத்தை உச்சரிக்கையில் இரண்டு ஓம் ஒலிகளுக்கிடையில் நிலவும் நிசப்தம் இறைவனைக் குறிக்கிறது. ஓம் பிரணவம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதாவது, இறைவனின் மகிமையைக் குறிக்கும் ஒலி அல்லது ஒலி வடிவம்! வேதங்களின் சாரம் அனைத்தும் ஓம் என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளன. இறைவன் ஓம் அத: என்ற ஒலிகளை எழுப்பிய பிறகே சிருஷ்டியைத் தொடங்கினான் என்று கூறப்படுகிறது. எனவேதான் எந்த ஒரு வேலையைத் தொடங்குவதற்கு முன்பும் ஓம் என்று கூறுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஓம் என்று கூறும்பொழுது எழும் ஓசை ஒரு மணியின் ஓசை போல் எதிரொலிக்க வேண்டும்.

அந்த ஒலி மனதை அமைதியில் ஆழ்த்தி ஒருமுகப்படுத்துகிறது. மனம் இந்த நுட்பமான ஒலியால் மூழ்கடிக்கப்படுகிறது. ஞானத்தை நாடுபவர்கள் ஓம் எனும் மந்திரத்தின் ஆழ்ந்த கருத்தில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து முக்தியடைகின்றனர். ஓம் பலவிதமாக எழுதப்படுகிறது. பொதுவாக எங்கும் பயன்படுத்தும் வடிவம் விநாயகரைக் குறிக்கிறது.

ஓம் என்ற எழுத்தின் மேல் உள்ள வளைவு தலையையும், அடிப்பாகம் வயிறையும், பக்கத்தில் உள்ள வளைவு துதிக்கைகளையும் குறிக்கின்றன. புள்ளிடன் கூடி அரைவட்டம் விநாயகரின் கையையும் அதில் உள்ள மோதகத்தையும் குறிக்கிறது. இவ்வாறு ஓம் வாழ்க்கையின் லட்சியம். அதனை அடையும் வழி, படைக்கப்பட்ட உலகம், படைப்பின் பின்னே உள்ள பேருண்மை, புனிதமான மற்றும் உருவமுள்ளவை, உருவமற்றவை ஆகிய அனைத்தையும் குறிப்பதாக உள்ளது.

கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை நீங்கியது: நாளை படம் வெளியாகிறது

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை உலகமெங்கும் 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிவா வெளியிடுகிறார். இந்நிலையில், ‘லிங்கா’ படத்தை வெளியிட்டதில் தனக்கு கொடுக்கவேண்டிய பாக்கி தொகையை சிவா திருப்ப செலுத்தாததால் அவர் வெளியிடும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று  விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை திரையிட இடைக்கால தடை விதித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விசாரணையில் ரூ.35 லட்சத்தை வைப்பு நிதியாக நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தரப்பு செலுத்தினால் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடுமாறு நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வாங்கி வெளியிடும் சிவா, நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய தொகை செலுத்த ஒப்புதல் கொடுத்ததையடுத்து, ‘கடவுள் இருக்கான்’ குமாரு படத்திற்கான இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை 4 வாரத்துக்குள் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, திட்டமிட்டப்படி ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.ராஜேஷ் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ராம்ப்பின் வெள்ளை மாளிகைக்கான பயணம் உண்மையில் மகத்துவமானது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அரசாங்கத்துடன் மிக நெருங்கிச் செயற்பட எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அவர் எனது ஜனாதிபதி இல்லை: டிரம்ப் வெற்றியை எதிர்த்து கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

அதேசமயம், அதிருப்தியாளர்கள் தங்கள் எதிர்ப்பினை வெளிக்காட்ட தொடங்கி உள்ளனர். குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்திய சிறிது நேரத்தில், கலிபோர்னியா சான்டா பார்பரா பல்கலைக்கழகம் அருகில், எதிர்ப்பு கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘என்னுடைய ஜனாதிபதி இல்லை, என்னுடைய ஜனாதிபதி இல்லை’ என்று முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெஸ்ட்வுட் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடப்பதாகவும், எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை எனவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்லாந்தில் நடந்த போராட்டம் காரணமாக விரைவு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே திரண்டு வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் டிரம்பை வாழ்த்தி கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் முறையை கூறினார் பஸில்

இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் துரோக செயற்பாடுகளுக்கு, மக்கள் எதிராகியதன் பின்னர் அரசாங்கத்தை மாற்றுவதற்கு அவசியமான தேசிய சக்தி ஒன்றை கட்டியெழுப்புவதற்கு தாம் செயற்படுவதாக பஸில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அம்பாறையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சார கூட்டத்தின்போதே இவ்வாறு கூறினார்.

