அதிக கொலஸ்ட்ரால் உணவு சாப்பிட்டதும் இதெல்லாம் நீங்க பண்ணுங்க!!

எல்லா சமயங்களிலும் டயட் பற்றியே யோசிக்க முடியாது. அவ்வப்போது நமது நாக்கிற்கும் மதிப்பு அளிப்போம். என்றைக்காவது அப்படி சாப்பிடுவதல் தவறில்லை. கொழுப்புமிக்க மசாலா உணவும் சாப்பிட வேண்டும்.

அதே சமயம் உடல் எடையும் அதிகரிக்கக் கூடாது என்று நினைப்பவர்களுக்காக இந்த டிப்ஸ் . அவ்வாறு சாப்பிட்டதும் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென இந்த குறிப்புகள்.

இளஞ்சூடான நீர் :

எந்த ஒரு சமயத்தில் கொழுப்பு உணவு சாப்பிட்டதும் உடனே வெதுவெதுப்பான சூட்டில் நீரை குடித்தால் விரைவில் செரித்து அதிக கலோரியை எரிக்க உதவும்.

படுக்கைக்கு நோ :

வயிறு முட்ட சாப்பிட்டு உடனே தூங்கச் செல்வது பெருந்தவறு. அவ்வாறு செய்தால் கொழுப்பு எரிக்கப்படாமல் சேமித்தி வைக்கப்படும். இதனால் உடல் பருமனாகும்.

சில்லென்று குடிக்க கூடாது :

கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் குளிர்ந்த ஜூஸ் அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இதனால் வயிறு, கல்லீரல், சிறு குடல் பாதிப்படையும்.

10 நிமிட நடை :

நன்றாக சாப்பிட்டதும் காலாற ஒரு 10 நிமிடம் நடப்பது நீங்கள் உங்கள் இரைப்பைக்கு நீங்கள் செய்யும் பெரிய நன்மை. ஏனெனில் செரிப்பதற்கு நடை உதவும்.

மிளகு மற்றும் தேன் :

கொழுப்பு உணவு சாப்பிட்டதும் மிளகு சாப்பிடுவது நல்லது. இது கலோரி எரிப்பதை துரிதப்படுத்தும். மிளகை தேனோடு கலந்து சாப்பிடுவது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். கொழுப்புகளை கரைப்பதற்கு இவை உதவும்.

திரிபலா :

திரிபலா ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். எண்ணெய் உணவுகள் சாப்பிட்டபின் இதனை எடுத்துக் கொண்டால் குடல்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் திரிபலா பொடியை கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

முட்டை ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் ஒரு குழந்தை மிக ஆரோக்கியமக வளர முடியும்.

ஆனால் இன்று கிடைக்கும் பிராய்லர் முட்டைகள் கெடுதலை தரும். பல பக்க விளைவுகளை தரும். ஆகவே நாட்டு கோழி முட்டையை தெர்ந்தெடுத்து வாங்குங்கள்.

எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ள முட்டை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என பார்க்கலாம்.

முட்டையிலுள்ள சத்துக்கள் :
வேக வைத்த முட்டையில் அதிக புரதம் விட்டமின் ஏ, பி, டி, ஈ, கே மற்றும் இரும்பு, செலெனியம் போன்ற மிக முக்கியமான சத்துக்கள் கொண்டுள்ளது. இவை அனைத்து சத்துக்களும் புற்று நோயை நெருங்க விடாது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான வடிவம் :
சிறு வயதிலிருந்து முட்டை சாப்பிட்டு வந்தால் முழுமையான வளர்ச்சி பெற முடியும். எலும்புகள் பலப்பெறும். இதில் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் எலும்புகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆன்டி ஆக்ஸிடென்ட் :
வயதாவதற்கும் பல வியாதிகளுக்கும் முக்கிய காரணம் செல் பாதிப்படைவதுதான். செல்களை பாதிப்படையச் செய்வது ஃப்ரீ ரேடிகல்ஸ்தான். இந்த ஃப்ரீ ரேடிகல்ஸை முற்றிலும் முட்டை அழிக்கிறது.

