படுக்கையில் இதை செய்யும் பெண்களுக்கு பயங்கர ஆபத்தாம்..

தற்போதைய விஞ்ஞான உலகில் செல்போன் என்பது நமது உடல் உறுப்புகளில் ஒன்றாகிவிட்டது. படுக்கும்போதும் செல்போனை பக்கத்தில் வைத்து படுப்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஒரு பழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் படுக்கையில் வெகுநேரம் படுத்துக்கொண்டே செல்போனை நோண்டுவது, தூங்கும்போது அருகில் செல்போன் வைத்திருப்பது ஆகியவை உடல்நலத்திற்கு பயங்கர தீங்கானது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

குறிப்பாக பெண்கள் அதிலும் குறிப்பாக கருவுற்ற பெண்கள் படுக்கையில் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பெண்கள் செல்போனால் தங்கள்து தூக்கத்தை இழப்பதாகவும் இதன் காரணமாக பல புதுப்புது வியாதிகள் அவர்களுக்கு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இரவு தண்ணி அடிச்சதால காலைல தலை வலிக்குதா? அப்ப இதை குடியுங்கள்

இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு அருமருந்து இளநீர். இந்த இளநீரை தினமும் குடித்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகள் தானாக மறைந்துவிடும்

1. இரவு அதிகமாக குடித்துவிட்டு காலையில் தலைவலித்தால் உடனே ஒரு இளநீர் குடியுங்கள். தலைவலி தானாக மறைந்துவிடும்

2. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினசரி இளநீர் குடித்தால் குணமாகிவிடும்

3.சிறுநீர் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்றவற்றுக்கு இளநீர் நல்ல அருமருந்து

4. ஜீரண சக்தி பெருகும். எவ்வளவு கடினமான உணவு சாப்பிட்டாலும் ஒரே ஒரு இளநீர் குடித்தால் ஜீரணம் ஆவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

5. உடல் சூட்டை உடனே நீக்கும்.

வித்யா பாலியல் வல்லுறவு கொலை வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன் விசாரணை

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கின் 9 சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடித்து யாழ் மேல் நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்று தொடக்கம் ஒன்பது வரையிலான சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என சட்டமா அதிபரின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்து அரச சட்டவாதி நாகரட்னம் நிசாந்தன் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் விளக்கமறியலை நீடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. விளக்கமறியல் நீடிக்கப்படக் கூடாது என விண்ணப்பம் செய்தனர்.

சந்தேக நபர்கள் கடந்த 18 மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார்கள். எனவே அவர்களுக்கு மன்று பிணை வழங்க வேண்டும் என்று சந்தேக நபர்கள் தர்பபு சட்டத்தரணிகள் கோரினர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மணிவண்ணன், இந்த மாணவியின் மரணம் யாழ்ப்பாணத்தைக் கலவர பூமியாக்கியது. நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்;டது இவர்களைப் பிணையில் விட்டால் மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பலைகள் ஏற்படும் என தெரிவித்து பிணை வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

அரச சட்டவாதி நிசாந்தன் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகள் முற்றுப்பெற்றதும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்து, சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்கக் கூடாது என கடும் ஆட்சேபணை தெரிவித்தார்.

முத்தரப்புக்களின் சட்டத்தரணிகளினது விண்ணப்பம் மற்றும் ஆட்சேபணைகளை செவிமடுத்த நீதிபதி இளஞ்செழியன் பள்ளி மாணவி ஒருவர் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த வழக்கு பாரதூரமானது என தெரிவித்து, சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து உத்தரவிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

சந்தேக நபர்கள் 18 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது, கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்று. இருப்பினும் இது ஒரு பாரதூரமான வழக்கு. பள்ளி மாணவி குழு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு. எனவே, இது சம்பந்தப்பட்ட விசாரணைக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடியவடையவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

வழக்கொன்றில் விசாரணைகள் முடியவில்லை என தெரிவித்து, சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் தகுந்த காரணங்களை முன்வைத்து விண்ணப்பம்; செய்தால், அந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்து கட்டளை பிறப்பிக்க வேண்டும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.

எனவே, இந்த வழக்கில் மிக விரைவாக வழக்கு விசாரணைகளை முடிவுறுத்தி, சட்டமா அதிபருடன் கலந்துரையாடல் செய்து விரைவாக குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு அரச சட்டவாதிக்கு மன்று பணிக்கின்றது.

