அஜித் விஜய் ரசிகர்களுக்கு இறுதியில் செருப்படி கொடுத்த கோபிநாத்

Vodafone கஸ்டமர் care பெண்ணை நம்ம ஊர் பையன் என்ன பாடு படுத்திறான்! பாருங்கள்! வீடியோ

தேர்தலில் தோல்வி அடைந்தால் வருந்துவீர்களா? டொனால்ட் டிரம்ப் கூறிய அதிரடி பதில்

அமெரிக்க ஜனாபதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார்.

பாக்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் டிரம்பிடம் நிருபர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ‘இந்த தேர்தலில் எனக்கு நானே வாக்களிக்கப்போகிறேன்’ என நகைச்சுவையாக தொடங்கியுள்ளார்.

‘நாடு முழுவதும் பிரச்சாரம் சென்றபோது பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. நிச்சயமாக வாக்காளர்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘தேர்தலில் தோல்வி அடைந்தால் அதற்காக வருந்துவீர்களா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு சிறிதும் தயங்காத டிரம்ப், ‘ஒருவேளை தோல்வி அடைந்தால், எனது பொண்ணான நேரத்தை வீணாக செலவிட்டதற்காக வருந்துவேன்.

சொந்தமாக உழைத்து சம்பாதித்த சுமார் 66 மில்லியன் டொலரை செலவழித்தற்காக வருந்துவேன்’ என பதிலளித்துள்ளார்.

’இறுதியாக வாக்காளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிரம்ப் ‘அமெரிக்காவில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. திறமைசாலிகள் உள்ளனர். கணக்கில் அடங்காத வளங்கள் இருக்கின்றன.

இவை அனைத்தையும் சரியாக பயன்படுத்தி அமெரிக்காவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல அனைவரும் சென்று வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக டிரம்ப் பேசியுள்ளார்.

நண்பனுடன் மனைவி உடலுறவு ; கணவன் மனைவியிற்கும் நண்பனிற்கும் கொடுத்த கொடூர தண்டனை

House in Tatarstan region where the double murder took place

நெருங்கிய நண்பருடன் பாலியல் உறவு வைத்த மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவன், நண்பரின் ஆணுறுப்பையும் வெட்டி வீசிய சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் ஷாமா கிராமப் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் வசித்துவந்த விளாட்மீர் சிதோரோவ் என்பவர் தமது நெருங்கிய நண்பருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட தனது மனைவியை கத்தியால் பல முறை குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே அறையில் தப்பிக்க வழியின்றி சிக்கிக்கொண்ட தனது நெருங்கிய நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசியுள்ளார்.

இதனால் அதிக இரத்தப்போக்கு மற்றும் உடனடியாக மருத்துவ உதவியை நாட முடியாமை உள்ளிட்ட காரணங்களால் குறித்த நபரும் மரணமடிந்துள்ளார்.

குறித்த சம்பவத்தன்று குறிப்பிட்ட நபர் தமது குழந்தைகளுடன் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது அவரது மனைவி தமது தோழியை சந்திக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தோழியை சந்திக்க செல்லும் மனைவியை இவரது நண்பர் தமது வாகனத்தில் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சந்தேகத்தின் அடிப்படையில் தமது மனைவியின் தோழியின் வீட்டுக்கு சென்ற பாரத்த போதே கணவனுக்கு  மனைவி தோழி வீட்டுக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கணவன் தனது நண்பனை சந்திக்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனது நண்பனின் வீட்டினுள் சென்று பார்த்தபோது இவரது மனைவி நண்பரின் படுக்கையறையில் ஆடை கலைந்த நிலையில் படுத்திருப்பதை கண்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அவர் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு நண்பரின் ஆணுறுப்பையும் வெட்டி வீசியுள்ளார்.

தற்போது குறித்த நபரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹேரத் அபாரம் ; 272 ஓட்டங்களுக்குள் சுருண்டது சிம்பாப்வே

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே அணி 272 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

சிம்பாப்வே அணியின் சார்பில் செரி 80 ஓட்டங்களையும், எர்வின் 64 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில்  ரங்கன ஹேரத் 5 விக்கட்டுகளையும், டில்ருவான் பெரேரா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இதேவேளை இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 504 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 232 ஓட்டங்கள் முன்னிலைப்பெற்று, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.

கட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில்!

இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது.