எலும்பு நகம் பலம் பெற :
ஆரோக்கியமான கூந்தல் மற்றும் நகங்கள் வளர முட்டை உதவி புரிகிறது. அதே போல் ஆஸ்டியோஃபோரோஸிஸ் வருவதையும் தடுக்கிறது. ஆரோக்கியமன எலும்புகளை பெற முடியும். வயதான பின் வரும் எலும்பு தேய்மானம் தடுக்கப் பரும்

மூளையை வலுப்படுத்தும் :
அறிவை தூண்டும்படியாக மூளையை பலப்படுத்தும். அதனால்தான் பள்ளிகளில் தினம் ஒரு முட்டை வழங்கப்படுகிறது. மூளை வளர்ச்சிக்கும், உடலின் மற்ற பாகங்களுக்கு தகவல் பரிமாற்றம் அளிக்க தேவையான முக்கிய காரணி கொலைன் என்ற பி காம்ப்ளக்ஸ் விட்டமின். அது அதிகம் முட்டையில் உள்ளது.

கெட்ட கொழுப்பை குறைக்கும் :
முட்டையில் அதிக கொழுப்பு உள்ளது. அதனால் சாப்பிடக் கூடாது என பலரும் சொல்லிக் கேள்விப்படுவதுண்டு. ஆனால் முட்டையில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. அவையும் நல்ல கொழுப்பே. இது கெட்ட கொழுப்பை கரைத்து உடல் பருமனை குறைக்கும்.

 

உணவகங்களில் சாப்பிடுவோர் இதையும் கொஞ்சம் பாருங்கள்..!

ஓவர்டோஸ் செக்ஸ் மாத்திரை சாப்பிட்ட 70 வயது கிழவருக்கு என்ன ஆச்சு தெரியுமா?

செக்ஸ் உணர்வுகளை தூண்டும் வயாகரா உள்ளிட்ட மாத்திரைகளை பலர் உபயோகித்து வருகின்றனர். இதனால் இதய நோய் உள்ளிட்ட பல பக்கவிளைவுகள் வரும் என எச்சரித்த போதிலும் எச்சரிக்கையை மீறி உச்சகட்ட இன்பம் பெற பலர் இன்னும் வயாகராவை விடுவதில்லை.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள 70 வயது கிழவர் ஒருவர் செக்ஸ் ஆசையுடன் விலைமாது வீட்டிற்கு சென்றுள்ளார். உறவுக்கு முன்னர் அவர் ஓவர்டோஸ் மாத்திரகளை சாப்பிட்டாராம். சிறிது நேரத்தில் அந்த விலைமாது பெண் பதறியபடி வெளியே வந்து வயதான கிழவர் உறவின்போது திடீரென மயக்கமாகிவிட்டதாக தெரிவித்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அந்த நபரை கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜட்டியுடன் விமான நிலையத்துக்கு வந்த போதை மனிதன். அலறிய பெண்கள்

மனிதனுக்கு போதை ஏறிவிட்டால் என்ன நடக்கின்றது என்பது தெரியாமலே பலர் நடமாடுவார்கள். இந்நிலையில் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி என்ற நாட்டில் விமான நிலையத்திற்கு ஜட்டியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் மலாவி விமான நிலையம் பரபரப்புடன் இயங்கி வந்த நிலையில் ஒரு பயணி கையில் லக்கேஜ் உடன் வந்தார். அவரை பார்த்ததும் பெண் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். வெறும் ஜட்டியுடன் அவர் வந்ததே இதற்கு காரணம்.

பின்னர் அவரை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது கஞ்சா என்ற போதைப்பொருளை அவர் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த நபரை ஜட்டியுடன் புகைப்படம் எடுத்து நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.

டொனால்டு டிரம்பை அடித்து நொறுக்கிய பிரபல WWE வீரர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை பிரபல WWE வீரர் அடித்து நொறுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றதை அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2007ம் ஆண்டு பிரபல WWE வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினே டிரம்பை அடித்து நொறுக்கிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

குறித்த வீடியோவில், கடந்த 2007ம் ஆண்டு WWE Wrestlemania போட்டியில் டிரம்ப் ஆதரவு பெற்ற வீரர், WWE உரிமையாளர் வின்ஸ் மக்மஹோன் ஆதரவு பெற்ற வீரரை வீழ்த்தி வெற்றிப்பெற்றார்.