சந்தேக நபர்களுடைய பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் 08.02.2017 வரை மேலும் 3 மாதங்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்படுகின்றது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.

பிணை மனு மீதான யாழ் மேல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஊர்காவற்றுறை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் எதிரிக் கூண்டில் நின்ற 4 ஆவது சந்தேக நபர், ஒரு குற்றமும் செய்யாமல் தன்னைத் 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உரத்த குரலில் தெரிவித்தார்.

அந்த சந்தேக நபரைக் கடுமையாக எச்சரிக்கை செய்த நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்ற வழக்கை அவமதிக்கும் வகையில் மன்றில் குரலை உயர்த்திப் பேசுவது சிறைத்தண்டனைக்குரிய நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். அத்தகைய குற்றத்திற்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கடும் தொனியில் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கின் அடுத்த தவணை தினமாகிய 08.02.2017 ஆம் திகதி சந்தேக நபர்களை மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாயை காப்பாற்ற உடலை விற்கும் இளம்பெண்

சீனாவின் காசோயூ நகரில் வசித்து வருபவர் சாயோ மென்கையான். இவரின் தாய் தோல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரை காப்பாற்ற இளம்பெண் இணையதளத்தில் அறிவித்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் 45 வயதான எனது தாய் தோல் புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றார். அவரின் நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. ஆனால் வறுமையின் காரணமாக எங்களிடம் போதிய பணம் இல்லை. எனது வீட்டில் 5 குழந்தைகள் உள்ளனர். அதில் நான் தான் மூத்தவள் என்பதால் அனைவரையும் பார்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக என்னிடம் தேவையான பணம் இல்லை. வேலைக்கு சென்றாலும் கூட என்னால் இந்த தொகையை ஈட்ட முடியாது. அதனால் என்னுடைய உடலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்-

இந்த பதிவினை பார்த்த சிலர் பண உதவி செய்துள்ளனர். மேலும் பிரபல தொழிலதிபர் ஒருவர் அனைத்து செலவுகளையும் நானே ஏற்று கொள்கிறேன் என பதில் பதிவினை வெளியிட்டுள்ளார்.

எமது உடலைப் பற்றி எமக்கு தெரியாத சில உண்மைகள்!!!

எமது உடலைப் பற்றி எமக்கு தெரியாத சில உண்மைகள் இருக்கின்றது. அவற்றில் சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளுவோம்.

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்திகரிக்கப்படுகின்றது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லீட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லீட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

 

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியாக ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது. நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும். நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடி தான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

மனித உடலில் உள்ள கல்லீரலானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,

  • கண்கள் 31 நிமிடங்கள்
  • மூளை 10 நிமிடங்கள்
  • கால்கள் 4 மணி நேரம்
  • தசைகள் 5 நாட்கள்
  • இதயம் சில நிமிடங்கள்

ட்ரம்ப் வெற்றி பெற்றது நல்ல விடயம்! காரணம்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்  டொனல்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது நல்ல விடயம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

டொனல்ட் ட்ரம்ப் தேசியத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்தார். உலக சமாதானத்திற்கு  அவரின் வெற்றி சிறந்ததாக அமையும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய தலைமைத்துவம் ஏனைய நாடுகளின் விடயத்தில் தலையிடாமல் இருந்தால் நல்லது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும்.
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை

கருணா காதலி விவகாரம் வெளியே செல்ல முடியாதாம்

மட்டக்களப்பில் உள்ள தனது இல்லத்தின் ஒரு பகுதியில் பாலியல் தொழில் நடாத்தியமை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேரைருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் குறித்த நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு –திருமலை வீதியில் உள்ள முன்னாள் முதல்வரின் வீட்டின் ஒரு பகுதியில் நடாத்தப்பட்டுவரும் விடுதியில் இருந்து முதல்வர் மற்றும் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஐந்து பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

லட்சுமி குபேர விரதம் இருப்பது எப்படி?

அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள (அஷ்டமி, நவமி இல்லாத) ஒரு வெள்ளிக்கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். விரதம் கடைப்பிடிக்கும் தினத்துக்கு முதல் நாளே சில பூஜை பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்தரம் இப்படி லட்சுமி குபேரன் சம்மந்தமாக இருக்கின்ற அனைத்தையும் எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதான்யம், தலைவாழை இலை இதெல்லாம் முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்றைக்கு காலையிலே எழுந்து குளிச்சிட்டு, சுத்தமான உடை அணிந்து நெத்திக்கு பொட்டு வெச்சுக்கிட்டு தயாராக வேண்டும்.

நல்ல நேத்துல லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் இதை எல்லாம் எடுத்து மஞ்சள், குங்குமம் வெச்சு பூஜையில் வையுங்கள். குபேரன் யந்தரம், படம் மட்டும் இருந்தா வடக்கு திசையிலே வைக்க வேண்டும். படத்துக்கு முன்னால், தலைவாழை இலையை வைத்து அதுமேல் நவதானியத்தையும் ஒண்ணாக் கலக்காம சுத்திவர பரப்பி வைங்க. அதுக்கு நடுவுல ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதுல கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு வைக்க வேண்டும்.

செம்பு மேல மஞ்சள் பூசின ஒரு தேங்காயை வைத்து, சுற்றிலும் மாவிலையை சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும்.  வெற்றிலை, பாக்கு, பழம், இதோட தட்சணை எல்லாத்தையும் கலசத்துக்கு முன்னால வைத்தல் வேண்டும். கொஞ்சம் மஞ்சள் தூள் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடிச்சு, வாழை இலையின் வலப்பக்கம் வைத்து குங்குமப் பொட்டு வைக்க வேண்டும்.

படம், யந்தரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றிற்கு பூக்களை போட்டு ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்திரம் ஸ்லோகங்களைக் கூறவும். பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனை பற்றிய ஸ்லோகம், மந்திரம், துதி ஆகியவற்றைக் கூறவும். எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்.

மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும். பின்பு தூப தீபம் காட்டி வாழைப்பழம், பசும்பால் (சர்க்கரை போட்டுக் காய்ச்சியது) பாயசம் என்று முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும், தட்சணையை ஏழைகளுக்கு கொடுக்கவும்.

நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும் நிலையான சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா…! என்று குபேரனை மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டு வேண்டிக் கொள்ள வேண்டும். உங்க வாழ்க்கையில் குறுக்கிடக் கூடிய இன்னல்கள், தடைகள் எல்லாவற்றையும் நீக்கி, வளமும் நலமும் உங்களை வந்தடைய குபேரன் நிச்சயம் அருள் புரிவார்.

இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கடைப் பிடிக்கலாம். லட்சுமி குபேர விரதம் இருந்தால் உங்களுடைய லட்சியம் எல்லாம் ஈடேறும்.

தொப்பைக்கான காரணம்? குறைக்க என்ன செய்யலாம்

இன்றைய காலத்தில் மக்களை ஆட்டிப்படைக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடற்பருமன்.

உடல் பருமனாக இருந்தாலே நோய்கள் தானாக வந்து ஒட்டிக் கொள்ளம், குறிப்பாக இருதய நோயின் ஆபத்துகள் அதிகம்.

இதற்கான காரணங்கள் என்னவென்றால்,

  • பலர் அவர்கள் அறியாமலேயே நிறைய சர்க்கரையினை உணவில் எடுத்துக் கொள்கின்றனர். கேக்குகள், மிட்டாய்கள், சோடா, பானம் என அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது ஃப்ரக்டோஸ் பிரிவு அதிகம் உடலில் சேருகின்றது. 25 சதவீத வயிற்றுப் பருமன் உடையோர் இதன் காரணத்தினாலே இத்தகைய பாதிப்பினை அடைகின்றனர்.
  • அது மட்டுமில்லாமல் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் ஆல்கஹால் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆரோக்கியம் கெடுவதுடன் கல்லீரல் பாதிப்படைவது தான் மிச்சம்.
  • எப்போதும் எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரும்.
  • சுறுசுறுப்பாக இல்லாது பல மணி நேரம் உட்கார்ந்தே நாளை கடத்துபவர்களுக்கும் தொப்பை ஏற்படும்.
  • புரத உணவு குறையும் பொழுது அல்லது புரத உணவு அதிகம் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் பருத்த வயிறு ஏற்படும். குறைந்த புரதம் அதிக பசியினை ஏற்படுத்தும், இதன் காரணமாகவே அதிக உணவு உட்கொள்ளுதலும், வயிறு பருத்தலும் ஏற்படும்.
  • மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்டிரஜன் ஹார்மோன் அளவு குறையும் காரணத்தினால் தொடை, இடுப்பு பகுதிகளில் சேரும் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேர ஆரம்பித்து விடுகின்றது. சிலருக்கு இது பரம்பரை காரணமாகவும் இருக்கலாம்.
  • நமது குடலில் நூறு வகையான பாக்டீரியாக்கள் இருக்கும். பல நமக்கு நன்மை பயக்கும். பல நமக்கு தீமை பயக்கும். இவற்றின் சமநிலை மாறும் பொழுது தீய பாக்டீரியாக்களால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நீரிழிவு, இருதய, புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் கூடும்.