அங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் முறை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

தேசிய சக்தி ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நன்கு படித்த அறிஞர்களின் ஆதரவு தமக்கு கிடைப்பதாக கூறினார்.

நேரடியாக அரசியலுக்கு வர விரும்பாத எனினும் மாற்றத்தை ஏற்படுத்த அவசியம் உள்ள நபர்கள் எங்களிடம் உள்ளனர் எனவும் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் ட்ரம்ப்பிற்கு குவியும் வாழ்த்துக்கள்! இது தான் அமெரிக்கா…!

அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 8ஆம் திகதிக்கு முதல்நாள் வரை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் சற்று ஹிலாரி பக்கமே சாய்ந்து இருந்தது.

முதல் பெண் அதிப‌ரை வரவேற்க அமெரிக்கா தயாராகிவிட்டது என்று தான் அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால், அமெரிக்கர்கள் தங்கள் மனநிலை வேறு என்று நிரூபித்துள்ளனர்.

ஒரு வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர், மீம்ஸ் நாயகன் என்பதையெல்லாம் தாண்டி டொனால்ட் ஜான் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார்.

ஆம் இது தான் அமெரிக்காவின் மனநிலை. அவர்களுக்கு ட்ரம்ப் போன்றவர்களை தான் பிடித்திருக்கிறது.

ஆரம்பம் முதலே மூன்று விஷயங்களில் தான் ட்ரம்ப் கவனம் செலுத்தினார்.

அவை வெற்றி , ஒப்பந்தம் , சுவர் எழுப்புவது. இதைத்தான் ட்ரம்ப் முன்னிறுத்தி வந்தார்.

இதற்கிடையில் தான் ஜான் ஆலிவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ட்ரம்பின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்தது.

பெண்களைப் பற்றி இழிவாகப் பேசினார் என்ற விஷயமும், இஸ்லாமியர்களை வெளியேற்றுவேன் என்கிற சூளுரையும் ட்ரம்ப்பை கிட்டத்தட்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்க வைக்கும் என்கிற மாயையை அனைவரிடமும் உருவாக்கின.

ட்ரம்ப் தன் மீதான விமர்சனங்களைத் தனக்குச் சாதகமாக மாற்ற என்ன செய்தார் என்பது தான் க்ளைமேக்ஸ். ட்ரம்ப் தனது நிலைப்பாடுகளை எந்த விமர்சனத்துக்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை.

இது தான் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்குமே அவரை பிடிக்க முக்கியக் காரணமானது. எப்போதும் அமெரிக்கர்களின் மனநிலை கொஞ்சம் அழுத்தமானதாகவே இருக்கும்.

அதுதான் அவர்களை உலக அரங்கில் வல்லரசு என்கிற பெயரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதனால் எப்போதும் அவர்களுக்கு விடாப்பிடியாக இருப்பவர்களைப் பிடிக்கும்.

அதோடு வரலாற்றை மாற்றி எழுதவும் விரும்பாத நாடாக இருந்து வந்துள்ளது அமெரிக்கா.

ஒரு பெண்ணை அதிபராக்கிப் பார்க்கக்கூடாது என்பதில் அமெரிக்கர்கள் இன்று வரை ஆணித்தரமாக இருக்கிறார்கள். அதன் விளைவே இத்தனை ஆண்டுகளில் ஒரு பெண் அமெரிக்க அதிபர் ஆகவில்லை.

இதோடு சேர்த்து ட்ரம்பை பலப்படுத்திய விஷயங்கள் வேறு. பேச்சுத்திறன் அவரது உத்திகளில் ஒன்று. பயப்படாத, தடையற்ற கம்பீரமான பேச்சு அவருக்கு.

அதிலும் அமெரிக்காவின் முன்னேற்றத்தை வலியுறுத்தும் அவரின் திடமான ஆரம்பகால பிரசார உரைகள் அமெரிக்கர்களைப் பெரிதும் கவர்ந்தது.

ட்ரம்பின் வெற்றிக்கு இன்னொரு காரணம், அவரது பிராண்ட் இமேஜ். தன்னைப் பற்றிய தாக்கத்தை மக்கள் மத்தியிலும், அவருக்கு அதிக ஆதரவுள்ள மாகாணங்களிலும் குறையாமல் பார்த்துக் கொண்டார்.