தேசிய முகைமைத்துவ மாநாடு இன்று காலை கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுரைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

2017 -ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில்  கட்டுநாயக்க விமான நிலைய ஓடு பாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறிப்பிட்ட நேரம் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படவுள்ளது. இதன்போது மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

 

பரோன்ஸ் அனிலேவை சந்தித்தார் இரா.சம்பந்தன்

ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்றுஇன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது.

 

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இச்சந்திப்பின் போது வடக்கிலே காணப்படும் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகள் தொடர்பிலும் அமைச்சரை விளக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பொது மக்களின் காணிகள் விடுப்பில் ஏற்ப்பட்டுள்ள முன்னேற்றங்களை விபரித்ததோடு இந்த காணி விடுவிப்புகள் இன்னும் துரிதகதியில் இடம்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் பிரித்தானியாவின் பங்கும் சர்வதேசத்தின் கண்காணிப்பும் பங்கும் கடந்த காலங்களில் இருந்ததைப்போல தொடர்ச்சியாகவும் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மங்கள வாழ்வு தரும் பிரம்மா

படைப்புத் தொழிலை சிவபெருமானிடம் இருந்து பெற்றார் பிரம்மதேவன். முற்காலத்தில் ஈசனைப் போலவே, பிரம்மாவுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது. இதனால் தானும் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மா கர்வம் கொண்டார். பிரம்மனுக்கு பாடம் புகட்ட எண்ணிய ஈசன், பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்றை கொய்துவிட்டார். மேலும் படைப்புத் தொழிலையும் அவரிடம் இருந்து பறித்தார்.

இதையடுத்து பிரம்மதேவன் தன்னுடைய தவறை உணர்ந்து, ஈசனிடம் மன்னிப்பு கோரினார். பூலோகத்தில் ஆங்காங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுமாறும், தகுந்த நேரம் வரும்போது பலன் கிடைக்கும் என்றும் சிவபெருமான் அருளினார். இதையடுத்து பிரம்மதேவன் பூலோகம் வந்து ஆங்காங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இறுதியில் திருப்பட்டூர் என்னும் தலத்திற்கு வந்து 12 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், பிரம்மனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அளித்து ஆசி வழங்கினார்.

பிரம்மன் வழிபட்ட இடம் என்பதால், இந்தத் தலத்தில் உள்ள ஈசன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் சிவ ஸ்தலமாக இருந்தாலும், இங்குள்ள பிரம்மா புகழ்பெற்று விளங்குகிறார். இங்கு பிரம்மா பிரமாண்ட தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். குரு பரிகாரத் தலமாக திகழும் இந்த ஆலயத்தில், மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னிதியில் 6 அடி உயரத்தில் தியான நிலையில் வீற்றிருக்கிறார் பிரம்மா.

குரு பகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், இந்த ஆலயத்தில் உள்ள பிரம்மாவுக்கு, வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. குருப்பெயர்ச்சி அன்றும், இத்தல பிரம்மாவுக்கு பரிகார யாக பூஜைகள் நடைபெறும். 7-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கான பரிகார தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

பிரம்மா விசேஷமானவராக இருந்தாலும், இத்தலத்தில் ஈசனே பிரதானம். சிவபெருமானை வழிபடும் பக்தர்களுக்கு, பிரம்மதேவனும் அருள்செய்வார். இந்த ஆலய ஈசனை வழிபட்டதால்தான், பிரம்மாவின் தலையெழுத்து மாறியது. எனவே இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களின் தலையெழுத்தை இத்தல பிரம்மதேவர், மங்களகரமாக மாற்றித்தருவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிறுகனூர் என்ற ஊர். இங்கிருந்து திருப்பட்டூர் செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தூரம் சென்றால், பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

வெள்ளகாரருக்கு பொய் சொன்ன யாழ் பொலிஸ் அதிகாரி சிக்கினார்!!முழி பிதுங்கி நின்ற பரிதாபம்!!

யாழ்.மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவாக இடம்பெறுவதாக யாழ்.பொலிசார் பிரித்தானியாவின் அமைச்சரிடம் கூறிய பொய் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

யாழ் விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அமைச்சரவைம் குழு, பொலிசாரிடம் யாழில் குற்றங்கள் அதிலும் பொதுவாக பெண்கள் மீதான வன்முறைகள் எத்தனை பதிவாகியுள்ளது என்று கேட்டுள்ளார்கள்.

பொலிசார் ஒரு எண்ணிக்கையை காண்பித்து இது தான் என்றும். யாழில் மிக மிக குறைவாகவே வன்முறைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்கள்.

பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சரும், பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விசேட பிரதிநிதியுமான ஜொய்ஸ் அன்லெய் தலைமையிலான குழுவினர் இன்று காலை, அரச சார்பற்ற நிறுவனமான வின் என்று கூறப்படுகின்ற நிலையத்திற்கும் விஜம் செய்தார்கள்.

அவர்களிடம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எத்தனை பதிவாகியுள்ளது என்று அதே கேள்வியைக் கேட்டுள்ளார்கள்.

கடந்த மாதம் பதிவான வன்முறைகளை பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில். அதனை விட கூடிய முறைப்பாடு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்தது.

இதனால் பிரித்தானிய அமைச்சர்கள் அதிர்ந்து போனார்கள்.

அப்போது அங்கே இருந்த பொலிஸ் அதிபர், என்ன செய்வது என்று தெரியாமல் திறு திறு என்று நின்றிருந்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடியோ:வணிகவளாகத்தின் கண்ணாடி கதவு சரிந்து விழுந்து குழந்தை படுகாயம்

சீனாவில் வணிக வளாகம் ஒன்றில் பெரிய  கண்ணாடி கதவு ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது சிறுமி சிக்குண்டு படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் சீனா பகுதியில் அமைந்துள்ளது போஷன் நகரில் வணிக வளாகம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று ஒரு பெண் 3 வயது குழந்தையுடன் சென்று உள்ளார்.

வளாகத்தின் உள்ளே செல்லும் வாசலில் பெரிய  கண்ணாடி கதவு ஒன்று இருந்தது.பெண் முதலில் சென்றுவிடார் பின்னாடியே 3 வயது குழந்தை வந்து உள்ளது. அப்போது  கண்ணாடி கதவானது எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்துள்ளது. இதில் குறித்த சிறுமி சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.அந்த பெண்ணும்  கீழே விழுகிறார்

கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் குழந்தை காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது. கதவு விழுந்தது குறித்து குறித்த வணிக வளாகத்தின் நிர்வாகிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

குற்றவாளிக்கு அருள் செய்த புத்தர்

பாவங்களை மட்டுமே செய்து வந்த கொலைகாரன் அவன். குற்றமும், அதற்கான தண்டனையுமாக கழிந்து கொண்டிருந்த, அந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வர எண்ணினான். அவனுக்கு புத்தரை சந்திக்க வேண்டும் என்று ஆசை. அவரது மடாலயத்திற்கு எப்படிச் செல்வது? என்று தெரியாமல், மதில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்ற போது, அங்கிருந்த சீடர்களிடம் மாட்டிக்கொண்டான்.

அவன் ஒரு கொலைகாரன் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். அவர்களிடம், ‘நான் திருடுவதற்காக வரவில்லை. புத்தரை பார்ப்பதற்காகவே வந்தேன். நான் சன்னியாசி ஆக வேண்டும்’ என்றான்.

ஆனால் அவனது வார்த்தையை புத்தரின் பிரதான சீடராக இருந்த சாரிபுத்தன் நம்பவில்லை. கோபத்தில் ‘இவனை இங்கிருந்து துரத்துங்கள்’ என்று கட்டளையிட்டான்.

சாரிபுத்தன் அப்படிச் சொன்னது அவனுக்கு கோபத்தை வரவழைக்கவில்லை. ஆனால் மனம் உடைந்து போனான். ‘புத்தரை நெருங்கக் கூட முடியாத அளவுக்கு நான் பாவியாக இருக்கிறேனே’ என்று உள்ளம் நொந்தவன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான். அதையும் புத்தரின் புனித இடத்திலேயே செய்ய உறுதிகொண்டான்.

மடாலயத்தின் மதில் சுவருக்கு வந்தவன், தன்னுடைய தலையை அதில் பலமாக மோதினான். தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த நேரம் பார்த்து பிட்சைக்குச் சென்றிருந்த புத்தர் மடாலயம் திரும்பினார்.

அப்போது ஒருவன் சுவரில் தலையை முட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து பதறிப்போய், அவனைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் ‘என்ன நடந்தது?’ என்று விசாரித்தார். அவன் அனைத்தையும் சொல்லி முடித்ததும், அவனை சாரிபுத்தனிடம் அழைத்துச் சென்ற புத்தர், ‘எதற்காக இவனை விரட்டினாய்?’ என்று கேட்டார்.

சாரிபுத்தனோ, ‘இவன் திருந்த முடியாதவன்’ என்றான்.