அது சரி இப்படி பெருத்த வயிற்றினை குறைப்பது எப்படி

  • நார்சத்து உணவினை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
  • மது பழக்கம் வேண்டாமே.
  • புரதம் நிறைந்த உணவு அவசியம்.
  • மனஉளைச்சலை தவிருங்கள்.
  • அதிக சர்க்கரை உணவுகள், இனிப்புகளை சாப்பிடாதீர்கள்.
  • ஏரோபிக் வகையான உடற்பயிற்சியும், யோகாவும் வயிறு பருமன் குறைய வெகுவாய் உதவுகின்றது.
  • மைதா, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி இவைகளை அடியோடு தவிருங்கள்.
  • சிறிதளவு தேங்காய் எண்ணையினை உங்கள் சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள். 30 மி.லி. வரை எடுத்துக் கொள்ளுங்கள். இது கொழுப்பினை வேகமாய் கரைக்கின்றது.
  • ஆனால் மற்ற கொழுப்பு எண்ணைகளை இதனோடு சேர்த்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் தேங்காய் எண்ணையே அதிக கலோரி சத்து கொண்டது.

முதல் மனைவியோடு சேர்ந்து இரண்டாவது மனைவியின் குழந்தையை விற்ற கணவன்!

கோவில் பிரகாரத்தை சுற்றிய பிறகு தான் கருவறைக்கு செல்ல வேண்டுமா?

தெய்வத்தை வணங்கிய பிறகு, பிரகாரத்தைச் சுற்றுவது தான் நடைமுறையில் பழக்கமாக இருக்கிறது. ஆனால், பிரகாரத்தை சுற்றிய பிறகு தான் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்பதே நிஜமான நியதி.

ஏனெனில், பிரகாரங்களைச் சுற்றி வரும் போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கருவறையில் சென்று தெய்வத்தை வணங்க வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருக்கும்.

இதன் தத்துவம் என்ன?

இந்த உலகில் எங்கே சுற்றினாலும் சரி… இறுதியில், நீ அடையப்போவது தெய்வத்தின் சன்னதியை என்பதையே குறிக்கிறது.

வடக்கே தலை வைத்து படுத்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்படுமா?

பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது.

வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.

அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது.

மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது.

மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது.

அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள்.

வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.

ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார்.

அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.

குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது.

மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள்.

அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது.இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள்.

வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என சொல்வதுண்டு.

தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்.

திண்டுக்கல் லியோனி கார் விபத்து

பட்டிமன்ற நடுவரும் திமுக திண்டுக்கல் தலைமை பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரபல பட்டிமன்ற நடுவரான திண்டுக்கல் லியோனி திண்டுக்கல்லில் உள்ள நாகல் நகருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

அப்போது முன்னாள் சென்ற லொறி மோதி லியோனின் கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லியோனிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிகிறது.

450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட அமெரிக்க முடிவு – அதிர்ச்சியில் உலக மக்கள் – நீரில் மூழ்குமா உலகம்?

அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அதிர்ச்சி விடயம் ஒன்றும் தற்போது பயங்கரமாக பரவத் தொடங்கியுள்ளது.

அதாவது உலகம் அதி பயங்கரமான அழிவைச் சந்தித்திடுமா என்ற கேள்வியே அது. இதற்கு முக்கிய காரணம் உண்டு 2016 நடக்கப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சுமார் 450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டு கூறியமையால் தான்.

உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கின்றது.

நாஸ்டிராடமஸின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.

அதே போன்று மோடி இந்தியாவின் பிரதமராவார் என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு வகையாக கருத்துகள் ஊடகங்கள் மூலம் வெளிவந்தன. இது ஆச்சரியமான உண்மை.

தற்போது ஒபாமாவே கடைசி எனவும் நாஸ்டிராடமஸின் கணித்து கூறியுள்ளார். இவரின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளதாகும்.

 

அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார். 2013ல் ஒபாமா மீண்டும் வெல்வார் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அது அப்படியே நடந்து விட்டது.

அதன் பின்னர் அமரிக்காவின் கடைசி அதிபர் தொடர்பில் ஒபாமா எனவும் கூறியுள்ளார். அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா? அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் அவரின் கணிப்பு கூறவில்லை.

ஆனாலும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என 450 வருடங்களுக்கு முன்னர் கணித்து கூறப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வகையில் 2016 பற்றி அவர் கணித்துள்ள பயங்கரமான விடயங்கள்,

2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும். இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்கும். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும்.

ஏற்கனவே பல நாடுகளில் பெருவெள்ளம் அலைக்கழித்ததைப் பார்க்கும்போதும், எல் நினோ எபக்ட் என்று கூறப்படுவதைப் பார்க்கும்போதும் இந்தக் கணிப்பு பலிக்கலாமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

மேலும் 2016 இன் பின்னர் கோள்கள் வழக்கத்திற்கு விரோதமான முறையில் இடம் மாறுமாம். இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாமாம். ஆனால் அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டிரடாமஸ் சொல்லவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையும். வல்லரசு நாடுகளின் தலைமை மாறுபடும் அவை உலகை அழிக்க திட்டமிடும். ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் கூறியுள்ளார். ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி எனவும் 450 வருடங்களின் முன்பே நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.

அவர் கூறியதைப்போன்றே தற்போது அடுத்த உலக யுத்தம் பற்றியும் பேசப்பட்டு கொண்டு வருவதோடு பயங்கரவாதமும் உலகில் தலை தூக்கியுள்ளமை அவதானிக்க கூடிய ஒன்றே.

தற்போது அமெரிக்கா தேர்தலும் அவர் ஏற்கனவே கூறிய பல்வேறு விடயங்களும் பலித்துள்ளமையால் தற்போது உலக அழிவு கொள்கையும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பரவலாக வெளிவருகின்றது. தொடர்ச்சியாக அவர் கூறியவை நடந்து வருகின்ற காரணத்தினால் உலகம் பயங்கர அழிவை சந்தித்திடும் என்று மக்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த அச்ச நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2. தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.

மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்! ஆண்டுக்கு ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுகிறார்

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் களத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இவர் நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தவர்; அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்தவர் இன்று அமெரிக்காவின் அதிபராகி வெள்ளை மாளிகைக்கு குடியேற உள்ளார்.

ரியல் எஸ்டேட் டு அரசியல்!

டொனால்ட் ஜான் டிரம்ப்… இதுதான் ட்ரம்ப்-ன் முழுப் பெயர். 1946-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்த டிரம்ப்-க்கு இப்போது 69 வயது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம், டிரம்ப் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி.)

டொனால்ட் டிரம்ப், தனது தந்தையின் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்தவர். தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் பதினாரடி பாய்கிற மாதிரி அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மிகப் பெரிதாக வளர்த்தெடுத்தவர். இன்று அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்து வருகிறார் ட்ரம்ப்.

ஹில்லாரி vs டிரம்ப்!

ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அந்தக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். குடியரசு கட்சியில் மெகா கோடீஸ்வர தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. மெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட மூன்று அடிப்படை தகுதிகள் அவசியம். அந்த நாட்டின் சட்டபூர்வ குடிமகனாகப் பிறந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இவை அடிப்படை விதியாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக யாரும் அதிபர் வேட்பாளராக முடியாது.

சர்ச்சை மன்னன்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே அதிபராவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள வேட்பாளராக பேசப்பட்டவர் டொனால்ட் டிரம்ப். ஆனால், இவர் அவ்வப் போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கியவர்.