இருவருக்கும் இடையேயான போட்டிக்கு பிரபல WWE வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் நடுவராக திகழ்ந்தார்.

டிரம்ப் ஆதரவாளர் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து சவாலில் தோல்வியடைந்த WWE உரிமையாளர் வின்ஸ் மக்மஹோனுக்கு மொட்டையடிக்க டிரம்ப் மேடையில் நின்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஸ்டோன் கோல்ட், 80,000 பேர் டிரம்பிற்கு ஸ்டன்னர் போடுகிறார்.

இதில் நிலைகுலைந்த டிரம்ப் மேடையில் விழுந்து கிடக்கிறார். குறித்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

சிகரெட் பிரியர்களுக்கு பாடம் கற்பித்த ஹோட்டல் அதிபர்!… இப்படி இருந்தா புகைப்பிடிக்கும் பழக்கமே இருக்காது.

உடல் எடை குறைய கிரீன் டீயை எப்படி குடிக்க வேண்டும்

கிரீன் டீயை குடிப்பது இப்போது ஃபேஷனாகிவிட்டது. உடலுக்கு நல்லது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. உடல் எடை குறைக்கும். இளமையை நீட்டிக்கும் உடலுக்கு நல்லது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட், ஃப்ளேவினாய்டு இருக்கிறது. கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான் சற்றும் மாற்றுக் கருத்தில்லை.

drink green tea reduce weight

ஆனால் அதனை குடித்த பின்னும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று கவலைப்படுவதுண்டு. எப்படி குடிக்க வேண்டும் என்ற ட்ரிக்கை தெரிந்து கொண்டால் உடல் எடையை குறைக்கலாம். அதன் வெப்ப நிலை, வாசனைப் பொருட்கள் என பலவிஷயங்கள் அதன் சத்துக்களை பாதிக்கின்றது என தெரியுமா? அதனை எப்படி தெரிந்து கொள்ளலாமென படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது சாமந்தி, பெர்ரி டீ என பல வகை வாசனை பொருட்களை சேர்த்து கிரீன் டீ கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால் அந்த பொருட்கள் கிரீன் டீயிலுள்ள சத்துக்களை பாதிக்கும். சுத்தமான வேறு வாசனைகள் கலக்காத கிரீன் டீயே உடலுக்கு முழு சத்தையும் தரும்.

சிலருக்கு சூடாக குடிப்பதை விட கிரீன் டீயை தயார் செய்து சில்லென்று ஐஸ் கட்டி போட்டு குடிப்பார்கள். ஐஸ் கட்டி தேயிலையின் சத்துக்களை நீர்த்துப் போகச் செய்யும். வெதுவெதுப்பான நிலையில் கிரீட் டீயை குடிப்பதே உடலுக்கு நல்லதை தரும்.

தேயிலை தூள் எப்போது பாக்கெட் செய்யப்படுகிறது என்பது மிக முக்கியம். ஏனென்றால் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் 6 மாதத்திற்கு பின் அதன் சக்தியை இழந்துவிடும். ஆகவே பாக்கெட் தயாரிக்கப்பட்ட சில மாதங்களில் உபயோகித்துவிடுங்கள். அதன் பின் உபயோகித்தாலும் பயன் இருக்காது.

நிச்சயமாக .. 1 மி.லி கிரீன் டீ தூளில் 8-10 கப் அளவு தேநீர் தயார் செய்து குடிக்கலாம். டீ பேக்கை விட நேரடியாக தேயிலை தூளை நீரில் கொதிக்க விடுவதால் அதன் பலன் நிறைய கிடைக்கும்.