‘இல்லை.. உன் கணிப்பு தவறானது. இவனை விரைவில் திருத்திவிட முடியும். இவனும் துறவுக்குத் தகுதியானவனாக மாறுவான்’ என்றார்.

புத்தரின் வார்த்தையைக் கேட்டதும், அந்த கொலைகாரனின் மனம் ஆனந்தம் அடைந்தது. புத்தரின் கருணை அவனை வியப்படையச் செய்தது. ஒரே வாரத்தில் அமைதியும், சாந்தமும் தவழும் ஒப்பற்ற மனிதனாக அவன் மாறியிருந்தான். சன்னியாசம் ஏற்கும் தகுதியை அடைந்தான்.

அவனது இந்த மாற்றத்தைக் கண்டு சீடர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். ‘இது எப்படி சாத்தியம்?’ என்று கேட்டான் சாரிபுத்தன்.

புத்தர் மெல்லிய புன்னகையுடன்.. ‘சாரிபுத்தா! நீ நல்லவன். ஆனால் உனக்கு ஞானம் இல்லை. பாவங்களின் சுமை என்ன என்பதை நீ அறியவில்லை. அதன் தவிப்பை நீ உணர்ந்திருக்கவில்லை. அதனால் உன்னால் அவனுடைய எண்ணத்தை புரிந்து கொள்ள முடியாது. நீ அவனது கடந்த காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டாய். இறந்த காலம் என்பது இறந்து போன காலமே. அதனால் என்ன பயன்? எதிர்காலத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். அதை நிகழ்காலத்தில் உருவாக்க வேண்டும். தன் பாவச் சுமையான இறந்த காலத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற தவிப்புதான், அவனுக்கு இப்போது விடுதலையை தேடித் தந்திருக்கிறது’ என்றார்.

ரஜினியின் ‘2.0’வில் இணைந்த பிரிட்டன் பாடகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

லைகா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த வருட தீபாவளி தினத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த படத்தின் ரொமான்ஸ் பாடல் ஒன்றை பிரிட்டன் பாடகர் அர்ஜூன் குமாரசாமி அவர்களை பாட வைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த தகவல் ‘2.0’ படத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் வரும் 20-ம் திகதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் : சாய் பல்லவி

வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்து இருப்பவர் சாய்பல்லவி. கோத்தகிரியில் பிறந்த தமிழ் பெண்ணான இவர் படிப்பை முடிக்க ஒரு வருடம் இருந்தபோது ‘பிரேமம்’ மலையாள படத்தில் பொழுதுபோக்குக்காக நடித்தார். இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவர் நடித்த ‘மலர் டீச்சர்’ பாத்திரம் பிரபலமாகி, அனைவராலும் பேசப்பட்டது.

மீதம் இருந்த ஒரு வருட படிப்பை முடிப்பதற்கு முன்பே ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. என்றாலும் படிப்பை முடித்தார். அதன்பிறகு ‘களி’ என்ற மலையாள படத்திலும் ‘பிந்தா’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் தமிழ் படத்தில் நடிக்க அவரை யாரும் அழைக்கவில்லையாம். இதுபற்றி கூறியுள்ள சாய்பல்லவி….

“தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் அழைக்கவில்லை. நடிக்க வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன். அப்படி நடிக்கமாட்டேன் என்று சொல்லக்கூடாது. பாத்திரத்துக்கு தேவை என்றால் அதற்கு ஏற்ப நடிப்பதில் தவறு இல்லை. திணிக்கப்பட்ட காட்சி என்றால் அதில் நடிக்க மாட்டேன். தமிழில் நல்ல கதையையும், பாத்திரத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கணவன், மகன் முன் மார்பகத்தை காட்டிய தாய். இதுதான் விழிப்புணர்ச்சியாம்

பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது ஒருவருடமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காகவே ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாய்ப்பால் வாரம் என்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு தாய், படுக்கையில் படுத்து கொண்டே தனது நான்கு வயது மகனுக்கு தாய்ப்பால் கொடுப்பது போலவும், அருகில் அவரது கணவர் தூங்குவது போலவும் உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

கணவன், மகன் மற்றும் தனது மார்பகம் இந்த புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது அருவருப்பான விஷயம் இல்லை என்றும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை உலகிற்கு ஏற்படுத்தவே இந்த புகைப்படத்தை பதிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பிறந்த நாளில் ‘பிகினி’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய இலியானா

தெலுங்கில் இருந்து இந்தி பட உலகுக்கு சென்றவர் இலியானா. இவர் தமிழில் ‘கேடி’, ‘நண்பன்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இலியானா தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் தனது காதலன் ஆன்ட்ரூ நிபோனுடன் சென்று பிறந்தநாளை ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்தார்.