அதேபோல் அவர் வலியுறுத்திய விஷயத்தைப் பின்பற்றவும் செய்தார். சில இலக்குகளை எப்படியாவது அடைவது என்று நினைத்து விட்டால், அந்த இலக்குகளைப் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

மற்ற நாடுகளின் கலாச்சாரமும், அமெரிக்க கலாச்சாரமும் வேறு. இந்தியர்களுக்குச் சரியில்லை என்று தோன்றுவது அமெரிக்கர்களுக்குச் சரியாகத் தோன்றலாம்.

இதனையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் ட்ரம்ப். அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரசாரம் செய்த ட்ரம்ப் தனது ஆதரவை தக்க வைத்துக்கொண்டார்.

வித்தியாசமான அமெரிக்கர்களின் மனநிலை

ஒருவருக்குச் சத்தமாக இருப்பது இன்னொருவருக்கு இசையாக இருக்கும் என்பது தான் கூற்று. மற்ற நாட்டினரும் ட்ரம்ப் ஒரு வியாபாரி, உளறு வாயர் எனப் பல விமர்சனங்களை வைத்தாலும் அமெரிக்கர்களில் ஒரு பெரும் பிரிவினருக்கு ட்ரம்ப்பை மிகவும் பிடித்து இருக்கிறது.

அமெரிக்கா முதலாளித்துவ நாடு என்ற பிம்பத்திலிருந்து தன்னை விலக்கி கொள்ள விரும்பாத நாடு. ட்ரம்ப் போன்ற வியாபாரிகளை அமெரிக்கா தள்ளி வைக்காது என்பதை அமெரிக்கா நிருபித்துள்ளது.

அதோடு இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்கள் காலத்தில் மிகப்பெரிய போர்களை அமெரிக்கா நடத்தியுள்ளது. மற்ற நாடுகளிடத்தில் பெரியண்ணன் மனப்பான்மையையும் கடைபிடித்து வந்திருக்கிறது.

அதனைப் புதிதாக வருகிற ஒரு பெண்ணால் செய்ய முடியாது என்ற எண்ணமும், இறுதி நேரத்தில் ஹிலரியின் மீது வீசப்பட்டது.

அதே நேரத்தில் பதிலளிக்க முடியாத சில குற்றச்சாட்டுகளும், ஹிலரியின் உடல் நிலையும் ட்ரம்புக்குச் சாதகமாக அமைந்தது.

என்னதான் ஆரம்பத்தில் வாக்குக்காக உலக நாடுகளை விமர்சித்தாலும், இறுதியில் இந்தியா, மோடி, அமைதி, வேலைவாய்ப்பு என ட்ரம்ப் அடித்த சிக்ஸர்கள் அவருக்கு வாக்குகளானது என்றும் கூறலாம்.

ஒபாமா காலத்தில் அமெரிக்கா பெரிதாக வளரவில்லை. மீண்டும் ஜனநாயக கட்சிக்கு ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கர்கள் நினைத்திருக்கலாம்.

அதனால் தான் அமெரிக்கர்கள் ”மேக் அமெரிக்கா க்ரேட் எகெய்ன் ” என்பதை நம்பி இருப்பார்கள். ஆனால், உங்கள் மேடை பேச்சு அல்ல அமெரிக்க அதிபர் பதவி.

வியாபாரத்தில் நஷ்டம் வந்தால் சரி செய்துவிடலாம். உங்களை வியாபாரியாக இல்லாமல் அதிபராகவே பார்க்கதான் உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறந்த அமெரிக்காவை உருவாக்க வாழ்த்துக்கள் மிஸ்டர் ட்ரம்ப்…

கிண்ணியாவில் அமரும் புத்த பெருமான்- அச்சத்தில் முஸ்லிம்கள்

கிண்ணியா – துறையடியில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் முஸ்லிம்கள் பெரிதும் அச்ச நிலைக்குள்ளாகியிருக்கின்றர்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களை மையமாக கொண்டு நகர்த்தப்படும் புதத்ர் சிலை விபகாரம் தற்பொழுது முஸ்லிம்களின் எல்லைப் பகுதிகளையும் நகர்கின்றமையானது, நாட்டில் பௌத்த மத்தை பரப்பி நாட்டிலுள்ள மக்களின் இன மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கமாக அமையலாம் என பலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் பல சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஒரு சில பௌத்த குடும்பங்கள் கிண்ணியா துறையடியில் வசிக்கும் நிலையில், இங்கு புத்த சிலை வைப்பதனூடாக முஸ்லிம்களின் பூர்வீகத்தை அவர்கள் முற்றாக சுரண்டுவதோடு நில உரிமையும் முழுமையாக பறிபோகின்றது எனவும் அப்பகுதி முஸ்லிம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

யார் இந்த டொனால்ட் ட்ரம்ப்? அறிந்துகொள்வோம் வாங்க….

அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த 1946ஆம் ஆண்டு ஜுன் 14ம் திகதி நியூயார்க் நகரத்தில் ஒரு பெரிய வர்த்தகப் புள்ளிக்கு மகனாக பிறந்தவர்.

டொனால்ட் ட்ரம்ப்

அரசியல் வாசனை இன்றி வளர்க்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க் சிட்டியில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான இளங்கலை பட்டப்படிப்பை 1968ஆம் ஆண்டு படித்து முடித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலை டொனால்ட் ட்ரம்ப் கவனிக்கத் தொடங்கினார்.

அந்தத் தொழிலில் ட்ரம்ப் பெரிய அளவில் வளர்ந்ததோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.

70 வயதான ட்ரம்ப் 1987ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

என்றாலும் 1999ஆம் ஆண்டு அதில் இருந்து வெளியேறினார். பின்னர், 2009ஆம் ஆண்டில் மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்து 2011ஆம் ஆண்டு வரை அதில் நீடித்தார்.

கடந்த 1987ஆம் ஆண்டிற்கு முன்னர் ஜனநாயகக் கட்சியிலும் டொனால்ட் ட்ரம்ப் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இதனிடையே 1999 முதல் 2001 வரை சீர்திருத்தக் கட்சியிலும் இணைந்து ட்ரம்ப் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில்தான், 2012ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியில் மீண்டும் சேர்ந்த ட்ரம்பிற்கு 2015ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஜனநாயகக்கட்சியின் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்து இன்று 45ஆவது அதிபராக அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

யாழில் கைதாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுக்கள் மற்றும் சமூக விரோத செயல்களுடன்தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவுபொலிஸாரால் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

நேற்றும் பலர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மற்றும் நெல்லிடிப்பகுதிகளைச் சேர்ந்த மூவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு திடீரெனச் சென்றகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்த வீட்டைச் சேர்ந்த இளைஞரைக் கைது செய்தனர்.

வீட்டில் மேல் தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் ஒன்றையும் அவர்கள் மீட்டுஎடுத்துச் சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, குழு மோதல் மற்றும் சமூக விரோத குற்றச் செயல்கள்அதிகரித்துள்ளன.

சுன்னாகம் பகுதியில் பொலிஸார் இருவர் அண்மையில் வாள்வெட்டுத்தாக்குதலுக்கு இலக்காயினர்.

இந்நிலையில் இவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை தேடிக் கைது செய்யும்நோக்குடன் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் வந்துள்ளது.

இந்தக் குழுவினரால் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ஏழு பேர்கைது செய்யப்பட்டதாக யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று செவ்வாய் இரு நாட்களிலும் நால்வர்கைதாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றுவரை வெளியான உறுதியான தகவல்களின் படி இதுவரை 11 பேர் பயங்கரவாத குற்றத் தடுப்புபிரிவு விசேட குழுவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவ தரப்பைசேர்ந்த ஒருவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒருவரும் கைதானவர்களில்அடங்குகின்றனர்.

மறக்க முடியல…! வாழவும் பிடிக்கல..! நயன்..நயன்..நயன்…! தவிக்கும் ஹீரோ..?

சிம்பு இப்போது  மிகவும் மாறி விட்டார்…! படபிடிப்புகளுக்கு அரைமணி நேரம் முன்பே சென்று விடுகிறார்.

கேரவனில் போய் உட்காருவது  இல்லை. உதவி இயக்குனர் போல இயக்குனர்களுக்கு உதவி செய்கிறார்.உணவு வீட்டில் இருந்து அம்மா கொடுத்து விடுகிறார்.

அப்பா அவ்வப்போது பேசிக்கொண்டே இருக்கிறார். திருமணம் பற்றி பேசும் போது மட்டும் அப்செட் ஆகி விடுகிறார் அந்த தமிழ் நடிகன்…!

நண்பர்களிடம் முதல் காதல் பற்றி பேசி கண் கலங்குகிறார் என்கிறார்கள். நயனை மறக்கவே முடியல..!

எப்போதும் அவர் நினைவுகள் வாட்டுகிறது என்று கூறி வருத்தப் படுகிறார் சிம்பு..! பாவம் தானே..!