அதிலுள்ள கேடசின் என்ற பாலிஃபீனால் உடல் எடையை குறைக்கும். குடல்களில் படியும் கொழுப்பை கரைக்கும். புற்று நோயை தடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

அதோடு அதில் விட்டமின் பி, சி, காஃபைன், ஃபோலிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது. இவை ஆரோக்கியமான இளமையான சருமத்தை தருகிறது. மாலைக் கண் நோயை தடுக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. காஃபைன் சக்தியையும் புத்துணர்வையும் தருகிறது.

சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம்

விஜய் டிவி புகழ் சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில்  மீட்கப்பட்டுள்ளது. மதுரவாயலிலுள்ள அவரது வீட்டின் கதவு 3 நாட்களாக திறக்கப்படவில்லை என்றும்  துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விரைந்து சென்று சபர்ணாவின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.15053186_558406124357759_105994709_o_18461

ஏன் Zika Virus உலகில் உயிர்கொல்லியாக அஞ்சப்படுகிறது? ஒரு முக்கிய காணொளி ​

போபி சிம்ஹா , கீர்த்தி சுரேஸ் இணையும் பாம்புச் சட்டை – டீசர்

அக்காவிடம் சில்மிஷம் செய்த தம்பி, கடைசியில் முடிவை பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

தொடங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டிருந்தது. இப்படத்தை தொடர்ந்து 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்தடுத்து தயாரிக்கும் இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில், மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பூஜை ஏற்கெனவே நடந்திருந்தது. இந்நிலையில், இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். தொடங்கிய முதல் நாளே இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இப்படம் அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 25-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், பஹத் பாசில், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சினேகா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்!!!

விஜய் பற்றி யாருக்கும் தெரியாதா உண்மைகள்! சுவாரஸ்ய வீடியோ

உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்க எளிய வீட்டுக் குறிப்புகள்!

உதடு சிவந்திருந்தாலும் உதட்டை சுற்றிலும் சிலருக்கு கோடு போட்டது போல் கருப்பாக இருக்கும். அது உதட்டில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது கருத்துவிடும். பித்த உடம்பாக இருந்தாலும் உதடு கருக்கும். அல்லது அடிக்கடி நாவினால் உதட்டை ஈரப்படுத்தும்போதும் உதடு கருப்பாகும்.

மிகச் சிறந்த வழி அடிக்கடி நீங்கள் நீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் உதடு கருக்காமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் உதடு கருப்பாகிவிட்டால் என்ன செய்யலாம். கருத்த உதட்டை மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டு வர என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து உதட்டில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவவும். தினமும் இப்படி செய்து வாருங்கள். கருமை மறைந்து உதடு பளிச்சிடும்.

யோகார்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி கொண்டது. தினமும் யோகர்ட்டை உதட்டில் தடவி வாருங்கள். யோகார்ட் இல்லையென்றால் தயிர் தடவலாம். வேகமாக கருமையை மறையச் செய்யும்.

ஈரப்பதம் குறையும் போதும் உதட்டைச் சுற்றிலும் கருமை ஏற்படும். இதனை தவிர்க்க தினமும் வெண்ணெயை உதட்டில் தடவுங்கள். அது போல், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெயும் ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும். இதனால் கருமை நாளடைவில் மறையும்.

ரோஸ் வாட்டர் உதட்டில் ஏற்படும் கருமையை போக்க சிறந்தது. ரோஸ் வாட்டரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி இரவில் படுக்கச் செல்லுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருமை மறைந்து சிவப்பாகும்.

நிலம் விற்று கிடைத்த ரூ.55 லட்சமும் செல்லாத பணமா? அதிர்ச்சியில் பெண் தற்கொலை!