ஒரு நீச்சல் குளத்தில் ‘பிகினி’ உடை அணிந்து நீந்தி மகிழ்ந்த இலியானா, அதனை தனது காதலரை வைத்து வீடியோ படமாக்கி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மிகவும் கவர்ச்சியாக உள்ள இந்த வீடியோ இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் ‘என் பிறந்தநாள் அன்று நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன் என்பதை காண்பிக்க இந்த வீடியோவை ஆன்ட்ரூ நிபோன் எடுத்தார். உங்களுடைய அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கதவை மூடிக்கொண்டு கண்ணீர் விட்ட கமல்- பிறந்தநாளில் உருக்கமான பதில்

கமல்ஹாசன் மிகவும் தைரியமானவர். ஆனால், ஒரு சில நாட்களாக அவரை சுற்றி கஷ்டங்களே இருந்து வருகின்றது.

ஏற்கனவே காலில் அடிப்பட்டது போதது என்று கௌதமியின் பிரிவு, மனதிலும் வலியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் கமல் தன் பிறந்தநாள் அன்று கொடுத்துள்ள பேட்டியில் ’கால் மிகவும் வலியாக இருக்கின்றது.

அதனால் தான் பிறந்தநாளின் போது கூட ரசிகர்களை சந்திக்கவில்லை, இப்படியே இருக்க மனதிற்கு கஷ்டமாக உள்ளது, விரைவில் எழுந்து நடக்கவுள்ளேன்’ என கூறியுள்ளார்.

மேலும், இது தான் உங்கள் சோகமான பிறந்தநாளா? என கேட்க ‘இல்லை, என் 16 வயதில் எந்த குறிக்கோளும் இல்லாம் இருந்தேன்.

அப்போது என் தந்தை என்னை அழைத்து கடுமையாக திட்டினார், அப்போது கதவை மூடிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதேன், அதுதான் என் சோகமான பிறந்தநாள் என தெரிவித்தார்.

மயிரிழையில் உயிர் தப்பும் சிறுமியின் திக் திக் நிமிடம்!

ஒருவருடைய மரணம் எப்போது எப்படி வரும் என்று எவராலும் அவ்வளவு இலகுவாக கூறிவிட முடியாது. அப்படியிருக்கையில் மரணத்தின் விழிம்புக்கு சென்று மீண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இதே போன்றே சிறுமி ஒருவர் வீதியில் தனியாக நடந்து சென்றுள்ளார். எப்போதுமே அவ் வீதியால் செல்பவர்கள் அனைவரும் மிகவும் பிஸியாகவே இருப்பார்கள். இதனால் அச் சிறுமி தனியாக செல்வதை எவரும் கண்டிருக்கவும் இல்லை, பெரிதுபடுத்தவும் இல்லை.

இப்படியிருக்கையில் அச் சிறுமி தவறி தரையில் விழுந்துள்ளார். இதன்போது அவ் வீதியால் வந்துகொண்டிருந்த கார் ஒன்று சிறுமிக்கு மேலாக சென்றுள்ளது. எனினும் கார் செல்லும் வரை சிறுமி எழாது இருந்தமையால் உயிர் பிழைத்துள்ளது.

இருந்தா கூப்பிடுங்க, இளையதளபதியின் நடிகை தீவிர ஆசை!

இளையதளபதி விஜய் இன்று சினிமாவின் உச்சத்தில் இருப்பவர். ஆனால் இவர் மீது சில வதந்திகள் வரத்தான் செய்கின்றன.

இவருடன் நடிக்க வேண்டும், இவரை பார்க்க வேண்டும் என்பது பலரின் ஆசை. 2008 இல் இவரோடு குருவி படத்தில் டன்டான டர்னா பாடலில் நாடன் மாடியவர் மாளவிகா.

இன்னும் சொல்லப்போனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நடிகையாகவும், கேமியோ ரோலிலும், நடனத்திலும் திறமை காட்டியவர்.

கானா உலகநாதன் பாடிய வால மீனு பாடலில் நடனமாடியவர். 2009 க்கு பிறகு திருமணம், குடும்பம் , குழந்தைகள் என இருந்தவர் சினிமாவை விட்டு தள்ளியிருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவிற்கு வர முயற்சி எடுத்துவருகிறார். ஹீரோயினாக அல்ல, அக்கா,அண்ணி, வில்லி கேரக்டர் இருந்தா கூப்பிடுங்க என்று தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளாராம்.