‘நான் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவேன். ஈரானுடன் அமெரிக்கா செய்துள்ள அணு ஒப்பந்தம் என்னும் பேரழிவை உடனடியாக ரத்து செய்வேன். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட சவுதி ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், நான் அமெரிக்க அதிபரான பிறகு சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவேன்’ என பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொஞ்சமும் தயங்காமலும் யோசிக்காமலும் தினமும் சொல்லி வந்தவர் ட்ரம்ப்.

இந்தியாவுக்கு எதிராக..!

இதுமட்டும் இல்லாமல் வேலைவாய்ப்பு பற்றிய பிரசாரம் அமெரிக்க மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை தெரிந்துகொண்ட டொனால்ட் டிரம்ப் அது பற்றியும் பேசி மாட்டிக் கொண்டார்.

“இந்தியா, சீனா, ஜப்பான், மெக்சிகோ போன்ற நாடுகள் அமெரிக்கர் களின் வேலை வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளன. இந்த வேலை வாய்ப்புகளை மீட்டு, அமெரிக்க மக்களுக்கு வழங்குவேன். மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எல்லைச் சுவர் எழுப்புவேன்’’ என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

காந்தியின் பொன்மொழி!

பல இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவந்த டிரம்ப், யாரோ கூறிய ஒரு வாசகத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் காந்தியின் பொன்மொழி என்று குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

‘முதலில் உன்னைப் புறக்கணிப்பார்கள். பிறகு உன்னைப் பார்த்து சிரிப்பார்கள். பின்னர் உன்னோடு சண்டையிடு வார்கள். கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ என்று காந்தியின் பொன்மொழி என்று தவறாக குறிப்பிட்டு பேசினார். யாரோ சொன்னதை எல்லாம் காந்தி சொன்னதாக டொனால்ட் டிரம்ப் உளறி வருகிறார் என இவரை கிண்டலடித்து, கேலி செய்து விட்டனர் நெட்டிசன்கள்.

சொந்தச் செலவில்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் தேர்தல் செலவுக்காகப் பெரும் தொகையைத் திரட்டி வந்தனர். இதில் தொழிலதிபர்கள் பலரும் பெரும் தொகையை நன்கொடையாக அளித்து வந்தனர். இந்த நிலையில், தமது சொந்தப் பணத்தையே தேர்தலில் செலவு செய்தவர்தான் டொனால்ட் டிரம்ப்.

நன்கொடை அளிப்பவர்கள், பிரதிபலனை எதிர்பார்ப்பார்கள். அதனால் சொந்த செலவிலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப். ஆண்டுக்கு ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுகிறேன். தேர்தலில் ரூ.6,500 கோடி செலவானாலும் அதற்கு தாம் தயார் என கூறியவர்தான் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க அதிபர்!

இந்த நிலையில் ஹில்லாரி கிளின்டனை விட அதிக வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார். ‘இந்தியா தட்டிப் பறித்துள்ள வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு மீண்டும் பெற்றுத் தருவேன்’ என்பது உள்பட அமெரிக்க குடிமகன்களுக்கு சாதகமான பல கருத்துக்களை தெரிவித்த டிரம்ப் ரியல் எஸ்டேட் ஜாம்பவனாக இருந்து, இப்போது அமெரிக்காவின் அதிபராகி வெள்ளை மாளிகையில் குடியேற உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓம் எனும் மந்திரத்தை சொல்வது ஏன்?

பாரத மக்களால் பக்தியுடன் உச்சரிக்கப்படும் மந்திரம் ஓம். இது, உச்சரிப்பவர்களின் மனதிற்கும், உடலுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலிலும் அமைதியை ஏற்படுத்துவதோடு, நன்மை தரும் மின்னலையும் உண்டாக்குகிறது. பெரும்பாலான மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் ஓம் என்ற ஒளியுடன் தான் தொடங்குகின்றன. மங்கள நிகழ்ச்சிகளும் ஓம் என்ற ஒலியுடனே தொடங்கப்படுகின்றன.