ரூ.500 மற்றும் 1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கேட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதிர்ச்சியில் தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள சனிகாபூரை சேர்ந்தவர் வினோதா(55). இவர் தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று 55 லட்சம் ரூபாயை ரொக்கமாக வைத்திருந்தார். பணம் அனைத்தும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் பண்டல்களாக இருந்தது. வினோதாவும் இவருடைய கணவரும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் பிரதமர் மோடி திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கவே வினோதா அதிர்ச்சிடையந்தார். பணம் முழுவதும் செல்லாமல் போய்விட்டதே என்று அலறினார். இதே கவலையில், பணத்தை மாற்றுவது எப்படி என்று யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால், இதில் பலனில்லை என்பதை அறிந்த வினோத அதிர்ச்சியில் இருந்து மீளாமலே தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசியபோது, இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் செலுத்தாமல் வீட்டில் வைத்திருந்தது தவறாக போய்விட்டது. இதனால் எனது மனைவியை இழந்து விட்டேன்.

மேலும், பணம் செல்லாமல் போய்விட்டதாக தொலைக்காட்சியில் பார்த்து மகன் கூறியதால் அதிர்ச்சியில் தனது மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் தெரிவித்தார். எனினும், வினோத வைத்திருந்த மொத்தப் பணத்தையும் அவரது 3 பிள்ளைகள் பங்கு கேட்டதால் வினோதா தற்கொலை செய்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞனின் மர்ம மரணம்! வீரவன்ச குடும்பத்தின் திக் திக் நிமிடங்கள்!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஹோகந்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் கடந்த 26ம் திகதியன்று இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் தேடிப்பார்த்தபோது, உயிரிழந்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகனான விபுதி விஷ்வஜித் வீரவன்சவுடன் நெருங்கிய தொடர்புடைய நண்பர் என்பது தெரியவந்தது.

விமல் வீரவன்சவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் குறித்த இளைஞர் கடந்த 25ம் திகதியும் அங்கு சென்றுள்ளதுடன், அன்றிரவு அங்கேயே தங்கியிருந்துள்ளார்.
எவ்வாறாயினும் மறுநாள் கண்விழிக்காத குறித்த இளைஞனை, வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்த போதும், ஏற்கனவே அந்த இளைஞர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஹோகந்தர தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த திசாநாயக்க முதியன்சலாகே லஹிரு ஜனித் திசாநாயக்க என்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இந்த மரணம் தொடர்பில் தனக்கும் தனது மகனுக்கும் எதிராக சில இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக அண்மையில் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

அத்துடன் மரணம் தொடர்பில் சில இணையத்தளங்கள் வெளியிடுகின்ற செய்திகளினால் தனது சிறுவர் உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி விமல் வீரவன்சவின் மகளான விமாஷா வி்ஷ்வாதரி தாயுடன் சென்று சிறுவர் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் விசாரணைகள் பெரும்பாலும் வீரவன்சவின் இன்னொரு முகத்தினை வெளி உலகத்திற்கு காட்டலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணதில் தமிழ் பெண் போலீசாரால் அதிரடி கைது !

பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் யாழ். புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

நேற்று காலை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், வவுனியாப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், அவர் நாட்டின் பல பாகங்களிலும் பலதரப்பட்ட பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை கைது செய்வதற்கு 38 பிடியாணை உத்தரவுகள் நீதிமன்றங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும். குறித்த பெண் நீண்ட நாட்களாக பொலிஸாரை ஏமாற்றி தப்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள குடும்பஸ்தர் ஒருவரிடம் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 10 இலட்சம் ரூபா பண மோசடிசெய்துள்ளதாகவும் குறித்த பெண் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பெண்ணை நேற்றைய தினம் யாழ். பிரதான புகையிரத நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்!

இன்று ஜூம்மா தொழுகையின் பின்னர் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது.

சர்வதேச அழுத்தங்களினால் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான புதிய குழு நியமிக்கப்படுவதற்கு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தை இலங்கை தவ்ஹீந் ஜமாத்தினரின் ஏற்பாடு செய்துள்ளனர். மத தலைவர்கள், அதிகளவான பெண்கள் உட்பட பொது மக்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் தலைமையில் 2009 ஆம் ஆண்டு ஒரு உப குழு நியமிக்கப்பட்டு, அதன் மூலம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவிற்கு பாதகமில்லாத வகையில் தற்கால தேவைகளுக்கு  மாற்றங்கள் செய்யவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதன் இறுதி அறிக்கை தற்போது வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.