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருக்கு பிடிச்ச மாதிரி கேரக்ட்டரு அமையுமா?

இந்தியாவில் காலடி பதிக்கும் ஆப்பிள்: காரணம் இதுதான்!

ஆப்பிள் ஆனது கணணி மற்றும் மொபைல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது.

இந் நிறுவனமானது தனது உற்பத்திப் பொருட்களின் துணைச் சாதனங்களில் அனேகமானவற்றினை சீனாவில் வைத்தே தயார் செய்கின்றது.

இதற்கு காரணம் உற்பத்தி செலவு குறைவென்பதாகும்.

இந் நிறுவனத்தின் சாதனங்களை விற்பனை செய்வதற்கு மிகப் பெரிய சந்தையாக இந்தியாவும் காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு தற்போது ஐபோன் மற்றும் ஐபேட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு தயாராகிவருகின்றது.

இம் முயற்சியினை கடந்த மூன்று வருடங்களுகளாக ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

எனினும் இதற்கு இந்தியாவின் 30 சதவீத பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

இதற்கான தகுதியை தற்போதுதான் அந் நிறுவனம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்திய அரசுடன் ஒப்பந்தத்தினை மேற்கொள்ள தயாராகிவருகின்றது.

இம் முயற்சியின் காரணமாக ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் வசதி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மனைவியின் சோகத்திற்கு இது தான் காரணமா?…

பெண்கள் மற்றும் ஆண்களின் மனநிலைகள் முற்றிலும் வேறுபட்டது. பொதுவாக வாழ்க்கையில் ஆண்கள் தங்களை சுற்றி இருப்பவர்களை மட்டும் யோசிப்பார்கள். ஆனால் பெண்கள் அவர்களை பற்றியும், அவர்களை சுற்றி இருப்பவர்களை பற்றியும் யோசிப்பார்கள்.

ஒருசில நேரங்களில் பெண்கள் மிகவும் சோகமாக இருப்பார்கள். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று ஒருசில ஆண்களால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை.

பெண்களின் சோகத்திற்கான காரணங்கள்

* அச்சம், சந்தோஷம், மகிழ்ச்சி, காதல், போன்ற பலதரப்பட்ட அனைத்து உணர்சிகளையும் பெண்கள் அவர்களின் மனதில் அதிகளவில் வைத்துக் கொள்வதால், மன அழுத்தம் அதிகரித்து, சோக நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

* அன்றாடம் பெண்கள் அதிக வேலை செய்வதன் மூலம் ஏற்படும் பல பிரச்சனைகள் காரணமாக உடல் அளவிலும், மனதளவிலும் அதிகமாக சோர்வடைந்து சோகமாக இருக்கிறார்கள்.

* பெண்கள் தன் குடும்ப பொறுப்புகளான குழந்தை வளர்ப்பு, அலுவலக வேலை, சமையல், அறிவுரை கூறுவது, வீட்டு நிர்வாகம், வீட்டு வேலைகள் என்று அதிகமான பொறுப்புகளை கவனிப்பதால், சுமைகள் அதிகமாகி மகிழ்ச்சியை இழந்து சோகத்தில் மூழ்கிறார்கள்.

* ஒரு பெண்ணின் வாழ்வில் அவளுக்கு பிடித்த வேலை, கணவனின் அன்பு மற்றும் அரவணைப்பு, பிள்ளை, வீடு, சொந்தங்கள் என்று இவற்றில் ஏதாவது ஒரு தனக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும் போது சோகமாக இருப்பார்கள்.

* ஒரு பெண் தன்னுடைய கணவன், பிள்ளைகள், உறவுகள், வீடு என்று அனைவருக்கும் தேவையான நேரத்தை செலவழித்துவிட்டு தனக்கான நேரத்தை இழக்கும் போது அவள் தன் சந்தோஷத்தை இழக்க நேரிடுகிறது.

* சில சமயங்களில் ஒருசில விஷயங்களுக்கு எதற்கு முதலில் முன்னுரிமை கொடுப்பது என்று தெரியாமல் குழம்பும் தருணங்களில் பெண்கள் தங்களின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.

* தோல்விகள் ஏற்படும் போது, அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் தோல்விகள் ஏற்படும் சில நேரங்களில் தன்னுடைய மகிழ்ச்சியை தொலைத்து விடுகிறார்கள்.