வட மாகாண சபையில் ஒதுக்கீட்டு நிதியில் 50 வீதம் செலவிடப்பட்டுள்ளது! முதல்வர்

வட மாகாண சபைக்கு 2016ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 50 வீதம்செலவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிகாரிகளால் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல் சரியானது தானா? எனஎதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

வட மாகாண சபையின் 65வது அமர்வு நேற்று நடைபெற்றது.

இதன்போது 2016ம் ஆண்டுக்கானமூலதன நிதியில் கடந்த 31.08.2016 வரை சுமார் 38 வீதமான நிதியேசெலவிடப்பட்டுள்ளதாக நிதிக்கூற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே அதற்கான பௌதீக முன்னேற்ற அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர்சி.தவராசா முதலமைச்சரிடம் கோரினார்.

இதன்போதே 50 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.பௌதீகமுன்னேற்றம் 70 வீதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் தவராசா, உங்களுக்கு அதிகாரிகள்வழங்கிய தகவல் சரியானதா? எனக் கேட்டார். தனக்கு அந்தத் தகவல்களில் சந்தேகம்இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, செப்டெம்பர் 30ம் திகதி வரையான நிதிக்கூற்றறிக்கையின் பிரகாரம் 43வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக மாகாண சபை இணையத் தள நிதி முன்னேற்ற அறிக்கையில்அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்திரன் மற்றும், கயல் ஆனந்தி இணையும் “ரூபாய்” – ட்ரெய்லர்

சென்னை பாண்டி பஜாரில் போலீஸ் நிலையம் முன்பு திருநங்கை தீக்குளித்து பலி

பாண்டிபஜார் திருமலைப் பிள்ளை தெருவில் இன்று அதிகாலை 4 திருநங்கைகள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாண்டி பஜார் சப்-இன்ஸ்பெக்டர் டில்லி, போலீஸ்காரர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து வாகனத்தில் வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் திருநங்கைகளிடம் போலீசார் விசாரித்தனர். அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தள்ளு முள்ளும் ஏற்பட்டது.உடனே 3 திருநங்கைகள் தப்பி ஓடி விட்டனர்.

சூளைமேடு நமச்சிவாய புரத்தை சேர்ந்த திருநங்கை தாரா (வயது 40) தனது மொபட்டுடன் நின்று கொண்டிருந்தார். அவரை மொபட்டுடன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அதிகாலை 4.30 மணிக்கு போலீசார் தாராவை வீட்டுக்கு சென்றுவிட்டு காலையில் வந்து மொபட்டை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினர்.

அதற்கு தாரா மறுப்பு தெரிவித்து மொபட்டை உடனே தரும்படி கேட்டார். போலீசார் மறுத்து விட்ட தால் ஆவேசத்துடன் வெளியே சென்ற அவர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி வந்து போலீஸ் நிலையம் முன்பு திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

எரியும் தீயுடன் அவர் அலறி துடித்ததை பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.தீயை அணைத்து கீழ்பாக்கம்  அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி காலை 10.30 மணிக்கு தாரா இறந்தார்.

திருநங்கை தாரா தீக்குளித்ததை அறிந்த திருநங்கைகள் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்ற போது திருநங்கைகள் தாக்கவும் முயற்சித்தனர்.  இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

அப்போது தாரா பலியான தகவல் அறிந்ததும் திருநங்கைகளின் ஆவேசம் அதிகமானது. அவர்கள் போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மறியலும் செய்தனர்.
இதனால் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி முன்பு பெரும் பதட்டம் நிலவியது. போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தடுப்புகளை மீறி ஆவேசத்துடன் சென்ற அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி சென்ற அவர்கள் தங்கள் ஆடைகளை கழற்றி ஆவேசத்துடன் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். ஒரு திருநங்கை அங்கு மெட்ரோ பணி நடக்கும் இடத்திலிருந்து ஒரு பெரிய கல்லை தூக்கி கொண்டு ஓடி வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

இணை கமிஷனர்கள் அன்பு, மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சு நடத்தினர்.

பைரவாவை கலாய்க்கும் விஜயகாந் – வீடியோ

ரெயிலில் குரங்கு வித்தை காட்டிய இளைஞனுக்கு நடந்த கொடூரம்! அதிர்ச்சி வீடியோ

விஜய்யுடன் நடிக்கிறேன், ஆனால் ஒரு கண்டிஷன்.

இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டவர் நயன்தாரா.

அதை தொடர்ந்து வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார், அப்போது நயன்தாரா மார்க்கெட் வேறு, தற்போது வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

அட்லீ இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

நயன்தாரா இதை வைத்தே ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டுவிட்டாராம், அது என்னவென்றால் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தால், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என கண்டிஷன் போடுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.