ஒருவரை வரவேற்கும் போது ஓம் என்றோ ஹரிஓம் என்றோ கூறி வரவேற்பது ஒரு காலத்தில் நம் நாட்டில் வழக்கிலிருந்தது. தியானம் செய்யும்பொழுது ஓம் எனும் மந்திரமே மனதுக்குள் உச்சரிக்கப்படுகிறது. ஓம் எனும் எழுத்து வடிவமும் பக்தியுடன் வணங்கப்படுகிறது. ஓம் – ஒரு மங்களச் சின்னமாகப் போற்றப்படுகிறது. ஓம் என்பது இறைவனின் பொதுப் பெயர்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் ரிக், யஜுர் மற்றும் சாம என்ற மூன்று வேதங்களையும் பூ, புவஹ, சுவஹ என்ற மூன்று உலகங்களையும் குறிக்கின்றன. இறைவன் இவை அனைத்துமாக, இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாக விளங்குகிறான். இறைவன் உருவமற்றவன்; குணங்களற்றவன். ஓம் எனும் மந்திரத்தை உச்சரிக்கையில் இரண்டு ஓம் ஒலிகளுக்கிடையில் நிலவும் நிசப்தம் இறைவனைக் குறிக்கிறது. ஓம் பிரணவம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதாவது, இறைவனின் மகிமையைக் குறிக்கும் ஒலி அல்லது ஒலி வடிவம்! வேதங்களின் சாரம் அனைத்தும் ஓம் என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளன. இறைவன் ஓம் அத: என்ற ஒலிகளை எழுப்பிய பிறகே சிருஷ்டியைத் தொடங்கினான் என்று கூறப்படுகிறது. எனவேதான் எந்த ஒரு வேலையைத் தொடங்குவதற்கு முன்பும் ஓம் என்று கூறுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஓம் என்று கூறும்பொழுது எழும் ஓசை ஒரு மணியின் ஓசை போல் எதிரொலிக்க வேண்டும்.

அந்த ஒலி மனதை அமைதியில் ஆழ்த்தி ஒருமுகப்படுத்துகிறது. மனம் இந்த நுட்பமான ஒலியால் மூழ்கடிக்கப்படுகிறது. ஞானத்தை நாடுபவர்கள் ஓம் எனும் மந்திரத்தின் ஆழ்ந்த கருத்தில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து முக்தியடைகின்றனர். ஓம் பலவிதமாக எழுதப்படுகிறது. பொதுவாக எங்கும் பயன்படுத்தும் வடிவம் விநாயகரைக் குறிக்கிறது.

ஓம் என்ற எழுத்தின் மேல் உள்ள வளைவு தலையையும், அடிப்பாகம் வயிறையும், பக்கத்தில் உள்ள வளைவு துதிக்கைகளையும் குறிக்கின்றன. புள்ளிடன் கூடி அரைவட்டம் விநாயகரின் கையையும் அதில் உள்ள மோதகத்தையும் குறிக்கிறது. இவ்வாறு ஓம் வாழ்க்கையின் லட்சியம். அதனை அடையும் வழி, படைக்கப்பட்ட உலகம், படைப்பின் பின்னே உள்ள பேருண்மை, புனிதமான மற்றும் உருவமுள்ளவை, உருவமற்றவை ஆகிய அனைத்தையும் குறிப்பதாக உள்ளது.

கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை நீங்கியது: நாளை படம் வெளியாகிறது

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை உலகமெங்கும் 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிவா வெளியிடுகிறார். இந்நிலையில், ‘லிங்கா’ படத்தை வெளியிட்டதில் தனக்கு கொடுக்கவேண்டிய பாக்கி தொகையை சிவா திருப்ப செலுத்தாததால் அவர் வெளியிடும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று  விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை திரையிட இடைக்கால தடை விதித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விசாரணையில் ரூ.35 லட்சத்தை வைப்பு நிதியாக நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தரப்பு செலுத்தினால் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடுமாறு நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வாங்கி வெளியிடும் சிவா, நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய தொகை செலுத்த ஒப்புதல் கொடுத்ததையடுத்து, ‘கடவுள் இருக்கான்’ குமாரு படத்திற்கான இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை 4 வாரத்துக்குள் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, திட்டமிட்டப்படி ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.ராஜேஷ் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ராம்ப்பின் வெள்ளை மாளிகைக்கான பயணம் உண்மையில் மகத்துவமானது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அரசாங்கத்துடன் மிக நெருங்கிச் செயற்பட எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.